Wednesday, August 25, 2010

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம். (6)

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம். (6)

வெங்கட் சுவாமிநாதன்

ஞான ராஜசேகரனைப் பற்றிப் பேசலாம். மற்றவர்கள் நினைவில் வைத்துக் கொள்ளாத, எடுத்துச் சொல்லாத பெயர். ஆரம்ப கால ஞான ராஜ சேகரனை எனக்குத் தெரியுமாதலால் சொல்கிறேன். 1974-75 களில் அவருடன் பழக்கம் ஏற்படத் தொடங்கியதால் சொல்கிறேன்.

தமிழ் சினிமாவைக் கேலி செய்வது அவரது மனம் மகிழும் பொழுது போக்கு. மிக ஆரோக்கியமான, கேலி அது. தமிழ் சினிமாவே எத்தகைய கேலிக்கூத்து என்பதை அவர் அறிந்துவைத்திருந்தார். அந்நாட்களில் அவருக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் தி. ஜானகிராமன். அவரது மோகமுள் நாவலை படமாக்க வேண்டும் என்பது அந்நாட்களிலிருந்தே அவரது கனவாக இருந்து வந்தது. பிறகு அவரும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாகி, கேரள அரசில் சேர்ந்த பிறகும் அவரது கனவு மறையவில்லை. நானும் அவரும் மோகமுள் படமெடுக்க யாரிடமோ அந்த நாவல் விற்கப்பட்டுவிட்டதென கேள்விப்பட்டு, நான் சென்னை வந்திருந்த போது சிட்டியையும், ஜானகிராமனது புத்திரர்களையும் தேடிச் சென்றோம். இது நடந்தது எண்பதுக்களின் பின் பாதியில். பின் இந்த சிக்கல் ஒருவாறாக தீர்ந்தது என்று அறிந்தது நானும் ஞான ராஜசேகரனும் தில்லியில் உள்ள கேரள ஹவுஸில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து ஜானகிராமனின் நாவலை வைத்துக்கொண்டே அவரது வார்த்தைகளைக் கொண்டே திரைக்கதையின் வரைகோட்டையும் தீர்மானித்தோம். கதை நிகழுமிடங்கள் ஜானகிராமன் குறிப்பிட்டிருக்கும் கும்பகோணம் தெருக்களே. அன்று நாங்கள் தீர்மானித்திருந்த படத்தின் ஆரம்பம், நாவலின் கடைசிக் கட்டமான பாபுவின் வடநாட்டுப் பிரயாணம், சங்கீதம் கற்க. அவனுக்கு வழியனுப்பும் காட்சி. ரயில் புறப்படுகிறது. அதே ரயில் பெட்டியில் பாபு உட்கார்ந்திருக்கும் காட்சி தொட்ர்ந்து கதையின் ஆரம்பமும் ஆகிறது. அது பாபு கும்பகோணத்துக்கு வரும் காட்சி. படத்தின் கடைசி காட்சி, முதல் காட்சியான வடநாட்டுப் பிரயாணத் தொடக்கம், விரைந்து செல்லும் ரயில் பெட்டியில் பாபு. கேரளா ஹவுஸில் எழுதிச் சென்ற வரைகோடு மறக்கப் பட்டுவிட்டது. அதற்கு அவருக்கு உரிமை உண்டு. அவர் ஜானகிராமனுக்கும் அவரது நீண்ட நாள் லட்சியக் கனவுக்கும் திரைப்படத்தில் சாட்சியம்.............


மேலும் படிக்க: http://thamizhstudio.com/others_article_8.php



Saturday, August 21, 2010

உள்ளத்தை உறுத்தும் உளவியல் உண்மைகள் –3


பா.செல்வராஜ்

ரங்கநாதனுக்கு சமீப காலமாக காலை எழும்போதே வலது கை நடுங்க ஆரம்பித்து விடுகிறது. கையில் சுத்தமாக சக்தியின்றி எந்த வேலையும் செய்ய முடியாத வகையில் யாரோ கையைப் பிடித்து ஆட்டி விடுவது போல் ஆடிக்கொண்டிருக்கின்றது. கை நடுக்கம் அதிகமாக இருப்பதால் அவ்வப்போது வேலைக்கு விடுமுறை எடுத்துக்கொள்கிறார். சரியாக வேலைக்குச் சென்று எட்டு மாதத்திற்கு மேல் இருக்கும். பல மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்தும் கூட கை நடுக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறதே தவிர குறைவதாகத் தெரியவில்லை. நரம்புத் தளர்ச்சியாக இருக்கலாம் என பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அதற்கான அறிகுறிகள் இல்லை என்று அறிந்தும் ‘சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில்’ நரம்பு தளர்ச்சியைப் போக்கும் மருந்துகளை பரிந்துரைத்துள்ளனர். ஒரு கை நடுங்கிக் கொண்டே ஆலோசனை அறைக்குள் அழைத்து வரப்பட்ட ரங்கநாதனுக்கு ஏன் இப்படி?

உளவியல் உண்மைகள்:

மருத்துவர்களின் சோதனை முடிவுகளைப் பார்த்துவிட்டு, ரங்கநாதனைப் பற்றி மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளும் நோக்கில் அவரிடம் மெதுவாக ஒவ்வொன்றாக கேட்கத் துவங்கினேன். அவருக்கு தற்போது 47 வயது, உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் ஒரு மகன் இருக்கிறான். நடுத்தர குடும்பத்தை சார்ந்த இவர் ஓர் நூற்பாலையில் கோன் வைண்டிங் எனும் பிரிவில் பணியாற்றுகிறார். ரங்கநாதனின் மனைவி வீட்டில் சும்மா பொழுதை ஏன் போக்க வேண்டும் என்றெண்ணி நாண்காண்டுகளாக அரிசி வியாபாரம் செய்து வருகிறார்.


மேலும் படிக்க:

http://koodu.thamizhstudio.com/thodargal_10_3.php



Friday, August 20, 2010

தானம் அறக்கட்டளையின் 6ஆவது மேம்பாட்டுக் குறும்பட விழா போட்டி


மேம்பாட்டுக் குறும்பட விழா எனும் தலைப்பில் ஒவ்வொரு ஆண்டும் தானம் அறக்கட்டளை போட்டிகளை நடத்தி வருகிறது. 1.வறுமை, 2.தண்ணீரும் வாழ்க்கையும், 3.தண்ணீரும் மக்களும், 4.கலாச்சாரமும், பாரம்பரியமும், 5.வறுமைக்கு எதிரான ஆயிரமாண்டு வளர்ச்சி இலக்கு என்ற தலைப்புகளில் கடந்த ஐந்தாண்டுகளாக தானம் அறக்கட்டளையின் மேம்பாட்டுக் குறும்பட விழாக்கள் நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக இவ்வாண்டு 'மக்கள் ஜனநாயகமும் மேம்பாடும்' எனும் தலைப்பில் நடைபெறவுள்ளது.

1. வறுமை, ஜனநாயகம், நல்லாட்சி, வெளிப்படை, பொறுப்பேற்றல், சுயஉதவி, சுயநிர்வாகம், தற்சார்பு, மனிதஉரிமை போன்ற கருத்தமைவுகளில் உள்ள குறும்படம் மற்றும் ஆவணப்படங்களை இப்போட்டிக்கு அனுப்பலாம். சிக்கலுக்கான தீர்வினை முன்மொழிவது அவசியம்.

2. உலகின் எந்த மொழிகளில் தயாரானதாக இருப்பினும், உரையாடல்கள் ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.


மேலும் படிக்க : http://thamizhstudio.com/competitions_19.php

லெனின் விருது துவக்க விழா - 2010

படத்தொகுப்பாளர்-இயக்குனர் பீ.லெனின் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், அவர்களின் பெயரில் குறும்பட துறையில் செயல்படுபவர்களுக்கு "லெனின்" விருது துவக்க விழாவும் 15.08.2010 அன்று நடைபெற்றது. இந்த விருதை தமிழ் ஸ்டியோ.காம் வழங்குகிறது. லெனின் விருது துவக்க விழா 15.08.2010 (லெனின் பிறந்த நாள்) அன்று சென்னை இக்சா மையத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் ஜனநாதன், நடிகர் பாரதிமணி, கவிஞர் மதுமிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதல் நிகழ்வாக படத்தொகுப்பாளர் பீ.லெனின் இயக்கிய நாக் அவுட், குற்றவாளி (Culprit) ஆகிய இரு குறும்படங்கள் திரையிடப்பட்டன.

நாக் அவுட் குறும்படத்திற்கான சிறந்த இயக்குனர், குற்றவாளி குறும்படத்திற்கான சிறந்த படத்தொகுப்பாளர் என்ற பிரிவுகளில் பீ.லெனின் தேசிய விருது பெற்றுள்ளார்.

சிறப்பு விருந்தினர்களையும் குறும்பட ஆர்வலர்களையும் தமிழ் ஸ்டியோ குணா வரவேற்று பேசினார்.

குறும்பட இயக்குனர் பத்மநாபன் படத்தொகுப்பாளர் பீ லெனின் அவர்களில் வாழ்க்கை குறிப்பை வாசித்தார்.

குறும்பட இயக்குனர் யாழ்நிலவன்

லெனின் விருது தொடக்க விழாவினை கொண்டாடும் விதமாக குறும்பட திருவிழா சென்னை கோடம்பாக்கம் தமிழ் ஸ்டுடியோ அலுவலக மாடியில் மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை, 7.8.10 சனி முதல் 13.8.10 வெள்ளி வரை ஏழு நாட்கள் நடைபெற்றன.

சிறுகதைகளை அடிப்படையாக கொண்ட குறும்படங்கள் என்ற பிரிவில் செவ்ளி, கர்ணமோட்சம், நடந்த கதை, திற, கழுவேற்றம் ஆகிய குறும்படங்கள் திரையிடப்பட்டன.

ஆவணப் படங்கள் பிரிவில் கல் மனிதர்கள், சிட்டு ஆகிய இரு ஆவணப்படங்களும், பொது பிரிவில் செத்தாழை, கம்மாயில் கல்லு, இப்ப வருந்தி என்ன பயன், எச்சில் மனிதர்கள், நானும் என் விக்கியும் ஆகிய குறும்படங்களும்,

பிறமொழி குறம்பட பிரிவில் ரெட் பலூன் குறும்படமும்,

ஈழப்படங்கள் என்ற பிரிவில் என் வீட்டு முற்றத்தில் ஒரு மாமரம் என்ற குறும்படமும், முல்லை தீவு (படுகொலையின் கதை) என்ற ஆவணப் படமும் திரையிடப்பட்டன.

கடைசி நாள் விழா நாயகர் லெனின் அவர்கள் இயக்கிய தேசிய விருது பற்றிய படங்களான நாக் அவுட்டும், ஊருக்கு நூறு பேர் -ம் திரையிடப்பட்டன.

நகைச்சுவை குறும்படங்கள் என்ற பிரிவில் திரையிட திட்டமிட்டிருந்த படங்கள் தவிர்க்க முடியாத காரணங்களால் திரையிட முடியாமல் போய் விட்டது.

பெரும்பாலும் திரையிடப்பட்ட குறும்படங்களின் இயக்குனர்கள் விழாவில் கலந்து கொண்டு தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டனர்.

இக்குறும்பட திரையிடல் திருவிழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக ஒளிப்பதிவாளர் செழியன், ஆவணப்பட இயக்குனர் ஆர் ஆர் சீனிவாசன், திரைப்பட கல்லூரி பேராசிரியர் ரவிராஜ், இயக்குனர் தேவராஜ், எழுத்தாளர் அஜயன் பாலா, நடிகர் பாரதிமணி, இயக்குனர் ராசி, அழகப்பன், கவிஞர் மதுமிதா ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் மறுபடியும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

நடிகர் தயாளன் லெனின் விருது துவக்க விழாவிற்கு வருகை புரிந்து சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.


கவிஞர் மதுமிதா

தான் பார்த்த லெனின் குறும்படங்கள் குறித்த தன் எண்ணங்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக கவிதை துறையில் சொல்லுவார்கள் நாங்கள் பாரதியின் தோள் மீது அமர்ந்து கவிதை எழுதுகிறோம் என்று, அதுபோல குறும்பட துறையினர் படத்தொகுப்பாளர் லெனின் தோள் மீது அமர்ந்து தங்கள் படைப்புகளை உருவாக்குகிறார்கள் என்று சொல்லும் அளவுக்கு படத்தொகுப்பாளர் லெனின் சினிமாவுக்கு சிறப்பான பங்களிப்பை செய்துள்ளார் எனக் கூறினார். மேலும் இதனை இந்த நிகழ்வை ஒரு வரலாற்று சிறப்பு மிக்க விழா என்று புகழாரம் சூட்டினார்.

நடிகர் பாரதிமணி

எனக்கு எடிட்டர்/இயக்குநர் பீம்சிங் லெனின் அவர்களை பத்துவருடங்களாகத்தான் தெரியும். 2000-ம் ஆண்டில், பாரதி படத்தில் சாயாஜி ஷிண்டேக்கு தமிழ் வசனங்கள் சொல்லிக்கொடுக்கும் உதவி இயக்குநராகவும், பாரதியின் தந்தையாகவும் பணியாற்றிவிட்டு, படப்பிடிப்பு முடிந்தவுடன் நான் தில்லி திரும்பிவிட்டேன். டப்பிங்கின் போது, படத்தில் பாரதியின் தந்தை பாத்திரத்தின் வசனங்களைப்பேசுவதற்கு, என்னை தில்லியிலிருந்து வரவழைத்தால், செலவு அதிகமாகுமென்று கருதி, சென்னை டப்பிங் கலைஞரைக்கொண்டே பேசச்செய்துவிடலாம் என்று இயக்குநர் விரும்பினார். பத்துக்கும் மேலான கலைஞர்களை பேசச்சொல்லியும் திருப்தியடையாத எடிட்டர் லெனின், ‘இவருக்கு மற்றவர்கள் டப்பிங் பேசுவது சிரமம். சங்கீத பாஷையில் சொன்னால், இவர் ஆரம்பிக்கும்போது, ஒரு இடம் தள்ளி எடுத்துவிட்டு, முடிக்கும்போது, சரியாக சமத்தில் முடிக்கிறார். தேர்ந்த


மேலும் : http://thamizhstudio.com/shortfilm_guidance_awards_1.php

Thursday, August 19, 2010

பாராட்டுவிழாவுக்கு வராத நாயகன் -- நான் அறிந்த லெனின்!

பாராட்டுவிழாவுக்கு வராத நாயகன் -- நான் அறிந்த லெனின்!

பாரதி மணிbharatimani90@gmail.com

கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி எனக்கு மகிழ்வான நாள். தமிழ்ஸ்டுடியோ.காம் அமைப்பினர், அருண்-குணா முயற்சியில் நண்பர் எடிட்டர் லெனினுக்கு வாழ்நாள் சாதனை விழாவும், அதையொட்டி வருடம்தோறும் அவர் பெயரில் தமிழ்க்குறும்படங்களுக்கான விருதுவிழாவும் விழாநாயகன் எடிட்டர் லெனின் வராமலே இனிது நடந்தேறியது! அவர் வராமலேயே அவருக்காக கேக் வெட்டி, ‘Happy Birthday to you….Lenin!’ என்று பாடி நாங்கள் கொண்டாடினோம். 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் நள்ளிரவில் தில்லி பாராளுமன்றத்தில் பிரதமர் நேருஜி ‘Long years ago……’ என்று முழக்கமிட்ட நாளில் பீம்சிங்கின் மனைவி சோனாபாய்க்கு இரண்டாவது மகனாக பிறந்தவர் இவர். தன் பெயரில் தமிழ்க்குறும்படங்களுக்கு ஒரு விருது கொடுக்கப்போகிறார்களென்பதை அறிந்த லெனின், அருணைக்கூப்பிட்டு, ‘இத்துறையில் எத்தனையோ ஜாம்பவான்கள் இங்கே இருக்கும்போது, என் பெயர் தான் உங்களுக்குக்கிடைத்ததா? எனக்குமுன்னால், எம்.எஸ். மணி – (இவர் தன் பெயரை Money என்று எழுதுவார்) – போன்றவர்கள் இருந்திருக்கிறார்கள். சத்யஜித் ரே பெயர் உங்கள் ஞாபகத்துக்கு வரவில்லையா? என்னாலானதை நான் செய்துகொண்டிருக்கிறேன். என்னை விட்டுவிடுங்கள்’ என்று சொல்லி விரட்டிவிட்டார்.

அருண் எனக்கு போன் பண்ணி, ‘சார்ட்டெ நீங்க சொல்லணும்!’ என்று கேட்டுக்கொண்டார். லெனினை ஓரளவு தெரிந்த நான் என் பேச்சு எடுபடாது என்று தெரிந்தும், ‘லெனின் சார், உங்களுடைய Sense of Values –ஐ நான் மதிக்கிறேன். ஆராதிக்கிறேன். ஆனாலும் ஒரு வயதுக்குமேல் நமக்கு ஓரளவு Sense of Proportion-ம் தேவையாக இருக்கிறது. அறுபது வயதானபின் நம் குழந்தைகள் ஆசைப்படுகிறார்களென்ற ஒரே காரணத்துக்காக, நமக்கு விருப்பமில்லாவிட்டாலும், திருக்கடையூர் கோவிலில் உட்கார்த்தி வைக்கப்பட்டு, குடம் குடமாக தண்ணீர் அபிஷேகம் செய்துகொள்வதில்லையா? அதிலும் ஒரு சந்தோஷமிருக்கிறது. அரசியலில் உங்கள் வயதே ஆன சுதந்திர இந்தியா எத்தனை சமரசங்களுக்கு உட்பட்டிருக்கிறது? நமக்கெல்லாம் விழாவெடுக்க யாரும் க்யூவில் காத்துக்கொண்டிருப்பதில்லை. இந்த விழா நீங்கள் சொல்லி ஏற்பாடு செய்ததல்ல. மற்றவர்கள் மகிழ்வுக்காக கொஞ்சம் விட்டுக்கொடுங்களேன்!’ என்று கேட்டுக்கொண்டேன். இந்த விழாவுக்கு இருதினங்கள் முன்பு தமிழ்ஸ்டுடியோ.காம் ஏற்பாடு செய்திருந்த லெனின் குறும்படங்களின் திரையிடலின்போதும், அருணிடம், ‘ஞாயிற்றுக்கிழமை விழாவுக்கு லெனின் வராவிட்டால், நான் ஆச்சரியப்படமாடேன்’ என்று சொன்னேன்.


read more : http://thamizhstudio.com/others_article_7.php




Thursday, August 5, 2010

ச. தமிழ்செல்வன் பங்கேற்ற கேணி இலக்கிய சந்திப்பு

ச. தமிழ்செல்வன் பங்கேற்ற கேணி இலக்கிய சந்திப்பு


கேணி அமைப்பின் 11வது மாத இலக்கியக் கூட்டம் 11.04.2010 அன்று நடைபெற்றது.

பத்திரிகையாளர் ஞாநி, அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மேலும் "எழுத்தாளர் அசோகமித்ரன் எனது மூத்த நண்பர். தமிழ் செல்வன் என் சகவயது நண்பர். அவர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. சமூகப் பிரச்சினை, கலாச்சார பிரச்சினை, தொழிலாளர் பிரச்சினை என பல துறைகள் பற்றியும் கருத்து சொல்பவர். தன் கருத்துக்களை கட்டுரைகளாகவும் எழுதுபவர். இவை எல்லாம் விட அவர் ஒரு களப் பணியாளராகவும் உள்ளார். பெரும்பாலும் பயணம் செய்து கொண்டே இருப்பவர். அறிவொளி இயக்க அனுபவங்களையும், தொழிற்சங்க அனுபவங்களையும் நூலாக எழுதியுள்ளார். இவர் களப் பணியாளராக இருப்பதனால் புனைவுகள் எழுத முடியாமல் போகிறது. "என் வாழ்க்கை என் எழுத்து" என்ற தலைப்பில் நம்மோடு உரையாடுவார் பிறகு நாம் அவரோடு விவாதிக்கலாம் என கூறி ஞாநி தொடக்க உரையை நிறைவு செய்தார்.

ச. தமிழ்செல்வன்

எதை நாம் முக்கியம் எனக் கருதுகிறோமோ அதை நம்மால் செய்து முடிக்க முடியும். ஒரு காலத்தில் கதை எழுதுவது முக்கியம் என கருதியதால் கதைகள் எழுதினேன். "வெயிலோடு போய்" என்ற என் முதல் சிறுகதை தொகுப்பு வெளிவந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் இரண்டாவது கதைத் தொகுப்பு வந்தது. நான் 33 ஆண்டுகளில் 32 சிறுகதைகளை மட்டுமே எழுதியுள்ளேன். வருடத்திற்கு ஒரு சிறுகதை கூட வெளிவரவில்லை.

என் அப்பா வழி தாத்தா தலையாரியாக வேலை பார்த்தார். என் அம்மா வழி தாத்தா மதுரகவி பாஸ்கரதாஸ் நாடகக்காரர். என் அப்பா எழுத்தாளர். தீவிர தி.மு.க. அனுதாபி. எங்கள் வீடு நிறைய புத்தகங்கள் இருக்கும். எங்கள் சிறுவயதில் புத்தகங்கள் மீதுதான் விளையாடுவோம். எங்கள் அப்பா வேலை மாறுதல் காரணமாக பல இடங்களுக்கு மாறிக் கொண்டு இருந்ததனால் எங்கள் அத்தைதான் எங்களை வளர்த்தார். அவர் ஒரு விதவை. தன் வாழ்க்கையை எங்களிடம் கதைகதையாகச் சொல்லுவார். நான் ஆறாவது படிக்கும்போதே எழுத ஆரம்பித்து விட்டேன். நான் எழுத்தாளனாக மாறியதில் வியப்பு ஏதுமில்லை. முதல் தலைமுறை படிப்பாளிகள் படைப்பாளியாக மாறுவதுதான் சாதனை என நினைக்கிறேன்.


ச. தமிழ்செல்வன் பங்கேற்ற கேணி நிகழ்வை ஒலி வடிவில் கேட்க

http://koodu.thamizhstudio.com/ilakkiyam_seithigal_keni11.php



Monday, August 2, 2010

லெனின் விருது - குறும்படத் திருவிழா!!




லெனின் விருது

படத்தொகுப்பாளர் பி. லெனின் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா
மற்றும்"லெனின் விருது" துவக்க விழாவை முன்னிட்டு நடைபெறும் குறும்படத் திருவிழா!!

படத்தொகுப்பாளர் பி. லெனின் அவர்களுக்கு தமிழ் ஸ்டுடியோ.காம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா மற்றும் லெனின் அவர்கள் பெயரில் அடுத்த வருடம் முதல் குறும்படத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் "லெனின்" விருது துவக்க விழாவை முன்னிட்டும், லெனின் அவர்களின் பிறந்த நாளான ஆகஸ்ட் 15 ஐ உலகத் தமிழ் குறும்பட தினமாக தமிழ் ஸ்டுடியோ.காம் அறிவிக்கவிருப்பதை முன்னிட்டும், எதிர் வரும் ஆகஸ்ட் 7 முதல் 13 வரை தொடர்ந்து ஏழு நாட்கள் குறும்படங்கள் திரையிடல் திருவிழா நடைபெறும். இதில் ஆர்வலர்கள் அனைவரும் பங்கேற்று பயன்பெறலாம். அனுமதி இலவசம்.

நிகழ்வின் மேலும் சிறப்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகைப்பாட்டின் கீழ் குறும்படங்கள் திரையிடப்படுகிறது.

அதன் விபரம்:

ஆகஸ்ட் 07, 2010, சனிக்கிழமை மாலை ஏழு மணிக்கு:

வகைப்பாடு: சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட குறும்படங்கள் திரையிடல்
சிறப்பு விருந்தினர்: திரைப்பட ஒளிப்பதிவாளர் திரு. செழியன். (கல்லூரி, ரெட்டை சுழி)

ஆகஸ்ட் 08, 2010, ஞாயிற்றுக்கிழமை மாலை ஏழு மணிக்கு:

வகைப்பாடு: ஆவணப்படங்கள் திரையிடல்
சிறப்பு விருந்தினர்: ஆவணப்பட இயக்குனர் திரு. ஆர். ஆர். சீனிவாசன் (என் பெயர் பாலாறு)

ஆகஸ்ட் 09, 2010, திங்கள்கிழமை மாலை ஏழு மணிக்கு:

வகைப்பாடு: நகைச்சுவைக் குறும்படங்கள்
சிறப்பு விருந்தினர்: தொலைகாட்சி நகைச்சுவை எழுத்தாளர் திரு. பழனி (சின்ன பாப்பா, பெரிய பாப்பா)

ஆகஸ்ட் 10, 2010, செவ்வாய்க்கிழமை மாலை ஏழு மணிக்கு:

வகைப்பாடு: பொதுவான குறும்படங்கள்
சிறப்பு விருந்தினர்: அரசு திரைப்படக் கல்லூரி பேராசிரியர் திரு. ரவிராஜ்

ஆகஸ்ட் 11, 2010, புதன்கிழமை மாலை ஏழு மணிக்கு:

வகைப்பாடு: மாற்று மொழிக் குறும்படங்கள்
சிறப்பு விருந்தினர்: பிரசாத் திரைப்படக் கல்லூரி முதல்வர் திரு. ஹரிஹரன்

ஆகஸ்ட் 12, 2010, வியாழக்கிழமை மாலை ஏழு மணிக்கு:

வகைப்பாடு: ஈழம் சார்ந்து எடுக்கப்பட்ட குறும்படங்கள்
சிறப்பு விருந்தினர்: எழுத்தாளர், நடிகர் அஜயன் பாலா

ஆகஸ்ட் 13, 2010, வெள்ளிக்கிழமை மாலை ஏழு மணிக்கு:

வகைப்பாடு: எடிட்டர் லெனின் அவர்கள் இயக்கிய குறும்படங்கள்
சிறப்பு விருந்தினர்: எடிட்டர். திரு. பி. லெனின்

திரையிடப்படும் குறும்படங்கள் பற்றிய விபரங்கள் விரைவில்...

திரையிடல் நடைபெறும் இடம்:
எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024





Sunday, August 1, 2010

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் (5)

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் (5)

வெங்கட் சுவாமிநாதன்

தமிழ் சினிமாவின் சுமார் 80 வருட சரித்திரத்தில், அது தந்துள்ள சினிமா குப்பை குவியலில் சினிமா என்று சொல்லக்கூடியது ஒன்று கூட இல்லை யென்றும், ஐம்பது வருடங்களுக்கு முன் நான் பார்த்த பழைய படங்களின் சில காட்சிகளைச் சுட்டிக் காட்டி, இம்மாதிரியான காட்சிகள் நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அன்றாடம் நிகழ்ந்த போதிலும், அவற்றுடனே நாம் வாழ்ந்து வந்த போதிலும், அத்தகைய காட்சிகளை நம் தமிழ் சினிமாவில் காண்பதற்கில்லை என்று நான் சொன்னதும், அன்பர்கள் சிலருக்கு வருத்தமும், சிலருக்கு கோபமும், இன்னம் சிலருக்கு ஏதோ நான் தமிழனை, தமிழ் சினிமாவைத் தாழ்த்திக் கேவலப் படுத்துவதற்கே எழுதுவது போலும், அவர்கள் தமிழ் ரத்தம் கொதிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ் ரசனைக்கேற்ற படங்கள் தான் என்று அவர்கள் உரத்துச் சொல்கிறார்கள். வேறொரு இணையத்தில் ஒரு பட்டியலையே கொடுத்து இவையெல்லாம் சிறந்த படங்கள் என்று என் முன் வைத்திருக்கிறார்கள். அந்தப் பட்டியல் இதோ:

சந்தியா ராகம்
வீடு
உன்னைப் போல் ஒருவன்
உதிரிப் பூக்கள்
முள்ளும் மலரும்
உச்சி வெயில்
சில நேரங்களில் சில மனிதர்கள்
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
அவள் அப்படித்தான்
அழியாத கோலங்கள்
கண் சிவந்தால் மண் சிவக்கும்
மெட்டி
ராஜ பார்வை
மகா நதி
குணா
அந்த நாள்
முதல் மரியாதை
ஹே ராம்
ஒருத்தி
நாயகன்
மொழி
சுப்பிரமணியபுரம்
சென்னை 28
ஆயுத எழுத்து
வெயில்
புதுப்பேட்டை
பருத்திவீரன்
அஞ்சாதே
நண்பா நண்பா
இரண்டு பேர் வானத்தைப் பார்க்கிறார்கள்
சங்க நாதம்
அக்ரஹாரத்தில் கழுதை
விருமாண்டி


இவையெல்லாம் நல்ல தமிழ் படங்கள் இல்லையா என்று கேள்விகள் எழுந்துள்ளன. இந்த படங்களின் பட்டியல், 32 Best Tamil Movies – Best Arthouse films – 10 Hot – ல் கொடுக்கப்பட்டுள்ளது போக இன்னும் சில சேர்க்கப்பட்டுள்ளன, அன்பர்களால்.

கேட்க வேண்டிய கேள்விதான். இந்தப் பட்டியலும் சர்ச்சைக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய ஒன்று தான். இப்பட்டியலுக்கும் கேள்விகளுக்கும் பதில் அளித்தே ஆகவேண்டும்.

முதலில் எனக்குத் தோன்றுவது கவனமாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் பட்டியலில், மோகமுள், பாரதி, பெரியார் போன்ற படங்களை இயக்கிய ஞான ராஜசேகரனின் படங்களோ, கிராமத்து மண் வாசனையைத் தன் படங்களில் கொணர்ந்தவராக, ஸ்டுடியோவை விட்டு கிராமத்துக்குக் காமிராவை எடுத்துச் சென்ற பெருமை படைத்தவராகப் பாராட்டப்படும் பாரதி ராஜாவின் படங்களோ (ஒன்றைத் தவிர) ஏன் இடம் பெறவில்லை என்று எனக்கு யோசிக்கத் தோன்றுகிறது. இவர்களை ஒதுக்கும் என் காரணங்களும் பார்வையும் வேறு. ஆனால் மேற்கண்ட பட்டியலைத் தயாரிக்க ஐம்பது வருடங்கள், உன்னைப் போல் ஒருவனைத் தொட (1963 அல்லது 1964 என்று நினைக்கிறேன்) பின்னோக்கிச் சென்றவருக்கு ஞான ராஜ சேகரனையும் பாரதி ராஜாவையும் சேர்க்கத் தோன்றவில்லையே, ஏன்?

இப்பட்டியலில் காணும் பல படங்கள் வித்தியாசமானவை, வழக்கமான தமிழ்ப் படங்களிலிருந்து விலகி வேறு தடத்தில் பயணிக்கவேண்டும் என்ற எண்ணமும் முயற்சியும் காணும் படங்கள் தான் என்பது எனக்குத் தெரியும். அனேகம் படங்கள் வேறு தடத்தில் பயணிப்பதாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் செயல்பாடுமே கொண்ட படங்களும் உண்டு. உதாரணமாக, கமல ஹாஸனின் படங்கள் அத்தனையும். இனி வரப் போவனவற்றையும் சேர்த்து. அவரது ஆளுமை தன் படங்களில் தானே மையமாகவும் தன்னைச் சுற்றியே உலகம் இயங்குவதாகவும் காட்டிக்கொள்ளும் ஆசை கொண்ட ஆளுமை அவரது. ஒவ்வொரு படமும் முந்தையதிலிருந்து வித்தியாசமாக முயற்சிக்கப்பட்டதாகக் காட்டிக்கொள்ளலாம். காட்டிக்கொள்ளலாம் தான். அவ்வளவே.. மையம், அவரே தான். இதெல்லாம் போக, ஒரு படம் அசாதாரண வெற்றி பெற என்னென்ன மசாலாக்கள் இருக்கவேண்டும் என்பது சினிமா உலகில் இப்போதைய கால கட்டத்தில் தீர்மானமாகியுள்ளதோ அவையெல்லாம் கொண்ட ஒரு தயாரிப்பைத் தான் அவரது வித்தியாசமான படங்களும் தரும். இதையே மணிரத்தினத்திற்கும் சொல்ல வேண்டும். இவையெல்லாம் சினிமாவே அல்ல. இவை எதுவும் சினிமா என்ற கலை சார்ந்தவை அல்ல. சினிமா என்ற சூதாட்டமாகிப்போன வியாபாரம் சார்ந்தவை.

கமலஹாஸன் நல்ல நடிப்புத் திறமையுள்ளவர் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். அவரிடம் திறமை மட்டுமே உண்டு. அந்தத் திறமையை அவர் என்றும் ஒரு கலையாக பரிணமிக்க விட்டதில்லை. அவரது திறமையெல்லாம் தன்னைப் பூதாகாரமாக முன்னிறுத்திக்கொள்வதற்கும், அதை முதலீடாக வைத்து, சந்தைக்கான மசாலாக்களையும் சேர்த்து வியாபாரம் செய்யும் வணிகர் தான் அவர். லாவகமாக உடல் வளைத்து ஆடத் தெரிந்தால், ரிக்கார்ட் டான்ஸ் ஆட தேர்ந்துகொள்வது போன்றதே, கமலஹாஸனின் நடிப்புத் திறமை பெற்ற வடிகால். இந்த வணிகத்தில் அவர் கணக்குகள் தவறாகி நஷ்டம் ஏற்பட்டால் அது ஒரு கலைஞனின் புதிய பாதைத் தேர்வில் எதிர்ப்படும் தோல்வி அல்ல. பங்குச் சந்தைக்காரனின் கணக்குகள் தோற்கும் சமாசாரமே அது. இது அவருக்கு மட்டுமலல, சினிமா வர்த்தகம் ஒரு சூதாட்டமாகி இதில் தம் அதிர்ஷ்டத்தைச் சோதிக்க வந்தவர்கள் எல்லோருக்கும் நேர்வது தான். மணி ரத்னத்துக்கும், ரஜனி காந்துக்கும், சங்கருக்கும், நேர்வது தான். எஸ். எஸ். வாசனுக்கும் நேர்ந்தது தான். இயக்குனர் சிகரத்துக்கும் நேர்ந்தது தான். இது கலைத் தோல்வி அல்ல. பங்குச் சந்தையில் சூதாடிக் கிடைத்த தோல்வி. இதில் சாமர்த்தியமாக தான் தப்பித்துக் கொண்டு தயாரிப்பாளர் தலையில் விழச் செய்வதில் தான் நம் உலக நாயகர்கள சூப்பர் ஸ்டார்கள, இளைய தளபதிகள் இத்யாதிகள கவனமாக இருப்பார்கள்.

ஆனால் உண்மையிலேயே இந்த வணிகப் பாதையின் சூதாட்டத்திலிருந்து விலகிசீரிய முயற்சிகள் சில செய்து பார்க்கவேண்டும் என்று துணிந்தவர்கள் என முதலில் ஜெயகாந்தனைச் சொல்வேன். பின் அதைத் தொடர்ந்தவர்கள் என பாலு மகேந்திராவையும், மகேந்திரனையும், ஞான ராஜசேகரனையும் சொல்வேன். இவர்களைப் பற்றி பேசலாம்.


மேலும் படிக்க : http://thamizhstudio.com/others_article_5.php