Monday, January 10, 2011

கதை சொல்லி - ஷோபா சக்தி (Shoba Sakthi)



கதை சொல்லி - ஷோபா சக்தி (Shoba Sakthi)

லிவி



ஒரு புலம் பெயர்ந்தவனின் வாழ்வு இலக்கற்றுத் தொடங்கும். இருத்தலின் மீதான கேள்விகள் அடுக்கப்ப‌ட தன் தேடுதலின் திசை நோக்கி செல்லத் தொடங்குவான். வாழ்வின் மீதான தீராத தாகம் அவனை நகர்த்திக் கொண்டே இருக்கும். அவனிடம் நமக்குச் சொல்ல எண்ணற்ற கதைகள் இருக்கும். நாம் பார்த்திராத வாழ்வை, கண்டிராத மனிதர்களை, அறிந்திராத மன நிலையை, துயரத்தை, நேசத்தை, போலிக் கலாச்சாரத்தை அவன் சொல்லிக் கொண்டே செல்வான். தன் பால்ய காலத்து நினைவுகள், அன்பான உறவுகளை பிரிதலின் வலி, வேற்று தேசத்தில் ஒரு வேற்று கிரக‌ வாசியைப் போல் அவனிடம் கேட்கப்படும் மட்டமான கேள்விகள், தன் அக திணைக்குள் சற்றும் அடங்காத புறவெளி, அவன் கோராத இரக்கத்தை பிறர் அன்பின் பெயரால் காட்டுதல் இத்யாதிகளென அவன் மனம் சஞ்சலங்களால் நிர‌ம்பி இருக்கும். ஒரு கலைஞனின் மன நிலை அவற்றைத் தீவிரமாக எதிர்கொள்ளும். அவன் வாழ்வை முழுமையாக வாழத் தொடங்குவான். அவனிடம் இருந்தே மிகச் சிறந்த இலக்கியம் அவன் மொழிக்குச் சாத்தியமாகும். அப்படியொரு தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர் ஷோபா சக்தி.

தமிழ்ச் சூழலில் தன் அரசியல் நிலைப்பாடுகளால் மிகவும் வெறுக்கப்படும் மனிதராகவே இருக்கிறார் ஷோபாசக்தி. ஷோபா சக்தியின அரசியல் தவிர்த்து அவரின் படைப்பின் வெளி வேறு எந்த தமிழின் சம கால எழுத்தாளராலும் இணை செய்ய இயலாத‌து. புலம் பெயர்ந்தவனின் இலக்கியம் தமிழில் எழுதப்படும் வேற்று மொழி இலக்கியம் போல் அல்லாமல் அங்கு சஞ்சரிக்கும் தமிழ் மனமாக‌வே வெளிப்படுகிறது. அ. முத்துலிங்கம் அங்கதம் என்றால் ஷோபாசக்தி ரௌத்திரம். இந்தியத் தமிழ் மனம் ஷோபா சக்தி கதைகளில் வரும் வழக்காடல்களை விளங்கிக் கொள்ள இயலாமல் போகும் வாய்ப்புண்டு. " எம்.ஜி. ஆர் கொலை வழக்கு" சிறுகதையின் இறுதியல் வரும் வரிகளில் " எம். ஜி. ஆரும் புண்டையும்" என்னும் வரி தமிழகத்தில் பாவனையில் இல்லாதவை (திட்டும் நேரங்களைத் தவிர்த்து). ஆனால் ஈழத்தில் மிக சரளமாக ஒரு வார்த்தையோடு சேர்த்தப்படும் வார்த்தை அது.

தமிழில் இன்று எழுதப்படும் பெரும்பான்மையான புனைகதைகள் இல்லாத ஒரு உலகத்தை இல்லாத சொல்லாடல்களால் கட்டமைத்து மாய யதார்த்தவாதத் தொணியோடு சொல்வதாக மட்டுமே இருக்கிறது. உதாரணமாக 'அந்த நகரத்தில் எல்லோருமே தலை இல்லாமல் இருந்தார்கள்', 'அவன் வாயை திறக்க தவளை வெளியேறியது' ,'த‌மிழ் பெயர் கொண்ட மாந்தர்கள் உலாவும் சிறிதும் சம்பந்தம் இல்லாத இட வெளி', அல்லது 'காலத்திற்கும் பின்னே போய் வேட்டையாடப் புறப்பட்ட வெள்ளைக்காரனும் காட்டில் வ‌சிக்கும் ஆதிவாசிகளுமாகவே' இருக்கிறது. ஆனால் ஷோபா சக்தியின் புனைவு இயல்பாக நடந்து கொண்டிருக்கும் வாழ்வின் சம்பவங்களினூடே புனைவு கதைக்குள் வலுச் சேர்ப்பவை. அவரின் "குண்டு டயானா"சிறுகதை புனைவென்றாலும் அக்கதையை வாசகனால் எளிதில் மறந்து கடந்துவிட இயலாது. ஷோபா சக்தியின் 'தமிழ்' சிறுகதை பண்பாடென்றும் கலாச்சாரமென்றும் மேடைப் பேச்சாளர்கள் சொல்லிக் கொண்டு இருக்கும் போலி வியாக்கியானங்களை உடைத்தெறியும். ஈழ‌த்தில் ஒரு விபச்சாரிக்கு கொடுக்கப் படும் தண்டனையில் தொடங்கி பல்வேறு நாடுகளில் இருக்கும் விபச்சாரிகளுடனான அனுபவங்களென்று சுயசரித தன்மையோடு நீண்டு தமிழ் எழுத்துக்களை விபச்சாரி வீட்டில் கண்டு பதற்றமாக அழிப்பதுடன் கதை முடியும்.

பேருந்தில் மூச்சைப் பிடித்துக் கொண்டு நின்ற‌ நெரிச‌ல்க‌ளுக்கு ந‌டுவில் சிம்மாச‌ன‌மாக‌ ஒரு இருக்கை கிடைக்க‌ வாழ்வின் இனிமையையும் ப‌ர‌ம்பொருளின் க‌ருணையையும் விய‌ந்து கொண்டு ஷோபா ச‌க்தியின் க‌தை சொல்லிக்காக‌ சென்று கொண்டிருந்தேன்.ஷோபா ச‌க்தியின் சில‌ அர‌சிய‌ல் கருத்துக்க‌ளோடு ஒவ்வாமை இருப்பினும் அவ‌ரின் த‌னித்துவ‌மான‌ ப‌டைப்புல‌க‌ம் அவ‌ரை நோக்கி ஈர்க்க‌ச் செய்த‌து. இன்று தன் த‌லையைச் சுற்றி ஒளி வ‌ட்ட‌மும் முக‌த்தில் தேஜ‌ஸையும் உரையாடுகையில் மேத‌மையை காட்சிப் படுத்தும் எழுத்தாளர்கள் ம‌த்தியில் மிக‌ இய‌ல்பான‌ ம‌னித‌ராக தெரிந்தார் ஷோபா ச‌க்தி. ஷோபா சக்தி மிக‌ ந‌ன்கு அறிமுக‌மான‌வரைப் போல் ப‌ழ‌கினார். அறிமுக‌ங்க‌ளோடு த‌ரையில் அம‌ர்ந்து சாவகாசமாக க‌தைக்க‌த் தொட‌ங்கினோம். யுத்த‌ம், ஈழ‌ அர‌சிய‌ல், இல‌க்கிய‌மென‌ க‌தைத்துக் கொண்டே இருந்தோம். த‌லித் அர‌சிய‌லிலும் மிக‌ அதிக‌ ஈடுபாடுடைய‌வ‌ர் ஷோபாச‌க்தி. ஈழ‌ அர‌சிய‌லையும் யுத்த‌த்தையும் த‌ன் ஞாப‌க‌ங்க‌ள் தொட‌ங்கி எல்லாவ‌ற்றையும் சொல்லிக் கொண்டுவ‌ந்தார். "ம்" சொல்லிக்


more:

http://koodu.thamizhstudio.com/kadhaisolli_13.php



No comments:

Post a Comment