Wednesday, September 16, 2009

தங்க மீன்கள் முத்தமிடும் கால்கள்

தங்க மீன்கள் முத்தமிடும் கால்கள்

A Film by
Year --
Run time : --


“துடிக்கிற ஆட்டத்தை திரையிலே பார்த்திருக்கேன்,
விசில் அடிக்கிற கூட்டத்தில் தரையிலே ஆடிருக்கேன்”
- இளையராஜா “ நாயகனில்

திரைப்படங்களை திரையரங்குகளில் தான் மக்கள் காலகாலமாய் கண்டு களித்து வந்திருக்கின்றனர். இப்போது அந்த அனுபவமே ஒரு பழங்கதையாய் மாறிவிட்டது போலிருக்கிறது. வீட்டுக்கு வீடு வந்துவிட்ட சின்னத்திரை, திரைப்படம் பார்க்கும் அனுபவத்திற்கே ஒரு மாற்றத்தை கொண்டுவந்துவிட்டது. திரைப்படங்கள் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில், திரையில் பாய்ந்து வந்த புகைவண்டியை கண்டு பயந்து ரசிகர்கள் வெளியே ஓடினார்களாம். மௌனப்பட காலத்தில் ஒவ்வொரு ரீல் மாற்றும்போதும், நாட்டிய நிகழ்ச்சிகளும் மாஜிக் நிகழ்ச்சிகளும், திரைக்கதையை விளக்கிக் கூறும் கலைஞர்களின் உரை நிகழ்ச்சிகளும் நடைபெற்றனவாம்.

பின்னர் பேசும் படங்கள் வந்தபோது பெற்ற அனுபவங்கள் வேறு வகையானவை. சினிமாஸ்கோப், 70 எம் எம், 3டி, சினிரமா, ஸ்டீரியோபோனிக் ஒலி என்று புதுப்புது கண்டுபிடிப்புகள், ரசிகர்களை எப்போதும் வியப்பிலாழ்த்தி வந்திருக்கின்றன. தந்திரக்காட்சிகளும், இரட்டை வேடக்காட்சிகளும் இப்போது காணக்கிடைக்கும் டிஜிடல் சாகசங்களும் எப்போதும் ரசிகர்களை தியேட்டருக்கு இழுத்துக்கொண்டேதான் இருக்கும்.

சின்னத்திரையின் ஆதிக்கத்திற்கு முன்னிருந்த அந்தக்காலத்தை நினைத்துப் பார்ப்போம். இப்போதைய கறுப்பு மார்க்கெட்டில் டிக்கட் விற்று காசு பார்க்கும் ரசிகர் மன்றங்கள் அப்போது இல்லை. முழு ஈடுபாட்டோடு கைக்காசை செலவழித்து தோரணம் கட்டி விழா எடுத்து அப்போதைய கதாநாயகர்களின் நிலையை உயர வைத்த அப்பாவிகள்தான் அப்போது இருந்தனர். பின்னர் அரசியல் உள்ளே புகுந்து ரசிகர் மன்றங்களை அதிகார பீட ஏணிகளாக மாற்றியது அனைவரும் அறிந்த கதைதான். இப்போது கூட, அரசியலில் நுழைய இருக்கும் ஒரு நடிகருக்கு, தினமும் ஒரு “நற்பணி மன்றம்” ஏற்படுத்திக் கொண்டுருக்கும், அரசியல் கனவில் திளைக்கும் புத்திசாலி இளைஞர்களை உங்களைச் சுற்றிலும் பார்க்கலாம். வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை என்ற அரசியல் காஸ்ட்டியூமில் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட இவர்களை, மாலை முரசிலோ, மலரிலோ கட்டாயம் பார்த்திருக்கலாம். அப்போது புதுத்திரைப்படம் திரையிடப்படும் திரையரங்கிற்கு வெளியே முதல் நாளிரவே நூற்றுக்கணக்கில் சைக்கிள்கள் வரிசையில் அணிவகுத்து நிற்கும். கோவைப் பகுதியில் சைக்கிள் டிக்கட் என்று ஒரு பிரிவே இருந்தது. பாட்டுப் புத்தகங்கள் விற்பனை கொடி கட்டி பறக்கும். கைகளால் வரையப்பட்ட பேனர்களையும், கட் அவுட்களையும் ஓவியக்கூடத்திற்கே சென்று பார்த்து மகிழ்ந்தினர் ரசிகர்கள். நிரம்பி வழியும் தியேட்டரில் படம் பார்ப்பதே உற்சாக அனுபவம். அதுவும் தரை டிக்கெட் என்று அழைக்கப்பட்ட கீழ் வகுப்பில் மகிழ்ச்சியும் ஆரவாரமும் கொடி கட்டிப் பறக்கும். முதலாளிகளே பிளாக்கில் டிக்ககெட் விற்கும் ஈனப்பிழைப்பும், டெலிபோன் புக்கிங் என்ற பெயரில் டிக்கெட்டிற்கு ஐந்து ரூபாய் கூட்டி விற்கும் கொள்ளையும் இருந்ததில்லை. சுத்தம் செய்யப்படாத கழிவறைகளும், காண்டீன் கொள்ளைகளும் உடைந்த நாற்காலிகளும், பழைய கார்பனில் மங்கலாக படம் காட்டும் தொழில் நுட்பமும் இருந்ததேயில்லை.

நல்ல, மற்றும் பிறமொழிப்படங்களை காட்டுவதற்காக சனி, ஞாயிறுகளில் காலைக்காட்சிகளும் இருந்தன. சில சமயம் குறைந்த கட்டண காட்சிகளும் இருந்தன. அப்போது தினசரி மூன்று காட்சிகள் தானே. சாந்தாராம், ராஜ்கபூர் படங்களையெல்லாம் இந்த காலைக்காட்சிகளில் தான் நிறைய ரசிகர்கள் பார்த்தனர். எழுபதுகளில் மாணவப் பருவத்தில் சத்யஜித்ராய் படங்களை காலைக்காட்சிகளில் சென்னை கிருஷ்ணவேணி தியேட்டரிலும், கலைவாணர் அரங்கிலும் நிறைய பார்த்திருக்கிறேன்.

கோவை ஸ்ரீபதி தியேட்டரிலும் சில மாதங்கள் தினமும் இன்டர் ஷோ என்ற பெயரில் இரவு 8 மணிக்கு ஐரோப்பிய திரைப்படங்களை திரையிட்டு த்ரூபோ, ஃபாஸ்பைண்டர், ஜானுஸ்ஸி, போன்ற மேதைகளை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.

ஃபிலிம் சொசைட்டிகள் என்று அழைக்கப்பட்ட திரைப்படக் கழகங்களை நிறைய நகரங்களில் அறிவு ஜீவிகள் உருவாக்கி நல்ல திரைப்படங்களை சிறய குழுக்களுக்கு திரையிட்டு விவாதங்களையும் நடத்தி விழிப்புணர்ச்சி ஏற்படுத்தலாயினர். மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் பரவலாக சினிமா ரசனையை உயர்த்திய இந்தக் குழுக்கள் பின்னர் தமிழகத்திலும் பரவினர். திரையரங்குகளில் திரையிட வசதியற்ற 16 எம் எம் படச்சுருளைக் கொண்டு தான் திரையிடல்கள் நடைபெறும். பெரும் பாலும் ஒரு சிறிய அறையிலோ, அரங்கிலோதான் இந்நிகழ்ச்சி நடைபெறும். காற்றோட்டமில்லாத அறைகள், அமர வசதியற்ற நாற்காலிகள், சப் டைட்டிலை மறைக்கும் முன்னால் அமர்த்திருக்கும் சக ஜீவிகளின் தலைகள், என்று இப்படியும் அரங்குகளை, தேடித் தேடி திரைப்படங்களை திரையிட்டனர். ஆனால் பொருளாதார ஆதரவற்றதனால் நிறைய கழகங்கள் காணமல் போயின. ஆனாலும் மறக்க இயலா அனுபவத்தையும் திரைப்பட...

To read more please click.. www.thamizhstudio.com


பன்னாட்டு லயன்ஸ் சங்கம் 324 A2 மாவட்டம் நடத்தும் 'படைப்பிலக்கிய போட்டி 2009-2010 (இறுதித் தேதி அக்டோபர் 31, 2009 (31-10-2009) )


பன்னாட்டு லயன்ஸ் சங்கம் 324 A2 மாவட்டம் நடத்தும் 'படைப்பிலக்கிய போட்டி 2009-2010 (இறுதித் தேதி அக்டோபர் 31, 2009 (31-10-2009) )


திருத்தரைப்பூண்டியை சேர்ந்த பன்னாட்டு லயன்ஸ் சங்கம் 324 A2 மாவட்டம் நடத்தும் 'படைப்பிலக்கிய போட்டி 2009-2010 க்கான குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன.

பரிசுகள்:

ஐந்து படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொரு படத்துக்கும் ஐயாயிரம் வீதம் 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

நிபந்தனைகள்:

1. குறும்படங்கள் 2000 ஆம் ஆண்டிற்கு பிறகு எடுக்கப்பட்டவனாக இருக்க வேண்டும். ஆவணப்படங்கள் போட்டிக்கு ஏற்புடையதல்ல.

2. குறும்படங்கள் முப்பது (30) நிமிடத்திற்கு மேற்படாத கால அளவு கொண்டிருத்தல் வேண்டும்.

3. குறும்படத்தின் இரண்டு சி.டி. க்களை அனுப்ப வேண்டும்.

4. போட்டிக்காக குறும்படத்தை அனுப்புகிறவர் எந்த உரிமையில் அதனை அனுப்புகிறார் என்பதை குறிப்பிட வேண்டும்.

5. தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.

6. குறும்படங்கள் வந்து சேர வேண்டிய இறுதித் தேதி அக்டோபர் 31, 2009 (31-10-2009)

7. குறும்படங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
லயன் உத்தமசோழன்
மாவட்டத் தலைவர் - கலை இலக்கியம்
525, சத்யா இல்லம், மடப்புரம் - 614715
திருத்தரைப்பூண்டி
தொலைபேசி: 04369 223292
அலைப்பேசி: 9443343292

(நிபந்தனைகள் குறித்தோ, போட்டிக் குறித்தோ ஏதோனும் ஐயங்கள் இருப்பின் போட்டியை நடத்தும் அமைப்பினரை தொடர்பு கொள்ளவும். போட்டி தொடர்பாக தமிழ் ஸ்டுடியோ.காம் நிர்வாகத்தை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.)



Sunday, September 6, 2009

ஈழம் தொடர்பான குறும்படங்கள் தேவை.



பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி புரியும் சிலர் ஒன்றாக இணைந்து Save-Tamils movement என்ற அமைப்பின் மூலமாக கடந்த 10 மாதங்களாக செயல்பட்டு வருகிறோம். ஈழப் பிரச்சனையை எங்கள் துறையை சார்ந்தவர்களிடமும் மற்றும் வெகுஜன மக்களிடமும் எடுத்து செல்ல சில நிகழ்வுகளை நடத்தி இருக்கிறோம். எங்களின் அடுத்த நிகழ்வாக “மனித உரிமை மீறல்கள்” என்ற தலைப்பில் ஒரு குறும்பட திரையிடல் நடை பெற இருக்கிறது. இதற்காக மனித உரிமை மீறல்கள் மற்றும் முக்கியமாக ஈழம் தொடர்பான குறும்படங்களை சேகரித்து வருகிறோம். உங்களில் யாராவது தங்களிடம் உள்ள ஈழம் சார்ந்த குறும்படங்களை எங்களுக்கு கொடுத்து உதவலாம். கண்டிப்பாக எந்த ஒரு வியாபார நோக்கோடும் எங்கள் செயல்கள் இருக்காது என்று உறுதி அளிக்கின்றோம்.
நன்றி,

தொடர்புக்கு

சரவணகுமார்
43/6, பஜார் வீதி,
நெசபாக்கம், கே.கே நகர்.
சென்னை 600 078
செல் பேசி: (91) 98400 90898
மின்னஞ்சல்: savetamil@gmail.com

எங்களின் முந்தைய நிகழ்வுகள்
www.save-tamils.blogspot.com


Wednesday, September 2, 2009

தீபிகா சமூகத் தொடர்பு கல்வி மையம் நடத்தும் விழிப்புணர்வு விளம்பரப் படப் போட்டி (இறுதித் தேதி: 12-09-09 மாலை 5 மணிக்குள்.)



சென்னையை சேர்ந்த தீபிகா சமூகத் தொடர்பு கல்வி மையம் நடத்தும் விழிப்புணர்வு விளம்பரப் படப் போட்டிக்கான விளம்பரப்படங்கள் வரவேற்கப்படுகின்றன.

பரிசுகள்:

முதல் பரிசு: ரூபாய் 5000
இரண்டாம் பரிசு: ரூபாய் 3000
மூன்றாம் பரிசு: ரூபாய் 2000


போட்டி விதிமுறைகள்:

1. ஒருவர் எத்தனை விளம்பரப் படங்களை வேண்டுமானாலும் அனுப்பலாம். ஆனால் போட்டிக்காக ஒன்றை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும்.

2. படைப்புகள் 2D, 3D, கார்ட்டூன், அசையும் பிம்பங்களாக (Creative Animation) வும் இருக்கலாம்.

3. விளம்பர கால அளவு 60 வினாடிகள் மட்டுமே (பெயர், மற்ற விபரங்கள் உட்பட).

4. சிறந்த மூன்று விளம்பரப் படங்களுக்கு மேற்கண்ட மூன்று பரிசுத் தொகையும், போட்டியில் கலந்துக் கொள்ளும் அனைத்து படைப்புகளுக்கும் தீபிகாவின் சான்றிதல்களும் வழங்கப்படும்.

4. போட்டியில் கலந்துக் கொண்ட சிறந்தப் படைப்புகளை 19-09-09 அன்று தீபிகா அரங்கில் திரைட்டு, படைப்பாளிகளுக்கு பாராட்டு விழாவும் நடத்தப்படும். பரிசுத் தொகைகளும் அன்றே வழங்கப்படும்.

5. நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

6. போட்டிக்காக அனுப்பப்பட்ட எந்தப் படைப்பையும் திருப்பி அனுப்ப இயலாது.

7. தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த விளம்பரப் படங்களை சமூக நலன் கருதி, திரையரங்கு, தொலைகாட்சி ஆகியவற்றில் படைப்பாளியின் பெயர் மற்றும் விபரங்களுடன் ஒலிபரப்பு செய்ய முயற்சிகளின் மேற்கொள்ளப்படும்.

அனுப்ப வேண்டியவை:

1. படைப்பாளிகளின் பெயர் உள்ளிட்ட முழு விபரம், தொடர்பு முகவரி மற்றும் உடன் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய DBICA முகவரிக்கு நேரிலோ, அல்லது அஞ்சலிலோ அனுப்பி வைக்கலாம்.

2. படைப்புகளை DVD யாக அனுப்பி வைக்க வேண்டும்.

3. படைப்பு தொடர்பாக எந்தப் பிரச்சனை எழுந்தாலும், அதன் படைப்பாளியே முழுப் பொறுப்பேற்க வேண்டும். அதற்கான உறுதி மொழிக் கடிதத்தையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

4. படைப்புகள் வந்து சேர வேண்டிய இறுதித் தேதி: 12-09-09 மாலை 5 மணிக்குள்.

* படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி:

இயக்குனர் - தீபிகா
45, லேண்டன்ஸ் சாலை,
கீழ்ப்பாக்கம், சென்னை 600010
தொலைபேசி: ௦044 - 26423930 / 26651435

for more competition visit: www.thamizhstudio.com