Saturday, August 21, 2010

உள்ளத்தை உறுத்தும் உளவியல் உண்மைகள் –3


பா.செல்வராஜ்

ரங்கநாதனுக்கு சமீப காலமாக காலை எழும்போதே வலது கை நடுங்க ஆரம்பித்து விடுகிறது. கையில் சுத்தமாக சக்தியின்றி எந்த வேலையும் செய்ய முடியாத வகையில் யாரோ கையைப் பிடித்து ஆட்டி விடுவது போல் ஆடிக்கொண்டிருக்கின்றது. கை நடுக்கம் அதிகமாக இருப்பதால் அவ்வப்போது வேலைக்கு விடுமுறை எடுத்துக்கொள்கிறார். சரியாக வேலைக்குச் சென்று எட்டு மாதத்திற்கு மேல் இருக்கும். பல மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்தும் கூட கை நடுக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறதே தவிர குறைவதாகத் தெரியவில்லை. நரம்புத் தளர்ச்சியாக இருக்கலாம் என பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அதற்கான அறிகுறிகள் இல்லை என்று அறிந்தும் ‘சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில்’ நரம்பு தளர்ச்சியைப் போக்கும் மருந்துகளை பரிந்துரைத்துள்ளனர். ஒரு கை நடுங்கிக் கொண்டே ஆலோசனை அறைக்குள் அழைத்து வரப்பட்ட ரங்கநாதனுக்கு ஏன் இப்படி?

உளவியல் உண்மைகள்:

மருத்துவர்களின் சோதனை முடிவுகளைப் பார்த்துவிட்டு, ரங்கநாதனைப் பற்றி மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளும் நோக்கில் அவரிடம் மெதுவாக ஒவ்வொன்றாக கேட்கத் துவங்கினேன். அவருக்கு தற்போது 47 வயது, உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் ஒரு மகன் இருக்கிறான். நடுத்தர குடும்பத்தை சார்ந்த இவர் ஓர் நூற்பாலையில் கோன் வைண்டிங் எனும் பிரிவில் பணியாற்றுகிறார். ரங்கநாதனின் மனைவி வீட்டில் சும்மா பொழுதை ஏன் போக்க வேண்டும் என்றெண்ணி நாண்காண்டுகளாக அரிசி வியாபாரம் செய்து வருகிறார்.


மேலும் படிக்க:

http://koodu.thamizhstudio.com/thodargal_10_3.php



No comments:

Post a Comment