Sunday, January 2, 2011

திலீப்குமாருக்கு விளக்கு விருது



திலீப்குமாருக்கு விளக்கு விருது

இந்த ஆண்டிற்கான விளக்கு விருது திரு. திலீப்குமார் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று (02-01-2011) அன்று சென்னை மாவட்ட மைய நூலகத்தில் சிறிய அரங்கில் மிக எளிமையாக விழா நடைபெற்றது. தமிழின் முதுபெரும் எழுத்தாளர் திரு. அசோகமித்திரன் இவ்விழாவின் பிரதான சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றது விழாவின் சிறப்பு.

திலீப்குமார் அவர்களின் நூல்கள் :

மூங்கில் குருத்து, கடவு ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுதிகளும், மெளனியுடன் கொஞ்ச தூரம் என்ற இலக்கியத் திறனாய்வு நூலும் வெளியாகியிருக்கின்றன. ‘கடவு’ சிறுகதைத் தொகுதியின் புதிய பதிப்பு விரைவில் க்ரியா பதிப்பக வெளியீடாக வெளிவரவிருக்கிறது.

விளக்கு விருது பெற்ற திலிப் குமார் அவர்களை கவுரவிக்கும் விதமாக கூடு இணையம் அவருக்கான சிறப்புக் கட்டுரைகளை வெளியிட்டு மகிழ்கிறது. அந்த வகையில் இலக்கிய விமரிசகர் திரு. வெங்கட் சாமிநாதன் அவர்கள் திலிப் குமார் பற்றி தன் நினைவுகளைப் பகிர்ந்துக் கொள்கிறார்.


-------------------------------------------


மொழியின் எல்லைகளைக் கடந்து - திலீப் குமார்



வெங்கட் சாமிநாதன்


இன்றைய தமிழ் இலக்கியத்தில் எழுபதுகளில், தெரியவந்த முக்கியமான பெயர்களில் ஒன்று, திலிப் குமார். அவரது தாய் மொழி குஜராத்தி என்பதும் விசேஷம் கொள்ளும் விவரம். இது ஏதும் அவரை தனியாக முன்னிறுத்தி பார்வைக்கு வைக்கும் காரியத்தைச் செய்வதாக அல்ல. இன்றைய தமிழ் இலக்கியத்தில், மலையாளம், கன்னடம், தெலுங்கு, சௌராஷ்டிரம், போன்ற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள எழுத்தாளர்கள் நிறைந்திருக்கிறார்கள். இவர்களில் சிலர் எழுத்துக்கள் மைல்கற்கள், க்ளாஸிக்ஸ் என்று சொல்லத்தக்கவை. இது இன்றைய விசேஷம் அல்ல. தமிழ் இலக்கியத்தின் தொன்று தொட்டே, வரலாற்றின் தொடக்கம் தொட்டே காணப்படும் அம்சமாகும். சங்க காலப் புலவர்கள் பலரின் பெயர்கள் தமிழ் பெயர்களாக இல்லை. (உதாரணமாக, தாமோதரனார், கேசவனார், உருத்திரனார், ப்ரஹ்மசாரி, கண்ணனார், நாகனார், தேவனார்...) அப்பெயர்கள், காதா சப்த சதி தரும் பெயர்களைப் போலவே இருக்கின்றன. மேலும், பாடு பொருள், பாடல்கள் இயற்றப்பட்டுள்ள விதி முறைகள், பெயர் தரப்படாது, அவன் அவள், தோழி என்றே குறிக்கப்பட்டு வரும் மூன்றே பாத்திரங்கள், அவர்களது காதல் ஏக்கங்கள், காத்திருத்தல்கள், தூது எல்லாம் பிராகிருத மொழியில் உள்ள காதா சப்த சதியிலும், சங்க கால அகப் பாடல்களிலும் காணப்படும் பொது அம்சங்களாயிருப்பது நமக்கு இன்னும் திகைப்பூட்டுகிறது. ஒரு வேளை இரண்டிலும் பொதுவாகக் காணப்படும் புலவர் பெயர்கள் ஒருவரையே குறிக்குமோ. ஆனால் இந்த இழையைப் பற்றிக்கொண்டு மேற்செல்வது சங்கடமான காரியம்.

நிகழ் காலத்தில் கூட தமிழ் நாட்டில் இருக்கும் கன்னடம், தெலுங்கு பேசும் எழுத்தாளர்கள் இன்றைய தமிழ் இலக்கியத்திற்கு கணிசமாக பங்களித்துள்ளனர். இவற்றில் சில மிக முக்கியமான சிறப்பான படைப்புகளாகவும் விளங்குகின்றன. சௌராஷ்டிரர்களும் தான். ஆனால் அவர்கள் விஜயநகர


மேலும் வாசிக்க:

http://koodu.thamizhstudio.com/sirappukkatturai_dilip_vilakku.php

No comments:

Post a Comment