Wednesday, December 1, 2010

'விருந்து' நாடக நூல் வெளியீட்டு விழா



'விருந்து' நாடக நூல் வெளியீட்டு விழா


சா.ரு. மணிவில்லன்

பரிக்ஷா ராஜமணி எழுதிய ‘விருந்து’ நாடக நூல் வெளியீட்டு விழா 14.11.10 அன்று மாலை 7 மணியளவில் சென்னை டிஸ்கவரி புக் பேலஸ்-ல் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக பத்திரிகையாளர் ஞாநி, எழுத்தாளர் இந்துமதி, எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, நடிகை கலைராணி, ஜி.கே., நடிகர் பாரதிமணி, சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

‘விருந்து’ நாடகநூலை எழுத்தாளர் பாஸ்கர் சக்தி வெளியிட நடிகை கலைராணி பெற்றுக்கொண்டார்.

‘எனக்கு பிறந்த நாள் விழா பிடிக்கும். இன்று ராஜமணி சாருக்கு பிறந்த நாள். விருந்து நூல் வெளியீட்டு விழாவை குடும்ப விழாவாக பார்க்கிறேன்’ என்று நடிகை கலைராணி கூறினார்.

எழுத்தாளர் இந்துமதி

விருந்து நாடக நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது. பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. விருந்து உணர்வுபூர்வமான நாடகமாகும்.

நாடகத்தின் களமாக பிராமணியத்தை ஏன் தேர்ந்தெடுத்தார்? ராஜாமணியும் பிராமணர் என சொல்லக் கூடும். நாடகத்தில் பூநூலை அறுத்து எரிவது போன்று ஒரு காட்சி வருகிறது.

ஒரு சர்தார் தன் தலைப்பாகையை கழற்றி எரிவதாகவோ அல்லது ஒரு முஸ்லிம் தன் குல்லாவை கழற்றி எறிவதாகவோ அல்லது ஒரு கிறுத்துவர் தன் சிலுவையை கழற்றி எறிவதாகவோ காட்சி அமைத்து நாடகம் எழுத முடியுமா? முடியாது. ஏனென்றால் பயம். பிராமணியத்தின் மீது கைவைத்தால் யாரும் கேட்கமாட்டார்கள் என்று நம்பிக்கை. நவீன இலக்கியத்தில் ஷாக் ட்ரீட்மென்ட்-க்காக செய்வது போல் உள்ளது.

நடிகர் பாரதி மணி

விருந்து நாடகம் எனக்கு பிடிக்க வில்லை. நாடகம் மனதில் தோன்றியவுடனேயே எழுதிவிட வேண்டும் என்று அவசியமில்லை. பல மாதங்கள் மனதுக்குள் ஊறபோட வேண்டும். நாடகம் ஒரு சட்டகத்துக்குள் இல்லை. கதை களம், பெண்கள் சோரம் போதல் என விசயங்கள் திணிக்கப்பட்டுள்ளது.

சாமிநாதன்

விருந்து நாடகம் நல்ல முயற்சி. சமகால அரசியல் சூழலை உள்வாங்கி எழுதப்பட்டுள்ளது. இந்த முயற்சி மேலும் தொடர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

எழுத்தாளர் பாஸ்கர் சக்தி

தொடர்கதைக்கு பதிலாக இன்று சீரியல் உள்ளது. சீரியலை நாடகம் என சொல்வது தவறு. விருந்து நாடகத்தை நான் நேரமின்மை காரணமாக முழுமையாக வாசிக்க முடியவில்லை. அதனால் நாடகம் பற்றி கருத்து சொல்வதற்கில்லை. ராஜாமணிக்கு என்னைவிட வயது அதிகம். ஆனால் வயது வித்தியாசம் பார்க்காமல் நட்பு பாராட்டுபவர். நண்பர் என்ற முறையில் இந்த நூலை வெளியிட்டதில் பெருமை கொள்கிறேன்.

பத்திரிகையாளர் ஞாநி

1975 ஆண்டு முதல் ராஜாமணி பழக்கம். சரியாக 35 ஆண்டுகளாக நண்பர். பரிக்ஷா நாடக குழுவில் தொடர்ந்து செயல்படுபவர். துணுக்குகள், கட்டுரைகள், கதைகள் எழுதியுள்ளார். அவையெல்லாம் சனரஞ்சகமானவைகள் அதனால்தான் 35 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்தும் அவரை நாடகம் எழுதுமாறு சொன்னதே இல்லை.

ராஜாமணி ஓய்வு பெற்ற பிறகு உள்..........


More: http://koodu.thamizhstudio.com/ilakkiyam_seithigal_virundhu_nool.php




No comments:

Post a Comment