Thursday, August 5, 2010

ச. தமிழ்செல்வன் பங்கேற்ற கேணி இலக்கிய சந்திப்பு

ச. தமிழ்செல்வன் பங்கேற்ற கேணி இலக்கிய சந்திப்பு


கேணி அமைப்பின் 11வது மாத இலக்கியக் கூட்டம் 11.04.2010 அன்று நடைபெற்றது.

பத்திரிகையாளர் ஞாநி, அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மேலும் "எழுத்தாளர் அசோகமித்ரன் எனது மூத்த நண்பர். தமிழ் செல்வன் என் சகவயது நண்பர். அவர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. சமூகப் பிரச்சினை, கலாச்சார பிரச்சினை, தொழிலாளர் பிரச்சினை என பல துறைகள் பற்றியும் கருத்து சொல்பவர். தன் கருத்துக்களை கட்டுரைகளாகவும் எழுதுபவர். இவை எல்லாம் விட அவர் ஒரு களப் பணியாளராகவும் உள்ளார். பெரும்பாலும் பயணம் செய்து கொண்டே இருப்பவர். அறிவொளி இயக்க அனுபவங்களையும், தொழிற்சங்க அனுபவங்களையும் நூலாக எழுதியுள்ளார். இவர் களப் பணியாளராக இருப்பதனால் புனைவுகள் எழுத முடியாமல் போகிறது. "என் வாழ்க்கை என் எழுத்து" என்ற தலைப்பில் நம்மோடு உரையாடுவார் பிறகு நாம் அவரோடு விவாதிக்கலாம் என கூறி ஞாநி தொடக்க உரையை நிறைவு செய்தார்.

ச. தமிழ்செல்வன்

எதை நாம் முக்கியம் எனக் கருதுகிறோமோ அதை நம்மால் செய்து முடிக்க முடியும். ஒரு காலத்தில் கதை எழுதுவது முக்கியம் என கருதியதால் கதைகள் எழுதினேன். "வெயிலோடு போய்" என்ற என் முதல் சிறுகதை தொகுப்பு வெளிவந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் இரண்டாவது கதைத் தொகுப்பு வந்தது. நான் 33 ஆண்டுகளில் 32 சிறுகதைகளை மட்டுமே எழுதியுள்ளேன். வருடத்திற்கு ஒரு சிறுகதை கூட வெளிவரவில்லை.

என் அப்பா வழி தாத்தா தலையாரியாக வேலை பார்த்தார். என் அம்மா வழி தாத்தா மதுரகவி பாஸ்கரதாஸ் நாடகக்காரர். என் அப்பா எழுத்தாளர். தீவிர தி.மு.க. அனுதாபி. எங்கள் வீடு நிறைய புத்தகங்கள் இருக்கும். எங்கள் சிறுவயதில் புத்தகங்கள் மீதுதான் விளையாடுவோம். எங்கள் அப்பா வேலை மாறுதல் காரணமாக பல இடங்களுக்கு மாறிக் கொண்டு இருந்ததனால் எங்கள் அத்தைதான் எங்களை வளர்த்தார். அவர் ஒரு விதவை. தன் வாழ்க்கையை எங்களிடம் கதைகதையாகச் சொல்லுவார். நான் ஆறாவது படிக்கும்போதே எழுத ஆரம்பித்து விட்டேன். நான் எழுத்தாளனாக மாறியதில் வியப்பு ஏதுமில்லை. முதல் தலைமுறை படிப்பாளிகள் படைப்பாளியாக மாறுவதுதான் சாதனை என நினைக்கிறேன்.


ச. தமிழ்செல்வன் பங்கேற்ற கேணி நிகழ்வை ஒலி வடிவில் கேட்க

http://koodu.thamizhstudio.com/ilakkiyam_seithigal_keni11.php



1 comment:

தமிழ்பாலா said...

குறும்படங்களுக்கான தளத்தின் முன்னேற்றத்திற்கு எனது கோடி வணக்கங்கள்

Post a Comment