Sunday, January 30, 2011

ஆன்டன் செகாவ் - 150 ஆண்டுகள்



ஆன்டன் செகாவ் - 150 ஆண்டுகள்

(திரு. எஸ். ராமகிருஷ்ணன் உரையின் எழுத்து வடிவம்)

கமலாலயன்


21-01-2011 அன்று சென்னை LLA சிற்றரங்கத்தில் 'கூட்டாஞ்சோறு - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் - கலைஞர்கள் சங்கம் - நான்காவது அரங்கு நடத்திய ஆன்டன் செகாவ்-151வது பிறந்த நாள் விழாவில் தமிழின் ஆகச்சிறந்த படைப்பாளிகளுள் முன்வரிசைக்காரரான திரு, எஸ்,ராமகிருஷ்ணன் ஆற்றிய உரை :-

ஆன்டன் செகாவைப் பற்றிப் பேசுவதற்கு நான் இந்த ஆண்டு பிறந்தது முதலே காத்துக் கொண்டிருந்தேன், இது. செகாவ் பற்றி நான் பேசுகிற நான்காவது கூட்டம், செகாவ் மீது பனி பெய்கிறது என்ற எனது புத்தகத்தை மாஸ்கோ நகர மேயர் வெளியிட்டிருக்கிறார், 150 ஆண்டுகளுக்கு முன்பு. ஜனவரி 29-ம் தேதி பிறந்து 44 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தவரான ஆன்டன் செகாவைப் பற்றி இன்றைக்கு நாம் ஏன் பேச வேண்டும்? அவருக்கு எதற்காகப் பிறந்தநாள் விழா கொண்டாட வேண்டும்? என்னைக் கூட ஒருவர் கேட்டார் : நீங்கள் ஏன் செகாவிற்கு விழா எடுக்கிறீர்கள்? இங்கே நமது புதுமைப்பித்தனுக்கு விழா எடுக்கலாமே? என்று, நாம் புதுமைப்பித்தன் உட்பட முக்கியமான எல்லா எழுத்தாளர்களுக்குமே விழா எடுத்திருக்கிறோம், செகாவைக் கொண்டாடுவது என்பதே புதுமைப்பித்தனைக் கொண்டாடுவது போல்தான், இவரைப் போலவே அவரும் நையாண்டியாக (satire) எழுதுவதில் தேர்ந்தவர், நகைச்சுவை உணர்வு அவருடைய எல்லா எழுத்துக்களிலும் ததும்பி நிற்கும்.

செகாவ் எழுதிய நாட்குறிப்புகளில் இருந்து தொடங்குகிறேன், அவர் எழுதிய ஒரு குறிப்பு இது :

தினமும் அவர் பார்த்துக் கொண்டிருந்த ஒரு காட்சி - காரில் வருகிற செல்வந்தர் ஒருவர். பல்கலைக்கழகத்தின் வாயிலில் சாலையோரமாகக் காரை நிறுத்தச் சொல்ல. கண்ணாடியை இறக்கி விட்டு 'த்தூ' என்று பல்கலைக்கழகத்துப் பக்கமாகப் பார்த்து துப்பிவிட்டு உடனே மறுபடி கண்ணாடியை ஏற்றியபடி போய்விடுவாராம், வேறு ஒரு வார்த்தைக் கூடப் பேசுவது கிடையாது, காரோட்டிக்கு. அந்த இடம் வந்ததுமே தன்னிச்சையாகக் காரை நிறுத்தி விடுகிற அளவுக்கு இது பழக்கமாகி விட்டது, இதை செகாவ் பதிவு செய்திருக்கிறார், எதற்காக அந்தச் செல்வந்தர், தினமும் சரிலிக்காமல் இப்படிச் செய்ய வேண்டும்? பல்கலைக்கழகத்தின் மீது அவருக்கு அப்படி என்ன கோபம்? அவரது கோபம் ஆசிரியர்கள் மீதா,, கல்வித் திட்டத்தின் மீதா,, பல்கலைக்கழகப் பாடங்களின் மீதா,,? ஏதோ ஒன்றின் மீது அவரது கோபம் இப்படி வெளிப்படுகிறது, இதை ஏன் செகாவ் பதிவு செய்ய வேண்டும்?

ஒரு பையன். அவனுடைய தேர்வுத்தாளை மாலையில் அவன் வீடு திரும்பியதும் வாங்கிப் பார்க்கிறார் தந்தை, 5 மதிப்பெண் வாங்கி வந்திருக்கிறான் பையன், தந்தைக்குக் கண்மண் தெரியாத கோபம், பையனைப் போட்டு அடிஅடி என்று அடிக்கிறார், அவன் பரீட்சைப் பேப்பரைக் காட்டி ஏதோ சொல்ல வருகிறான், ஆனால் அப்பா கேட்பதாக இல்லை, வெளுத்து வாங்கி விட்ட பிறகுதான் ஓய்கிறார், மறுநாள் காலை - பையனை இழுத்துக் கொண்டு பள்ளிக்குப் போகிறார், தலைமை ஆசிரியரைப் பார்த்து ஆத்திரத்துடன் கேட்கிறார் : என்ன பாடம் நடத்தறீங்க நீங்க? என் பையன் 5 மார்க் வாங்கிக் கொண்டு வருகிறான், இதுதான் நீங்க சொல்லித்தரும் லட்சணமா - அதுவா,, இதுவா,,? என்று திட்டும் அப்பாவிடம். தலைமையாசிரியர் அமைதியாகச் சொல்லுகிறார் : ஐயா. உங்கள் பையன் 5க்கு 5 மார்க் வாங்கியிருக்கிறான், அதைக் கவனிக்கவில்லையா நீங்கள்? - தந்தை திடுக்கிட்டுப் போய்த் தன் கையிலுள்ள பேப்பரைப் பார்க்கிறார், பையன் 5க்கு 5 மார்க்தான் வாங்கியிருக்கிறான்.

இதை ஏன் நீ நேற்று சொல்லவில்லை,,? என்று பையன் மீது பாய்கிறார், அதைச் சொல்வதற்குத் தானே அப்பா நான் பலமுறை முயற்சி செய்தேன், நீங்கள் காது கொடுத்துக் கேட்காமலே அடித்தீர்கள்,,, என்கிறான், தந்தைக்கு அப்போதும் தான் செய்த தவறு புரியவில்லை, அவருக்கு அதுபற்றி எந்தக் குற்ற உணர்வும் இல்லை.

இது செகாவ் எழுதிய ஒரு கதை, இதில் வருகிற பையன் செகாவ்தான், சிறு வயதில் இப்படி அப்பாவிடம் தினமும் எடுத்ததற்கெல்லாம் அடிவாங்கி வளர்ந்தவர்தான் அவர்.

செகாவ். எந்த ஓர் ஆசிரியரைப் பார்த்தாலும் உடனே தலைகவிழ்ந்து கொள்கிறார், அவமானமும். குற்ற உணர்வும் அவரை ஆட்கொண்டு விடும், ஆசிரியரின் முகத்தையோ - கண்களையோ நேராகப் பார்ப்பதே கிடையாது, காரணம். அன்றைக்கு ஆசிரியர் என்பவர் மதிக்கத்தக்கவராக - ஓர் ஆசிரியருக்குரிய பண்பு நலன்கள் உடையவராக இருந்ததில்லை, ஆசிரியரின் தோற்றம். நடத்தை. அவரது அணுகுமுறை பற்றி. அன்றைக்கு நிலவிய கல்வி முறை பற்றி. சமூகத்தைப் பற்றி - சூழ்ந்துள்ள பல விஷயங்களைப் பற்றி செகாவ் தீவிரமான விமர்சனங்களுடன் இருந்தவர், சமூகத்தின் குரலாக ஒலித்தவர், மாற்றுக் கல்வி பற்றி எழுதியதுடன் தானே ஒரு பள்ளியையும் நடத்தியவர், இந்த வகையில் செகாவ் - டால்ஸ்டாய் இருவரும் நமது மகாத்மா காந்திக்கு முன்னோடிகள், காந்தி தென்னாப்பிரிக்காவில் நடத்திய பள்ளிக்கு......


more: http://koodu.thamizhstudio.com/katturaigal_16.php



No comments:

Post a Comment