Sunday, November 7, 2010

கதை சொல்லி - 'கோவை' ஞானி (Kovai Gnani)

கதை சொல்லி - 'கோவை' ஞானி (Kovai Gnani)

லிவி

கதை சொல்லிக்காக கோவை ஞானியை அணுகியபோது "நான் சிறுகதை எழுத்தாளனோ, நாவல் ஆசிரியரோ அல்ல! என்னிடம் என்ன கதை கேட்க போகீறீர்கள்?" என சற்றே தயங்கினார்." நீங்கள் எழுதிய கதை தான் கூற வேண்டும் என்று இல்லை, நீங்கள் படித்த கதைகள், உங்களுக்கு யாரேனும் சொல்லக் கேட்டு பிடித்த கதைகள் எதை வேண்டுமானாலும் சொல்லலாம்" என்று எடுத்துக் கூறிய பிறகு ஒப்புக்கொண்டார்.கோவை ஞானி நவீனத் தமிழிலக்கியத்தில் உள்ள மிகச் சிறந்த விமர்சகர். அவருடைய பார்வை மார்க்ஸிய தன்மை கொண்டதெனினும் இலக்கியத்தை இலக்கிய விதிகளால் அணுகியவர்.அதனாலே மிகச் சிறந்த விமர்சகராக இன்றும் கொண்டாடப் படுகிறார். ஜெயமோகனின் முதல் சிறுகதையை சுந்தரராமசாமி பிரசுரிக்க மறுத்தபோது அக் கதையை முதலில் பிரசுரிக்க செய்தவர் ஞானி. இன்று ஜெயமோகன் தமிழ் கூறும் நல்லுலகின் தவிர்க்க இயலாத எழுத்தாளர். இதுவே அவர் புகழுக்குச் சான்று. கோவை ஞானியை கோவையில் உள்ள வெள்ளக் கவுண்டன் பிரிவு என்னும் அவர் ஊரில் கதை சொல்லிக்காக் சந்தித்தேன்.

கோவை ஞானி தன் கண்களை இழந்திருந்தார். அவரின் உதவிக்காக பெண் வாசிப்பாளர் ஒருவரை வேலைக்கு அமர்த்தி வைத்திருந்தார். எம்மை இன்முகத்துடன் வரவேற்ற பிறகு அவர் தம் அறைக்கு அழைத்துச் சென்றார். அறை முழுதும் அலமாரியில், தரையில் என அடுக்கி வைக்கப்பட்ட எண்ணற்ற புத்தகங்கள். கதை சொல்லிக்காக பதிவு செய்யத் தொடங்கினோம். மிக ஆர்வமுடன் கதைகளை கூறத் தொடங்கியவர், மளமளவென கதைகளை சொல்லிக் கொண்டே போனார். மணிமேகலையிலிந்து கதைகள், தான் படித்து பிடித்த கதைகள், தன் சிறு வயதில் சந்தித்த நக்ஸல் தோழர் ஒருவர் என கதைகளை அடுக்கிக் கொண்டே போனார். தாத்தாவிடம் பேரன் கேட்கும் கதைகளை போல் மெய்மறந்து கதைகளை கேட்டுக் கொண்டிருந்தேன். இடையில் அவர் மனைவி தேநீருடன் பலகாரங்கள் என அன்புடன் உபசரித்தார். பிறகும் கதைகளை தொடர்ந்து பதிவு செய்யத் தொடங்கினோம். அறையின் வெளியே அமர்ந்திருந்த என் நண்பன் கையை பார்த்து ஆருடம் சொல்லிக் கொண்டிருந்தார் அவர் மனைவி.

கதைகளை பதிவு செய்து முடித்த பிறகு இலக்கியம் பற்றிய உரையாடல்களில் எங்கள் பேச்சு தொடர்ந்தது. ஜெயமோகன் பற்றி அவர் பகிர்ந்து கொண்ட நினைவுகள் சுவாரசியமானவை. ஜெயமோகன் தன் முதல் சிறுகதையை எழுதி சுந்தரராமசாமியிடம் கொடுத்திருக்கிறார். "இது கதையே இல்லை" எனக் கூறி அதை பிரசுரிக்க மறுத்து விட்டார். பின்னர் ஜெயமோகன் அதைக் கோவை ஞானியிடம் கொடுத்தருக்கிறார். அக்கதையை பாராட்டி அதை பிரசுரம் பண்ணியிருக்கிறார் கோவை ஞானி. இதை ஜெயமோகன் சுந்தரராமசாமியிடம் தெரிவித்திருக்கிறார். அதற்கு அவர் "கோவை ஞானிக்கு இலக்கியம் தெரியாது" என்றிருக்கிறார். இன்றைக்கு ஜெயமோகன் அடைந்திருக்கும் உயரங்களை வைத்து நான் "சுந்தரராமசாமிக்கு இலக்கியம் தெரியாது!" எனக் கூறலாமா என்றார் கோவை ஞானி. முன்பெல்லாம் ஜெயமோகன் அடிக்கடி கோவை வருவாராம், வந்து ஞானியுடன் சிலப்பதிகாரத்திலிருந்து சமகால இலக்கியம் வரை பேசிக் கொண்டிருப்பார்களாம். ஜெயமோகன் தன் ஆசானாக் குறிப்பிட்டவர்களில் கோவை ஞானியும் ஒருவர். ஒரு முறை ஜெயமோகனிடம் "இந்திய ஜனநாயகம் எவ்வாறு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது" என்ற கேள்விக்கு 'மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாக' பதில் சொல்லியிருக்கிறார். அதற்கு ஞானி "ஜெயமோகன் ...........

மேலும்:


http://koodu.thamizhstudio.com/kadhaisolli_5.php




No comments:

Post a Comment