Tuesday, November 23, 2010

தமிழ்ஸ்டுடியோ.காம் நடத்திய பத்தாவது பௌர்ணமி இரவு



தமிழ்ஸ்டுடியோ.காம் நடத்திய பத்தாவது பௌர்ணமி இரவு

(10th Full Moon Day Film Screening)


அக்கினிப் பார்வை21-11-2010


ஓவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளன்று நிலா வெளிச்சத்தில், திரைப்படங்கள் பார்த்து, நிலா சோறு சாப்பிட்டு, நிலா வெளிச்சத்தில் திரைப்படங்களைப் பற்றி இரவெல்லாம் பேசி மகிழும் பௌர்ணமி இரவு இந்த மாதம் திட்டமிட்டபடி இனிதாக நடந்து முடிந்தது.

பௌர்ணமி இரவின் முதல் பகுதியாக குறும்படம் திரையிடல் தொடங்கியது, அதில் கணபதி இயக்கிய வாழ்க ஜனநாயகம் குறும்படம் திரையிடப்பட்டது.

வாழ்க ஜனநாயகம் படம் தமிழ் நாட்டில் பணநாயகம் எப்படி ஜனநாயகத்தை வீழ்த்துகிறது என்பதை பற்றிய பாடம். ஜனநாயக நாட்டில் பணம் வாங்கிகொண்டு அனைத்து கட்சிகள் சார்பாக செய்திகள் கருத்துகணிப்புகள் அனைத்து கட்சியுமே வெற்றிபெறும் என்று ஆருடம் சொல்லுவதும் அதை ஒரே தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளார் கட்சி கொடிகளின் வண்ணம் மாற்றி தலைல் கட்டி கண்டு அந்தந்த கட்சி தான் வெற்றி பெறும் என சொல்ல மக்கள் தலை பிய்த்துக்கொள்ள, “விடுங்கள் மக்களுக்கு தலையை பிய்த்துக்கொள்ளவாவது சுதந்திரம் இருக்கிறதே அது தான் ஜனநாயகம் என்ற வசனம் நிறையவே யோசிக்க வைத்து.

மிக நல்ல குறும்படம் நேரம் கிடைத்தல் நிச்சயம் பாருங்கள்.

அதை தொடர்ந்து அனைவரும் நிலா சோறு உண்டோம், மொட்டைமாடி சுற்றி தீப திருவிழா கோலாகலம், வாண வேடிக்கைகள் நடுவில் இங்கு மொட்டை மாடியில் மாற்று சினிமாவுக்கான தீப விழாவை நாம் கொண்டாடினோம்.

அதை தொடர்ந்து "தெ சிட்டி ஆஃப் லாஸ்ட் சில்ட்ரன்" எனும் பிரென்ச்சு படம் ஒளிபரப்பபட்டது. ஒரு சுயநலம் பிடித்த விஞ்ஞானி தன் குழந்தை பருவ ஆசைகளை நிறைவேற்றவும், அதிக சக்தி பெறவும், குழந்தைகளை கடத்தி அவர்களின் கனவுகளை திருடுகிறான் அவனிடம் மாட்டிக்கொண்ட தன் சகோதரனை எப்படி மீட்கிறான் டாம் எனும் கழக்கூத்தாடி என்பது தான் கதை.

மிக தொழிநுட்ப அம்சங்கள் நிறந்த அருமையான திரைக்கதையை கொண்ட இந்தபடம் லேசான குழபத்தையும் பெருமளவில் தொழிநுட்ப அழகையும் கொடுத்தது. அதை தொடர்ந்து வழக்கமான அரட்டை கச்சேரி ஆரம்பாமகியது, தமிழ் சினிமா, மாற்று சினிமா, கோவை என்கவுண்டர், மைனா என்று பல விடயங்களை மிக தீவிரமாக, தெளிவாக அலசினோம்.

அதிகாலை நெருங்க தொடங்கியவுடன் எங்களை தூக்கம் ஆர தழுவ அனைவரும் கிளம்பினோம்.

சரி ஒவ்வொரு பௌர்ணமி இரவும் நிகழ்வு தான் ஆனல் ஒவ்வொரு முறையும் நம்முடன் ஒத்த கருத்துடய நணபர்கள் கிடைப்பது தான் அதன் முதல் சுவாரசியம். இயந்திர கதியான உலகில் இயந்திரமாகவே மாறிவிட்ட நாம், நமக்கு பிடித்த விடயம் முதல், ஒரு நண்பருடன் பேசினால் கூட என்ன பலன் கிடைக்கும் என்று கணகிட்டு வாழும் மனிதர்களிடையே, மனிதான இருக்கும் ஒரு முயற்சி தான் பவுர்ணமி இரவு.

பல தரப்பட்ட மக்கள், பல தரப்பட்ட அனுபவங்கள், பல விடயங்கள், அனுபவங்கள் என்று சினிமா துறையில் சாதிக்க நினைக்கும் அனைவருக்குமே ஒரு ஊக்குவிக்கும் சக்தியும், ஒரு களம், ஒரு அனுபவ கையேடு தான் பவுர்ணமி இரவு..

அட இதெல்லாம் படிச்சா புரியாது சார் வந்து அனுபவிக்கனும்..

(இந்த மாதம் முதல் பௌர்ணமி இரவு நிகழ்ச்சியை வழி நடத்தும் பொறுப்பு முருகேசன் அவர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது.)

நிகழ்வு தொடர்பாக மேலும் ஒளிப்படங்களைக் காண:

http://picasaweb.google.com/thamizhstudio/ahdebI#



No comments:

Post a Comment