Friday, August 20, 2010

லெனின் விருது துவக்க விழா - 2010

படத்தொகுப்பாளர்-இயக்குனர் பீ.லெனின் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், அவர்களின் பெயரில் குறும்பட துறையில் செயல்படுபவர்களுக்கு "லெனின்" விருது துவக்க விழாவும் 15.08.2010 அன்று நடைபெற்றது. இந்த விருதை தமிழ் ஸ்டியோ.காம் வழங்குகிறது. லெனின் விருது துவக்க விழா 15.08.2010 (லெனின் பிறந்த நாள்) அன்று சென்னை இக்சா மையத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் ஜனநாதன், நடிகர் பாரதிமணி, கவிஞர் மதுமிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதல் நிகழ்வாக படத்தொகுப்பாளர் பீ.லெனின் இயக்கிய நாக் அவுட், குற்றவாளி (Culprit) ஆகிய இரு குறும்படங்கள் திரையிடப்பட்டன.

நாக் அவுட் குறும்படத்திற்கான சிறந்த இயக்குனர், குற்றவாளி குறும்படத்திற்கான சிறந்த படத்தொகுப்பாளர் என்ற பிரிவுகளில் பீ.லெனின் தேசிய விருது பெற்றுள்ளார்.

சிறப்பு விருந்தினர்களையும் குறும்பட ஆர்வலர்களையும் தமிழ் ஸ்டியோ குணா வரவேற்று பேசினார்.

குறும்பட இயக்குனர் பத்மநாபன் படத்தொகுப்பாளர் பீ லெனின் அவர்களில் வாழ்க்கை குறிப்பை வாசித்தார்.

குறும்பட இயக்குனர் யாழ்நிலவன்

லெனின் விருது தொடக்க விழாவினை கொண்டாடும் விதமாக குறும்பட திருவிழா சென்னை கோடம்பாக்கம் தமிழ் ஸ்டுடியோ அலுவலக மாடியில் மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை, 7.8.10 சனி முதல் 13.8.10 வெள்ளி வரை ஏழு நாட்கள் நடைபெற்றன.

சிறுகதைகளை அடிப்படையாக கொண்ட குறும்படங்கள் என்ற பிரிவில் செவ்ளி, கர்ணமோட்சம், நடந்த கதை, திற, கழுவேற்றம் ஆகிய குறும்படங்கள் திரையிடப்பட்டன.

ஆவணப் படங்கள் பிரிவில் கல் மனிதர்கள், சிட்டு ஆகிய இரு ஆவணப்படங்களும், பொது பிரிவில் செத்தாழை, கம்மாயில் கல்லு, இப்ப வருந்தி என்ன பயன், எச்சில் மனிதர்கள், நானும் என் விக்கியும் ஆகிய குறும்படங்களும்,

பிறமொழி குறம்பட பிரிவில் ரெட் பலூன் குறும்படமும்,

ஈழப்படங்கள் என்ற பிரிவில் என் வீட்டு முற்றத்தில் ஒரு மாமரம் என்ற குறும்படமும், முல்லை தீவு (படுகொலையின் கதை) என்ற ஆவணப் படமும் திரையிடப்பட்டன.

கடைசி நாள் விழா நாயகர் லெனின் அவர்கள் இயக்கிய தேசிய விருது பற்றிய படங்களான நாக் அவுட்டும், ஊருக்கு நூறு பேர் -ம் திரையிடப்பட்டன.

நகைச்சுவை குறும்படங்கள் என்ற பிரிவில் திரையிட திட்டமிட்டிருந்த படங்கள் தவிர்க்க முடியாத காரணங்களால் திரையிட முடியாமல் போய் விட்டது.

பெரும்பாலும் திரையிடப்பட்ட குறும்படங்களின் இயக்குனர்கள் விழாவில் கலந்து கொண்டு தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டனர்.

இக்குறும்பட திரையிடல் திருவிழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக ஒளிப்பதிவாளர் செழியன், ஆவணப்பட இயக்குனர் ஆர் ஆர் சீனிவாசன், திரைப்பட கல்லூரி பேராசிரியர் ரவிராஜ், இயக்குனர் தேவராஜ், எழுத்தாளர் அஜயன் பாலா, நடிகர் பாரதிமணி, இயக்குனர் ராசி, அழகப்பன், கவிஞர் மதுமிதா ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் மறுபடியும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

நடிகர் தயாளன் லெனின் விருது துவக்க விழாவிற்கு வருகை புரிந்து சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.


கவிஞர் மதுமிதா

தான் பார்த்த லெனின் குறும்படங்கள் குறித்த தன் எண்ணங்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக கவிதை துறையில் சொல்லுவார்கள் நாங்கள் பாரதியின் தோள் மீது அமர்ந்து கவிதை எழுதுகிறோம் என்று, அதுபோல குறும்பட துறையினர் படத்தொகுப்பாளர் லெனின் தோள் மீது அமர்ந்து தங்கள் படைப்புகளை உருவாக்குகிறார்கள் என்று சொல்லும் அளவுக்கு படத்தொகுப்பாளர் லெனின் சினிமாவுக்கு சிறப்பான பங்களிப்பை செய்துள்ளார் எனக் கூறினார். மேலும் இதனை இந்த நிகழ்வை ஒரு வரலாற்று சிறப்பு மிக்க விழா என்று புகழாரம் சூட்டினார்.

நடிகர் பாரதிமணி

எனக்கு எடிட்டர்/இயக்குநர் பீம்சிங் லெனின் அவர்களை பத்துவருடங்களாகத்தான் தெரியும். 2000-ம் ஆண்டில், பாரதி படத்தில் சாயாஜி ஷிண்டேக்கு தமிழ் வசனங்கள் சொல்லிக்கொடுக்கும் உதவி இயக்குநராகவும், பாரதியின் தந்தையாகவும் பணியாற்றிவிட்டு, படப்பிடிப்பு முடிந்தவுடன் நான் தில்லி திரும்பிவிட்டேன். டப்பிங்கின் போது, படத்தில் பாரதியின் தந்தை பாத்திரத்தின் வசனங்களைப்பேசுவதற்கு, என்னை தில்லியிலிருந்து வரவழைத்தால், செலவு அதிகமாகுமென்று கருதி, சென்னை டப்பிங் கலைஞரைக்கொண்டே பேசச்செய்துவிடலாம் என்று இயக்குநர் விரும்பினார். பத்துக்கும் மேலான கலைஞர்களை பேசச்சொல்லியும் திருப்தியடையாத எடிட்டர் லெனின், ‘இவருக்கு மற்றவர்கள் டப்பிங் பேசுவது சிரமம். சங்கீத பாஷையில் சொன்னால், இவர் ஆரம்பிக்கும்போது, ஒரு இடம் தள்ளி எடுத்துவிட்டு, முடிக்கும்போது, சரியாக சமத்தில் முடிக்கிறார். தேர்ந்த


மேலும் : http://thamizhstudio.com/shortfilm_guidance_awards_1.php

1 comment:

Post a Comment