Sunday, January 9, 2011

நாஞ்சில் நாடன் : நம் மனசாட்சியின் குரல்



மாலை சூடிய சாஹித்ய அகாடெமி

இந்த வருடம் சாஹித்ய அகாடெமி விருது (2010) "சூடிய பூ சூடற்க" சிறுகதை தொகுப்பிற்காக எழுத்தாளர் திரு. நாஞ்சில் நாடன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எத்தரப்பும் ஆட்சேபிக்காத ஒரு நல்ல நேர்மையான படைப்பாளிக்கு இந்த வருட விருதைக் கொடுத்து வெற்றி மாலை சூடிக் கொண்டது சாஹித்ய அகாடெமி அமைப்பு. நாஞ்சில் நாடன் அவர்களை கவுரவிக்கும் பொருட்டு புகழ் பெற்ற எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன் பற்றி எழுதும் சிறப்புக் கட்டுரைகளை தமிழ் ஸ்டுடியோ.காம் வெளியிட்டு மகிழ்கிறது.

இரண்டாவது சிறப்புக் கட்டுரை திரு. பாவண்ணன்

-------------------------------------------


நாஞ்சில் நாடன் : நம் மனசாட்சியின் குரல்


பாவண்ணன்


தமிழில் மிகச்சிறந்த புனைகதை எழுத்தாளர் நாஞ்சில் நாடன். கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாகவும் தரமாகவும் படைப்பிலக்கியத் தளத்தில் இயங்கிக்கொண்டிருப்பவர். தன்னுடைய அறச்சார்புநிலையிலிருந்து ஒருகணமும் பிறழாத உறுதியான மனம்கொண்டவர். அதன் காரணமாகவே, தன்னுடைய குரலை படைப்பிலக்கியத் தளத்திலும் சமூகத்தளத்திலும் தவிர்க்கப்படமுடியாத ஒன்றாக தன்னை நிறுவிக்கொண்டவர். எண்ணற்ற நெருக்கடிகளுக்கிடையேயும் இடைவிடாமல் உழைக்கும் வேட்கையும் வேகமும் இயல்பாகவே இவரிடம் குடிகொண்டுள்ள குணங்கள். நாஞ்சில்நாட்டு மனிதர்களைப்பற்றிய சித்திரங்களின் பதிவை தமிழிலக்கியப் பரப்பில் அழுத்தமாக உருவாக்கியதை இவருடைய கொடை என்றே சொல்லலாம். 63 வயதுடைய இவருக்கு இந்த ஆண்டுக்குரிய சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டுள்ளது.

நாஞ்சில் நாடன் எழுத்துகளில் நான் முதலில் படித்தது தலைகீழ் விகிதங்கள் என்னும் நாவல். ஒருநாள் இரவுச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு சிம்னி விளக்குவெளிச்சத்தில் படிக்கத் தொடங்கினேன். ஒருமணிநேரம் அல்லது இரண்டுமணிநேரம் படித்துவிட்டு தூங்கச் செல்லலாம் என்பதுதான் என் திட்டமாக இருந்தது. ஆனால் படிக்கப்படிக்க கதையின் வேகம் என்னை இழுத்துக்கொண்டு ஓடியது. பாதியில் நிறுத்த மனம் வரவே இல்லை. நள்ளிரவில் விழித்துப் பார்த்த அப்பா "காலாகாலத்துல தூங்காம ஏன் இப்படி ஒடம்ப கெடுத்துக்கற" என்று அலுத்துக்கொண்டார். அம்மா மட்டும் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு, "இருக்கற மண்ணெண்ணய வச்சித்தான் இன்னும் கொற நாள ஓட்டணும் பாத்துக்கோ..." என்று பட்டும்படாமல் சொல்லிவிட்டு உறங்கத் தொடங்கிவிட்டார். எதுவுமே என் இதயத்தில் பதியவில்லை. மனமெல்லாம் சிவதாணுவும் பார்வதியும் நிறைந்திருந்தார்கள். வாழவேண்டிய காலத்தில் வீம்பாக பிரிந்து ஆளுக்கொரு மூலையில் அல்லல்படுகிறார்களே என்கிற பரிதாப உணர்வு அதன் முடிவை நோக்கி என்னை உந்தித் தள்ளியது. தொடர்ந்து படித்துக்கொண்டே இருந்தேன். அதிகாலை நான்குமணிக்கு சங்கு ஊதுகிற சமயத்தில் முடித்துவிட்டுத்தான் எழுந்தேன். ஆனால் மனம் பரபரவென்று இருந்தது. சிவதாணுவைப்பற்றி உடனடியாக யாரிடமாவது மனம்விட்டு பேசவேண்டும்போல சொற்கள் பொங்கிப்பொங்கி வந்தன. நேராக என் நண்பன் பழனியின் வீட்டுக்குச் சென்று, தூங்கிக்கொண்டிருந்தவனை எழுப்பி வெளியே அழைத்துவந்தேன்.

கடைத்தெருவில் அப்போதுதான் திறந்து இயங்கத் தொடங்கியிருந்த தேநீர்க்கடையில் சூடாக ஒரு தேநீர் வாங்கிப் பருகிவிட்டு நடக்க ஆரம்பித்தோம். நான் சிவதாணுவின் கதைமுழுக்க அவனிடம் வரிவரியாகச் சொன்னேன். ஒரு நேர்விகிதம் புரிதலின்மையால் முதலில் தலைகீழ் விகிதமாகி பிறகு மறுப்யும் நேர்விகிதமாக மாற்றமடையும் இராசாயனத்தை மாற்றமில்லாமல்......

more:

http://koodu.thamizhstudio.com/sirappukkatturai_nanjil_sahithya_2.php




No comments:

Post a Comment