Sunday, April 10, 2011

நாளை முதல்


நாளை முதல் தமிழ் ஸ்டுடியோ, கூடு இரண்டு இணையதளங்களும், இனி ஒவ்வொரு திங்களன்றும் புதிய பதிவேற்றங்களுடன் வெளிவரும். ஒவ்வொரு திங்களன்று மட்டுமே பதிவேற்றங்கள் நடைபெறும். இன்னும் நிறைய கட்டுரைகளும், புதிய பகுதிகளும் தொடர்ந்து வரவிருக்கின்றன. உங்களின் தொடர் ஆதரவிற்கு நன்றி.

www.thamizhstudio.com

www.koodu.thamizhstudio.com

Thursday, April 7, 2011

சுயாதீன கலை திரைப்பட மையம் (9th IF Tamil -2011) (இறுதித் தேதி: 15 .05 . 2011)


சுயாதீன கலை திரைப்பட மையம் (9th IF Tamil -2011) (இறுதித் தேதி: 15 .05 . 2011)

ஒன்பதாவது சர்வதேச தமிழ் குறுந்த்திரைப்ப்பட விழா – படைப்புகளுக்கான கோரல்

சுயாதீன கலை திiர்ப்பட மையத்தால் கனடாவின் ரொரனரோ நகரில் நடாத்த்தப்ப்படும்வருடாந்த்த சர்வதேச குறுந்த்திரைப்ப்பட விழாவில் பங்குபறு;றுவதற்க்கானகுறுந்த்திரைப்ப்படங்க்கள் வரவேற்க்கப்ப்படுகின்றன படைப்புக்கள் ஆங்கில துணைத் தலைப்புக்களை கொண்டிருத்தல் விரும்பத்தக்கது.

விழாவில் சிறந்த திரைப்படைப்புக்களுக்கான 3 பரிசுகள் வழங்;கப்ப்படும் அவையாவன:

C$500, C$300, C$200

படைப்புக்கள் பின்வரும் விதிகளுக்கமைய சமர்ப்பிக்கப்படவேண்டும்

• படைப்புக்கள் மே,15,2011க்கு (May15, 2011)) முன்னர் கிடைக்கக்கூடியதாக
அனுப்பிவைக்கப்படவேண்டும்

• படைப்புக்கள் 30 நிமிடங்க்களுக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும்

• படைப்புக்களின் மொழி தமிழாக இருத்தல் வேண்டும்.

• படைப்புக்களுடன் அதில் பங்காற்றிய தொழில் நுட்ப்பக்கலைஞர்கள், நடிகர்க்கள் பட்டியல் இணைக்கப்படல் வேண்டும்

• படைப்புக்க்களின் தயாரிப்பாளரின் கையொப்பத்துடன் கூடிய கடிதம் இணைக்கப்ப்படல்வேண்டும்

• தேர்வுக் குழவின் முடிவே இறுதியானது.

• படைப்புக்கள் அனுப்பப்பட வேணடிய முகவரி

M.Ragunathan
Director – Program
4 Castlemore Avenue
Markham ON L6C 2B3
Canada


http://thamizhstudio.com/competitions_24.php





உமா மகேஸ்வரி – பசுமையின் வரியைத் தனியாக எழுதும் ஒற்றைப்புல் - குட்டி ரேவதி


ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் -8

உமா மகேஸ்வரி – பசுமையின் வரியைத் தனியாக எழுதும் ஒற்றைப்புல்

குட்டி ரேவதி

அன்புமிக்க வாசக நண்பர்களுக்கும், நிரூபனுக்கும்...

வணக்கம். விவாதம் ஒரு நிலைக்கு வரட்டும் என்று காத்திருந்தேன். இந்நீளவிவாதத்திற்கு ஏற்ற பொருள் இது அன்று என்பதே என் தாழ்மையான கருத்து. என்னுடைய முழுமுதற் நோக்கம், வழக்கம்போல ஒரு கவிஞர் பட்டியலை உருவாக்குவதன்று என்பதையும், எவரையும் முழுதாக நிராகரித்து விட்டு மேற்செல்வது என்பதில்லை என்பதையும் முதலில் இங்கு குறிப்பிட்டுக்கொள்கிறேன்.

என்னுடைய பேசுபொருளென்பது, ஏற்கெனவே நண்பர், ‘முத்து ரமணி’ குறிப்பிட்டிருப்பது போன்று, “ஆண்மையப் புனைவைச் சிதைத்தப் பிரதிகள்” என்பதே. அதற்கான முகவுரையில், எம்மாதிரியான பயணத்தை முன்னெடுக்கப்போகிறேன் என்பதை முன்னமேயே தெளிவாகவும் நிதானமாகவும் விளக்கியிருக்கிறேன். அதுமட்டுமன்றி, முழுத் தொகுப்பாக கவிதைகளை வெளியிட்டு இருப்பவர்களையும் தொடர்ந்து கவிதை இயக்கத்தில் இயங்குபவர்களையும், குறைந்த காலத்திலேயே கவிதை இயக்கத்திற்கு பெண்ணிய அக்கறையோடு பங்களிப்புச் செய்தவர்களையும் மட்டுமே இங்கு கவனப்படுத்துவது என் நோக்கம்.

இந்நிலையில், முன்நிகழும் எதையும் வாசித்திராது வந்து தன் வாதங்களை தான்தோன்றித் தனமாக நிரூபன் முன்வைப்பது அவர் அசிரத்தையைத் தான் காட்டுகிறது. எவரையும் நான் ஒருத்தி நிராகரிப்பதால், அக்கவிஞர்கள் இல்லாது போவதற்கும் அவரை இருட்டடிப்புச் செய்வதற்கும் நான் ஒன்றும் கவிதையின் தலைமையிடத்தை எடுத்துக் கொண்டு இங்கு எழுத வரவில்லை. நான் எழுதாமால் போவதால் மட்டுமே நீங்கள் சொல்லும் வரலாற்றின் பொன்னேட்டிலிருந்து, எந்தக் கவிஞரின் பெயரும், அவர் அங்ஙனம் பங்களிப்புச்செய்தவர் என்றால் அழிந்தும் போய்விடப்போவதில்லை. மேலும், இக்கட்டுரைத் தொடரின் நோக்கத்தையே சிதறடிக்கும் நிரூபனின் ஆதிக்க உத்தி தான் இது என்று தோன்றுகிறது. இது போல, பெண்ணியக் கவிதை இயக்கம் தீவிரப்படும்போதெல்லாம், ’பொத்தாம்பொதுவாக’ கவிதை என்பதை மட்டுமே காரணமாகக் கொண்டு உள்நுழைந்துச் சிதறடிப்பவர்களை கடந்து சென்ற காலங்களில் நான் ஏற்கெனவே பலமுறைகள் சந்தித்திருக்கிறேன். அதனால் தான் இத்தொடரை எழுதுவதற்கான ஊக்கத்தையும் பெற்றேன் என்று குறிப்பிட வேண்டும், ’தமிழ் ஸ்டுடியோ’ பெண் கவிதை குறித்தத் தொடரொன்றை எழுத வேண்டும் என்று என்னைக் கேட்டுக் கொண்டதும், சில மாதங்கள் தயாரிப்பிற்குப் பின் தான் இதை எழுதவும் தொடங்கினேன். அதிலும், மையப்பொருள் குறித்த பல விவாத முன்னெடுப்புகளும் ஆலோசனைகளுக்கும் பின் தான் இதைத் தேர்ந்தெடுத்தேன்.

கவிதைக்குள் ஒட்டுமொத்தமாக பெண்ணியச் சிந்தனை எப்படி கட்டமைக்கப்படுகிறது என்றும் அது காலப்போக்கில் அந்தக்கவிஞரின் சுயமுயற்சியினாலேயே என்னனம் வளர்ச்சியுறுகிறது என்றும் அறிய விரும்புபவர்களுக்கும் கவனிக்கத் தவறுபவர்களுக்கும் இக்கட்டுரை உதவக்கூடும். ஆனால், கவிதை என்றால் என்ன என்று அறியாதவர்கள் சிலர், இம்மாதிரியாகச் சீர்மைப்படும் பாதைகளைச் சிதறடிப்பது வழக்கமானது தான். எனது இக்கட்டுரையின் நோக்கம், வெறுமனே பெண்ணியக் கவிதைகளோ, பெண்கள் கவிதைகளையோ தொகுத்து அடையாளம் பெறுவது அன்று. (மீண்டும் சென்று இக்கட்டுரை முகவுரையைப் படிக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்). தம் கவிதைகள் வழியாக, உடல் எனும் பிரதியைக் கலைத்துப் போட்டவர்கள் மற்றும் ஆதிக்கமொழிப் பிரதியைச் சிதைத்தவர்கள் வழியாக மட்டுமே கவிதையை ஓர் இயக்கமாக அணுகுவது. இதில், கவிதைகள் அல்லாத பிரதிகளையும் நாம் நிராகரிக்கவே வேண்டியிருக்கும். நான் இதைச் செய்யவேண்டியதில்லை என்றாலும், ‘தமிழ் ஸ்டுடியோ வாசகர்கள்’ தம் தொடர் வாசிப்பின் பயனால், எது சீர்மையான கவிதை என்பதை தாமே கண்டறியும், தெளியும் இடத்திற்கு வந்திருக்கின்றனர். அவர்கள் முன்பு, கவிதையல்லாத, கவிதை என்று முன்மொழியப்பட்ட வரிகளாலான தொகுப்பை நான் முன்வைத்தால் அவர்களே முன் வந்து இது கவிதையன்று எனச் சுட்டிக்காட்டும் தேர்ச்சியுடையவர்கள். இதை கவனத்தில் கொண்டு, நான் தேர்ந்தெடுக்கும் கவிஞர்கள் எழுதியவை, கவிதைகளாகவும் இருக்கவேண்டும் என்பதற்கும் அழுத்தம் கொடுக்கிறேன்.

ஏற்கெனவே, செல்வி, சிவரமணி ஆகிய இரு கவிஞர்களையும் அவர்கள் கவிதைகளை முன்வைத்து ஒரு கட்டுரை எழுதியுள்ளதை இங்கு நினைவுகூறுகிறேன். http://koodu.thamizhstudio.com/thodargal_14_3.php.

அவர்கள், தோன்றி வரும் இயக்கப்பின்னணிகளை வைத்து எழுதினால், என் இக்கட்டுரைத் தொடரின் நோக்கத்திலிருந்து கவனம் திருப்பும் ஒரு தொடராக இருக்கும் என்பதாலேயே, இக்கட்டுரையின் உள்ளுறையை, ‘உடலரசியல்’ என்றும், என்னளவில் இக்கட்டுரையில், உடலரசியல் என்று எதை முன்மொழிகிறேன் என்றும் திடமான விளக்கம் அளித்து விட்டுத்தான் நாம் இந்தக் கட்டுரைப் பயணத்தைத் தொடர்ந்தோம் என்பதை நினைவு கூறிக்கொள்கிறேன்.

இத்தொடரில் கப்டன் கஸ்தூரி போன்றவர்களையும் நான் விலக்கிவைத்துத்தான் நகர்கிறேன் என்ற கவன விழிப்பையும் கொண்டிருக்கிறேன். காரணம், இத்தொடரின் அடிப்படைக் காரணங்களால் விலக்க முடியாத தகுதிகளைக் கவிஞர் கொண்டிருக்கவேண்டும். இரண்டு, அவை கவிதைகளாகவும் இருக்கவேண்டும். பெண்கவிதைகளைப் பதிப்பிக்கும் பதிப்பாளர், தொகுக்கும் தொகுப்பாளர் ஆகியோரை முன்மொழியும் கட்டுரைத் தொடர் இது இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில், இம்மாதிரியான நாகரிகம் தான் பட்டியலையும் அதில் படிநிலையையும் உருவாக்கியது என்பதால் இதை முற்றிலுமாக மறுக்கிறேன். அப்பணியை நானும் செய்ய ஒப்பவில்லை. மேலும், நிரூபனின் விவாதத்தில் உள்பொருளும் அக்கறையும் சில முக்கியமான கவிஞர்கள் விடுபட்டிருக்கின்றனரே என்பதைக் காட்டிலும் ஆழியாளை முதன்மைப்படுத்தியது தான் காரணமாக இருப்பது ஒரே சமயத்தில் எனக்கு வியப்பையும் நிறைய சந்தேகங்களையும் எழுப்புகிறது. பெண்ணியக் கவிதை மீதான அக்கறையோ தேர்ச்சியோ சிறிதும் ஏதுமில்லை. நிரூபன், தன் ஆதிக்கச் சிந்தனையை நிரூபிக்க இவ்வளவு போராடவேண்டியதில்லை. உங்கள் களம் வேறு என்பதையும் தாழ்மையுடன் குறிப்பிட்டுக்கொள்கிறேன்.

ஆழியாளின் வழியாக, கவிதைத்தளத்திலும் பெண்ணியத்தளத்திலும் நிகழ்ந்த நகர்வுகள் துல்லியமானவையும் வெளிப்படையானவையும்! நான் வியந்து மிகையாகச் சொல்வதற்கும் ஏதும் இல்லை. இம்மாதிரியான பெண்ணிய அசைவுகளில் அதிலும் கவிதைகளில் நிகழ்வது என்றால், அவை நாம் எல்லோருமே கொண்டாட வேண்டிய நகர்வுகள் தாம்! அம்மாதிரியான நகர்வுகளை தங்கள் சுய மொழியால் கவிதை வடிவத்தால் ஏற்படுத்தியவர்களை மட்டுமே அடையாளப்படுத்துவது என் முயற்சி! விடுபட்டவர்கள், வேறொரு பொருள் கொண்ட அத்தியாயத்தில் ஒருங்கிணையலாம்.

இன்னும் தெளிவாக விளக்கவேண்டுமெனில், கடந்த காலக் கவிதை வரலாற்றில் பெண்ணியச் சிதைவுகள் நிகழ்ந்ததை விளக்கியும் ஒரு தொடர், இக்கட்டுரைத் தொடருக்கான எதிர்த்திசையில் எழுதமுடியும். ஆனால், அது என்னுடைய நோக்கமன்று. நீங்கள் குறிப்பிட்டிருப்பது போலவே, பேராசிரியர் கிருஸ்ணபிள்ளை விசாகரூபனின் ஈழத்து கவிதை வளர்ச்சி மற்றும் பிற ஈழக்கவிதை மரபுகள் குறித்த பேராசிரிய ஆய்வுகளை எல்லாம் நானும் வாசித்திருக்கிறேன். அவற்றின் பேராசிரியத்தன்மை நிஜமாகவே அலுப்பூட்டுகின்றது. அம்மாதிரியான கட்டுரைகள் வழியாக ஈழக்கவிதையின் ஒட்டுமொத்த கவிதைப் புலத்தையும் முன்வைப்பதும் இத்தொடரின் நோக்கமன்று. அதுமட்டுமன்றி, கவிதையை வாசிக்கும் போது பெறும் உணர்வெழுச்சியையும், அரசியல் கிளைத்தல்களையும் அவ்வாய்வேடுகளில் என்னால் ஒருபோதும் நுகரவே முடிந்ததில்லை. கவிதைகளே தமதளவில் முழுமையும் உணர்வெழுச்சியின் சுனைகளாக இருக்கும் போது எனக்கு இந்தப் பேராசிரிய ஆய்வுகள் எந்த வெளிச்சத்தையும் கொடுத்ததில்லை. ஆழியாளின் நூலில், மதுசூதனன் எழுதியிருந்த கட்டுரையின் நேர்மையான குரல் மட்டுமே என் உற்சாகத்திற்குத் துணை சேர்வதாக இருந்தது என்று சொல்லலாம். மொழியின் வழியாக, கவிதை என்று சொல்லிப் பிரசாரம் செய்தவர்கள் இக்கட்டுரையின் பொருளுக்குள் அடங்கமாட்டார்கள் என்பதே என் தாழ்மையான கருத்து.

மேலும், இம்மாதிரியான வரலாற்றுப் படிநிலைகளுக்கு அழுத்தம் கொடுத்து, அழுத்தம் கொடுத்தே, கவிஞர்களின் தனித்துவ முயற்சிகள் அதிலும், பெண்ணிய முன்னெடுப்புகள் நிகழ்த்தியவர்களின் சித்தாந்தங்களை விவாதத்திற்கு உட்படுத்தாததாலும், சமூகத்தின் இயக்கங்கள் உள்வாங்கிக் கொள்ளாததாலும் அம்முயற்சிகள் முனைமுறிந்து போயின. நீங்கள் முன்மொழிந்திருக்கும் தொடர் கருத்துரைகள் எல்லாமே ஆதிக்கச் சிந்தனைப் புரையோடியவையாக இருக்கின்றன. வரலாறு என்பதற்கு அழுத்தம் கொடுத்து, தனி நபர் படைப்பாற்றலை விவாதப்பொருளாக்குவதைச் சிதைக்கின்றன. ஆனால், நீங்கள் குறிப்பிட்ட தமிழ் என்னும் அடையாளம் குறித்த விவாதத்தில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், இங்கு நீங்கள் காட்டும் பொருத்தங்கள் தெளிவற்றும் பொருள் மயக்கங்களோடும் விரிகின்றன என்பதால், நீங்கள் வந்து நிற்கும் இடத்தை ஒரு முறை திரும்பிப் பார்த்துக்கொண்டு எழுதுங்கள். அல்லது, நீங்கள் விரும்பும் பொருளில் தொடரொன்றை எழுதுங்கள்.
கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக, கவிதையையும் அதன் அசைவையும் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருக்கும் நான் கவிதை பற்றிய எந்த நூலையும் தவறவிடுவதில்லை. விவாதத்தையும் தவறவிடுவதில்லை. நிரூபன் குறிப்பிட்டிருக்கும் நூல்களையும் வாசித்திருக்கிறேன். அதன் பின்னணியில் உள்ள அரசியல் ஆதாயங்களை ஒரு விவாதமாக்கவும் விமர்சனமாக்கவும் என் இடம் இது இல்லை என்பதை நான் தெளிவாக அறிந்திருக்கிறேன். ஆனால், நூல் வடிவிலும், கட்டுரை வடிவிலும், தனிமனிதக் குரல் தொனியிலும் வரும் அவதூறுகளுக்கு நான் இது வரை பதிலளித்ததே இல்லை. புறக்கணித்திருக்கிறேன். அதற்காக என் நேரத்தை ஒரு பொழுதும் வீணாக்கியதில்லை. இது ‘ஆழியாள்’ என்ற, நான் இது வரை சந்தித்திராத, நான் உரையாடியிராத ஒரு கவிஞரைப் பற்றி நான் எழுதிய கட்டுரை என்பதால் மட்டுமே இதற்கு பதிலளிக்கும் பொறுப்பை நான் ஏற்றிருக்கிறேன். செவிமடுத்த எல்லோருக்கும் நன்றி! இம்முறை கவிஞர் உமா மகேஸ்வரியின் கவிதைகளுடன் வந்திருக்கிறேன்! வாருங்கள், நகர்வோம்!!

***************************

பெண்ணிய இயக்கங்கள், ஒரே நோக்கத்திற்காகப் போராடும் பெண்களை ஒன்றாக இணைப்பவை. இவ்வியக்கங்களில் இணைய முடியாமல் குடும்பத்தின் வலைகளில் சிக்கிக் கொண்ட பெண்கள் எப்படி தங்கள் உரிமைகளை வென்றெடுக்கின்றனர் என்ற கேள்விக்கான பதில்களைத் தேடிப் பெறுகையில், காலந்தோறும் பெண்கள் தம்மீதான குடும்ப வன்முறையை வென்ற வரலாற்றையும் பெறலாம். இத்தகைய வரலாற்றுப் பதிவுகள் எங்குமே ஆவணப்படுத்தப்படுவதில்லை. ஆனால், மானுட இனத்தின் சரிப்பாதியான பெண்ணினம் தம்மீதான எல்லா வகையான வன்முறைகளையும் ஒடுக்குமுறைகளையும் எவ்விதம் எதிர்த்து நிற்கின்றனர் என்பதை நாம் அறிய பெண்ணெழுத்து மிகத் துல்லியமான ஆவணமாகவும் வெளிப்பாடாகவும் இருக்கிறது.

எழுத்தைத் தன் போராட்டத்திற்கான ஆயுதமாகக் கொண்டு, தான் சார்ந்த குடும்பம், மதம், தன் இருப்பு இவற்றுடன் தொடர்புடைய அடிமைத்தனங்களை தன்னளவிலும் தன்னைச்சேர்ந்த பெண்கள் அளவிலும் புரிந்து கொண்டு மொழி வழியாக அவற்றை எதிர்க்கும் ஒற்றைப் பயணம் என்பதை நிறுவுவதாய் உமா மகேஸ்வரியின் எழுத்து தொடர்கிறது. தன் வீட்டை எல்லையாகத் திணித்த தன் இருப்பை மீறும் எழுத்தைப் படைப்பவர் இவர். குடும்பத்திற்குள் நின்று இயங்கும் பெண்கள் தம் உயிரைப் பேணுதலை மட்டுமே அதிகபட்ச உரிமையாகக் கொண்டிருக்கின்றனர். இவர்கள், தம்மீது திணிக்கப்பட்ட தாய்மை எனும் மதிப்பையும், மனைவி எனும் பாரத்தையும் ஒரே சமயம் சுமக்கவேண்டியிருக்கிறது. குடும்பம் எனும் மண்டபத்தின் தூண்களாக எழுந்து நின்று தோள்களில் அதன் விதானத்தைத் தாங்கிக் கொண்டிருந்தாலும், அவற்றிலிருந்து விட்டேகும் விடுதலைக்கான கற்பனைகளைக் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். இத்தகைய கற்பனைகளை எவரும் அவர்களிடமிருந்து அபகரித்துவிடவே முடியாது. விடுதலைக்கான கற்பனை தான் பெண்ணெழுத்தின் சீரிய நெடுஞ்சாலை.

உமா மகேஸ்வரியின் எழுத்து வீட்டுக்குள்ளேயே தன் முழு காலத்தையும் கழிக்க வேண்டியதொரு பெண்ணின் சிந்தனைகளை அன்றாடம் எழுத்தாக்குகிறது. எதிர்ப்பின் தொனியாக்குகிறது. கற்பனைகளின் வெளி கொண்டு அச்சூழலின் இறுக்கத்தை வெல்கிறது. ஒடுக்கப்பட்டவர்களுக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட ‘அன்றாடம்’ என்பதன் அரசியலைப் புரிந்து கொள்ள பெண்ணெழுத்து தான் உதவுகிறது. நாட்குறிப்புகள் என்றும் அழுகைப் புலம்பல்கள் என்றும் விமர்சிக்கப்பட்ட பெண்ணெழுத்து, மறுக்கப்பட்ட அவற்றிற்கான வெளியாக எழுத்தைக் கண்டுகொண்டது தான் பெண்விடுதலையின் தொடக்கம். தினந்தோறும், தான் காண நேரும் ஜன்னல் சட்டமிட்ட காட்சி, அடுப்பு மேடை, படுக்கையின் எல்லை, ஒரே மாதிரியான தோசைகளை உருவாக்கும் பணி ஆகியவற்றிலிருந்து விடுபட, ஜன்னல் கம்பியில் வந்து அமரும் ஒரு சிட்டுக் குருவி போதும். அது சிறகடித்துப் பறக்கும் வெளியைத் தனதாக்கிக் களிக்கும் கற்பனை போதும், விடுதலையைத் தொடங்க!

எனது நதி

சிறுவயதில் பார்த்த போது
அம்மாவின் புடவையென
அலையோடிருந்தது.
செல்லமாய் வளைவுகளில்
சேர்த்தணைக்கும்;
வருடும் மெல்ல.
பள்ளங்களில் கால்பட்டால்
பதறிப்பாய்ந்து மிரட்டும்.
பருவ காலத்தில்
ஓரம் தைத்த தாவணிகளாய்
உருவம் மாறிக் கிடந்தது
துள்ளல் போர்த்தித் துவண்டு அடங்கி
சன்னமாய் மின்னும் ஜரிகை வரிகளோடு.
வேறுதிசையில் எறிந்து
மாறுதலாக்கியது திருமணம்
திரும்பி வந்து தேடினால்
பிரிந்த நூலிழைகளாய்த்
திரிந்திருந்தது அதுவும்
அறுந்த அடி நீரோட்டத்தோடு

எனது நதி என்ற இக்கவிதை ஒரே சமயத்தில் நதியின் அடையாளம் தூர்ந்து போவதையும் அம்மாவின் புடவை வேறுருக் கொண்டு மாற்றமடைதலையும் ஒப்புமைப்படுத்துகிறது. ’பெண்மை’ என்பதன் மீது திணிக்கப்பட்ட தொடர் மாற்றங்களையும் திரிபுகளையும் சொல்லியிருக்கிறார். அவரது நதியின் பண்புகள் இன்னனம் தாம் அவருக்கு அர்த்தமாகியிருக்கின்றன என்பதைக் கவனப்படுத்துகிறார். இம்மாதிரியான புறவுலக மாற்றங்களை அகப்பண்புகளுடன் தொடர்புப்படுத்தும் பணியை உமா மகேஸ்வரி தொடர்ந்து தன் கவிதைகளில் செய்த வண்ணம் இருக்கிறார். இது ஒருவகையான சங்கேதங்களைத் தனக்குத்தானே நிகழ்த்திக்கொள்ளும் வெளிப்பாடு. இதுவே கலையுருவம் கொள்கிறது கவிதையில்.

பெண்களின் மாதாந்திர உதிரப்பெருக்கை, ‘பெரும்பாடு’ என்கிறது சித்தமருத்துவம். பெண்களின் உதிரப்பெருக்கு பெண் கவிதைகளாக்கிய போதெல்லாம் அதன் வலியும் அதை ஒட்டிய உடற்சங்கடங்களுமே பதிவாகியிருக்கின்றன. இங்கு உமா மகேஸ்வரி, அந்நிகழ்வின் காலாகாலங்களையும் தாமதங்களையும் காலம் தாண்டித் தொடர்தலையும் அரசியலாக்குகிறார். பெண்களுக்கு இடையிலான ’பேத அரசியல்’ என்பதே ஆண்களைத் தன்னிடம் தக்கவைத்துக் கொள்ளும் ஹார்மோன் அரசியலைத் தான் அடிப்படையாகக்கொண்டது. இவர் கவிதையிலும் மாமியார் கேட்கிறார்: ’மாமியாரின் ஆதங்கமோ ‘இன்னும் வருதா’ என.’ தனது இழப்பில் கொள்ளும் கவலையினும் இன்னொருவரின் அனுபவிப்பின் மீது கொள்ளும் ஆற்றாமை. இது நான் ஏற்கெனவே ஒரு கட்டுரையில் விளக்கியுள்ளபடி, குடும்பத்தைத் தொடர்ந்து இயக்குவதற்கு மாமியாரையும் மருமகளையும் ஒருவருக்கொருவர் எதிரான நபர்களாய் நிறுத்தி ஆதாயங்களை அறுவடை செய்யும் நிகழ்தகவு. இதில் பெண்ணினம் பகுக்கப்படுவதுடன், ஒரே மாதிரியான பிரச்சனைகளையே இருவருமே அனுபவித்தாலும் அங்ஙனம் அடையாளம் காணமுடியாதவாறு முகம் பார்க்கும் கண்ணாடிகளைத் திருப்பிவைக்கும் ஆதிக்கத்தந்திரம். ’காட்டுத் தீ மரமோ பருவங்களைக் கவனியாது பூத்துத் தள்ளுகிறது அதன் போக்கில்.’ என்ற தன் ஆதங்கத்தைப் பதிலாக்கி விடுதலையுறுகிறார்.

பூத்தல்

சிறுமியில் ஆரம்பித்தபோது
‘அதற்குள்ளேயா” என
அம்மாவின் பதற்றம்.
அடுத்தடுத்த மாதங்களில்
‘இன்னும் வரவில்லையா?’
ஆணியறைந்து மாட்டப்பட்ட
நாட்காட்டி என் முகத்தில்.
மாமியாரின் ஆதங்கமோ
‘இன்னும் வருதா’ என.
தனியாய்ப் போனால் பிடிக்கும் முனி,
தலை குளியாதிருந்தால் அடையும் தேள்கள்
என்று நீளும் கதைகளில்
குத்திக் கோர்த்தெடுக்கப்பட்ட என் தினங்கள்.
காட்டுத் தீ மரமோ
பருவங்களைக் கவனியாது
பூத்துத் தள்ளுகிறது அதன் போக்கில்.
நான் நடமுடியாது
என் இஷ்டப்படி பூக்கும்
எந்த நாற்றையும் என்னுள்.
மஞ்சளில் ஆரம்பித்து
ஆரஞ்சில் ஆழ்ந்து
குருதிச் சிவப்பிற்கே திரும்புகிறது
உபயோகித்த சானிடரி நாப்கின்களைக்
கொளுத்திய தீ

சிலந்தி

எனக்குள் இருக்குமொரு சிலந்தி
எப்போதும் வலை பின்னியவாறே.
மனதின் இடுக்கில் இழைகள் விரித்துக்
காத்துக் கிடக்கும்.
நினையாத் தருணங்களில்
எதிர்முகத்தில்
கொடுக்கைச் சுழற்றி
சொடுக்கும் வார்த்தை நஞ்சை.
சின்னஞ்சிறு கனவுகளையோ,
எண்ணற்ற விரல்களால்
நசுக்கி விழுங்கும்.
வெறுப்பென்றும் கோபமென்றும்
மறைகுணங்கள் மிகைத்து
குறுக்கும் நெடுக்கும் திரியும் ஊர்ந்து
இரவின் அமைதிகளில் விழி வழி நகர்ந்து
உலகைப் பார்க்கும்.
கண்ணாடிக் காகிதத்துள்
பொத்திய மலர் போன்று
அழகு காட்டும் சிலசமயம்.
விலக்கவே விருப்பமெனினும்,
பழகிப் பழகியே
பரிச்சயமாற்று தினமும்
எதுவும் செய்யக்
கூடுவதில்லை என்னால்
என்னுள் இருக்கும்
இந்தச் சிலந்தியை

தோசை என்பதைப் பெண்ணடிமைத் தனத்தின் குறியீடாக்கி நோக்கும் கவிதை! அதன் வடிவையும் தன்மையையும் பெண்மையுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார். இக்கவிதையை வாசிக்கையில், பெண்கள் தங்கள் வாழ்வில் கணவனுக்காகச் சுடவேண்டிய தோசைகளின் எண்ணிக்கையற்ற தன்மையைப் பேசும் அம்பையின் சிறுகதையொன்று நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலவில்லை. என்றாலும் உமா மகேஸ்வரியின் ’தோசை’, கவிதையின் நவீனத்துவத்துடன் பிரச்சனையைத் துலங்கவைக்கிறது.

தோசை

ஆண்டாண்டு காலமாக அளவு மாறாதது
தோசைகளின் விட்டம்
விளிம்பு தாண்டாதது அவற்றின் விட்டம்
உலோகக் கடின அடித்தளத்தில்
ஊற்றப்பட்டாலும் அவை
ஒரு போதும் இழப்பதில்லை மென்மையை.
விரிவும் திருப்பமுமற்ற
வெற்றுச் சுழற்சி.
எதனோடும் இணைந்து போகும் சுயமின்மை.
இழப்பின் விழிப்பற்று
மூடிக்குள் புழுங்கி வேகும்.
உள்ளே வெந்தாலும்
வெளிக்காட்டாத புன்முறுவல் மேலே.
சுருட்டித் திருப்புகையில்
சோர்ந்த முனகலன்றி
வேறெதுவும் சொல்லாதவை.
நகர்த்தவில்லை அவற்றை,
நவீன வகைப்படுத்தல்கள்
நிஜமான சுதந்திரத்துள்.
வருடங்களால் வளர்ச்சியுறாது,
வடிவம் மாறாது தோசைகள்
வாழும் வாழ்தலற்று.
அம்மாவின் பாட்டியின்
பாட்டியின் அம்மாவின்
இன்னும் என்னுடைய தோசைகள்
ஆண்டாண்டு காலமாய் அப்படியே.

இன்றைய காட்சி

நிராசைகள் கொப்புளிக்கும்
நம் படுக்கையில் நிகழ்த்துவோம் இன்றும்
திரை நியமங்கள் விலகாத
எண்ணிக்கையில் வராத இன்றைய காட்சியை.
நீயே நிர்மாணித்த சுலபப்பாதையை
ராஜபாட்டையென்று கருதி
நிறுவிக்கொள்கிறாய் நீயாகவே
இறுதி நிறுத்தத்தை வெற்றிப் புள்ளியென்று.
அனுசரணைகள் பூசிமெழுகல்கள்
சம்பிரதாயங்கள் சமரசங்கள்
மூடிய புதைகுழிகளினூடாக
அடையமுடியாது நாம் என்றைக்குமே
ஆதிக்காதலின் வனத்தை
புதர்கள் தாண்டிப் பூத்த உச்சி மலரை
செய்வதொன்றுமில்லை இனி
திரும்பிய முதுகோடு உன் ஒரே நொடி உறக்கம்
சில்லிடும் தரை
ஒண்டிய சுவர்.
சுருண்ட பூனையாக என் உளைச்சல்கள்.

மேற்கண்ட கவிதையில், ‘சில்லிடும் தரை / ஒண்டிய சுவர்’ என்ற முந்தைய வரிகளிலேயே சுருண்ட பூனையின் உளைச்சல்களை உணரமுடிகிறது பாருங்கள். ’நீயே நிர்மாணித்த சுலபப்பாதையை / ராஜபாட்டையென்று கருதி / நிறுவிக்கொள்கிறாய் / நீயாகவே / இறுதி நிறுத்தத்தை வெற்றிப் புள்ளியென்று.’ ஆணுடனான பாலுறவின் இலக்கணத்தை விமர்சிக்கிறார். ஆணே நிர்மாணித்த சுலபப்பாதையை ராஜப்பாட்டையென்று கொள்ளுதல் தான் பாலியல் உறவிற்காக ஆண் கொண்டிருக்கும் நியமங்களில் முதன்மையானது. அப்படியான ஒருதலைப்பட்ச நியமம் கொண்ட உறவில் ஆதிக்காதலின் எந்தச் சுவடும் சுகமும் இருக்கமுடியாது. ’இன்றைய காட்சி’யின் தொடர்ச்சியாக உணரப்பட்ட இன்னொரு கவிதை.

முத்தங்களின்றி புகையும் நம் உடல்களைப்
புணர்ச்சிக்கு நகர்த்தலாம்;
மூலைகளில் உறைந்த பல்லியின்
மேற்செதில்களைப் போல்
அருவருப்பூட்டுகின்றன
உள்ளூர இந்த பாவனைகள்.
கனவின் தளிரசையும் பள்ளத்தாக்குகள்.
பிரியத்தின் நுனியிலாடும் வெறிக்கூர்மை;
நனைந்த வானம் விலக்கிவரும் மெதுவெயில்;
பட்டாம்பூச்சியின் நிற நிழலாடும் தோட்டச்சுவர்
எல்லாவற்றிலும் ஒரு தகரத்தன்மை ஏறுகிறது
பகல் சரிகிறது மெல்ல

அடி

நூற்றாண்டுகள் கண்ட
சாட்டைகள், சவுக்குகள்
ஈட்டிகள், கத்திகள்
எல்லாம் உண்டு அதில்; அடி

உன் வலு காட்டும்
வழி மட்டுமன்று,
என் பலவீனத்தை அடிக்கோடிடும்
வகையுமாகும்; அடி

மழுங்கிய உணர்வுகளை
மாற்றிக் கூராக்கும்;
எதிர்த்துக் குத்தவோ
எதையேனும் தைக்கவோ.
எனவே, மீண்டும்..
தழும்புகள்
கண்ணீர் பெருக்கவென்பதோடு
கலகம் துவக்கவும்
காரணமாகலாம்

தொடல்களை இனிமையற்றதாக்கும்
அடிகளாலான வலி.
நம் தூரம் நீட்டி
என்னை விடுவிக்கும் எதிலிருந்தாவது.

ஒருவேளை உன் மொழி
அதுவென்றால்
வேறெப்படிப் பேசுவாய் நீ?
ஆகவே, அடி.


’அடி’ என்பதே ஆணின் மொழியாக இருப்பதன் முரண் நியாயங்களை எழுதும் கவிதை இது. குடும்ப வன்முறை என்பது இன்றும் பேசாப்பொருளாக இருக்கிறது. சமீபத்தில் ஹைதராபாத்தில் ஒரு பால்நிலைப் பயிற்சிப்பட்டறைக்கு வரவழைக்கப்பட்டிருந்தேன். அதில் ஓர் அமர்வில், அவரவர் உடல் குறித்த துன்பங்களையும் அவற்றிற்கு அடிப்படையான காரணங்களையும் ஏதேனும் படைப்பாக்க வடிவில் வெளிப்படுத்த வேண்டும். அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து கலந்து கொண்ட இருபத்திநான்கு வயதுப் பெண், இரு குழந்தைகளின் தாய். கணவன் குடித்து விட்டு வந்து அவளிடம் காசு கேட்க, இல்லையென்பதால் கணவன் வீட்டை விட்டு துரத்தியடிக்கப்படுகிறாள். இதில், மாமியாரும் கணவன் பக்கம் நின்று அவளை விரட்டுகிறாள். கொட்டும் மழை. நடுநிசி. தன் பெற்றோர் வீட்டுக்குச் செல்கிறாள். அவளையும் குழந்தைகளையும் கண்ட அவள் பெற்றோரோ, ‘இது உன் குடும்பத்தின் பிரச்சனை. நாங்கள் தலையிட உரிமை இல்லை’ என்று கதவைச் சாத்திக்கொள்ள அவள் முழு இரவும் தன் குழந்தைகளுடன் தெரு ஓரக்கடையின் தாழ்வாரத்தில் கழிக்க நேர்ந்த தன் வரலாற்றைப் பகிர்ந்தாள். குடும்பத்தின் வன்முறை பலமுனைகளைக் கூர்மையாகக் கொண்ட ஆயுதம் என்பதைச் சொல்லும் இக்கதை உடனே அங்கிருந்த நாடகக் கலைஞர்களால் அவள் விருப்பத்தின்பேரில் நாடகமாக்கப்பட்டது. மேற்கண்ட கவிதையில், ஆண் அடிப்பதை தன் திசை பொருள் விளக்கங்களுடன் அணுகுகிறார், கவிஞர். அதாவது, ஆண் பேசுவதற்குத் தேர்ந்தெடுக்கும் ஒரே மொழியாக வன்முறையைக் குறிப்பிடுகிறார்.

சிலாம்புகள்

உதிரத்தின் சுவையோடிருந்தது
அந்தக் கூடல்
என்னைக் குத்திய சிலாம்புகள்
பிடுங்கப்படாமலிருந்தன

பயணக்களைப்பையும்,
ரணங்களின் நோவையும்,
பசிக்கும் வயிற்றையும்,
உன் கண்ணசைவு
புறக்கணித்தது.

தகிக்கும் உடலைத்
தண்மைப்படுத்தவில்லை
குளிர்சாதன இயந்திரம்.
பிரிபடாத உணவுப்பொட்டலம்
பேசித்தீர்க்காத உணர்வுகள்
முத்தங்களால்
மாறி மாறித் தாக்கிக் கொண்டோம்
ஒருவரையொருவர்

கொன்ற கோழியிறகுகளைப்
பிய்த்தெறிவது போல்
என் ஆடைகளை.
நாம் தழுவத் தழுவ
அவை நழுவிவிட விரும்பினேன்
தானாகவே

பகலொளி படக் கூசும் என் உடல்.
படபடத்து அதிரும் சுவர்கள்,
மோகம் பருகும்
என் மூடிய கண்களும்
உன் திறந்த பார்வையும்.

இறுகித் தவிக்கும் மனம்
உன் வருடலின் ஆறுதல் தேட
தேகமோ இளகிவிடுகிறது
வெண்ணையில் செய்த மலராக
உன் கத்திகளைக் காதலுடன் வரவேற்றவாறு.

காதல் தனக்குள் பொதிந்த வன்முறைகளுடன் வெளிப்படுவதைக் கவிஞர், அக்காதல் வெளிப்படும் அவசர உணர்வின் வேகத்துடனேயே வெளிப்படுத்தியிருக்கிறார். எல்லாவற்றையும் புறக்கணித்து வெளிப்படுத்துவதிலேயே வேகமாய் இருக்கும், காதல். வன்முறைக்கான தடங்கள் இடம்பெற்றிருக்கும் இடங்களைப் பாருங்கள்! ‘உதிரத்தின் சுவையோடிருந்தது / அந்தக் கூடல் / என்னைக் குத்திய சிலாம்புகள் / பிடுங்கப்படாமலிருந்தன’

அடுத்து, ‘முத்தங்களால் / மாறி மாறித் தாக்கிக் கொண்டோம் / ஒருவரையொருவர்’.

தொடர்ந்து, கொன்ற கோழியிறகுகளைப் / பிய்த்தெறிவது போல் / என் ஆடைகளை. / நாம் தழுவத் தழுவ / அவை நழுவிவிட விரும்பினேன் / தானாகவே.’

’உன் கத்திகளைக் காதலுடன் வரவேற்றவாறு.’ என முடிக்கிறார்.

தன் நிராசைகளைத் தொடர்ந்து பதிவு செய்தலையே தன் விடுதலைக்கான வழியாகக் கொண்டிருக்கிறார் உமா மகேஸ்வரி. இதற்காகத் தன் நிராசைகள் என்னவென்று கண்டறியும் அயரா பணியையும் தொடர்கிறார். இவை, எந்தவொரு மனித ஆளுமை பயிற்சி ஏட்டிலும் பட்டியல் பெறுவதில்லை. ஏனெனில், இவை சுயத்தின் நதியில் தீவிரமான தொடர் நீச்சலால் கண்டறியப்படுபவை. தனது தனிமையிடத்தையும் தனிமைத்துவத்தையும் அவர் கண்டு அடையும் மொழி, சீரிய அழகியலையும் பெண்பாற் விசனங்களையும் கொண்டவை. புற உலகத்தைப் புறக்கணித்து, தன்னை அக உலகத்தின் சிலந்தியாக்கிக் கொண்டிருப்பவை. மனதின் இடுக்கில் இழைகள் விரித்துக் காத்துக் கிடப்பவை!

புல்

விருட்சங்கள்
விரிந்து கிளைக்க
கொடிகள்
பந்தலைப் பற்றிப் படர
புதர்கள்
போக்கின்றி அடர –
மிதிபடுகிறது; நசுங்குகிறது;
நீரற்று வாடுகிறது;
எனினும் எழுதுகிறது
பசுமையின் வரியைத்
தனியாக –
ஒற்றைப் புல்.

----------------------------------------------------------------------------------------------

சிறு குறிப்பு: மதுரையில் பிறந்து ஆண்டிப்பட்டியில் வசித்து வரும் உமா மகேஸ்வரி ஆங்கில இலக்கியத்தில் பட்ட மேற்படிப்புப் பெற்றவர். ’நட்சத்திரங்களின் நடுவே’ (1990), ‘வெறும் பொழுது’ (2002), ‘கற்பாவை’ (2004) மற்றும் ‘இறுதிப் பூ’ (2008) ஆகிய கவிதைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார். கவிதை தவிரவும் சிறுகதை மற்றும் நாவல் வடிவங்களிலும் தீவிர ஈடுபாடு கொண்டு நூல்களைப் படைத்திருக்கிறார்.

http://koodu.thamizhstudio.com/thodargal_14_8.php


Wednesday, April 6, 2011

தீர்த்த யாத்திரை..



தீர்த்த யாத்திரை..

கலாப்ரியா

அது என்ன ராசியோ தெரியவில்லை. முதலில் என்னுடன் பழகுபவர்கள்.. கலகலப்பும் கிண்டலுமாகப் பழகுவார்கள். ஏதோ ஒரு நெருக்கம் பிறக்க ஆரம்பிக்கும் போது அவர்களுடைய கஷ்ட நஷ்டங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். நானும் என் அழுமூஞ்சித் தனத்தை காட்டிக் கொண்டு விடுவேன் போலிருக்கிறது. அதனால் அவர்களுடன் ஒரு அசாதாரமான இனஞ்சேரல் வாய்த்து விடும். ரொம்ப ஓவராக எப்போதும் சோகத்தைக் காண்பிக்கிறவர்களைப் பொதுவாக அந்தப் பருவத்தில் யாருக்கும் அவ்வளவாய்ப் பிடிக்காது என்பதும் ஒரு உண்மைதானே. யாராவது “புலம்ப’’ ஆரம்பித்தால் நான் கொஞ்சம் காது கொடுப்பேன், மற்றவர்கள் நைசாகக் கழண்டு விடுவார்கள். ஏனெனில் பாலிய பருவம் என்பது ஒருவகை தித்திப்பான பருவம். கண்ணதாசன் சொல்லுகிற மாதிரி,

”வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே
வாழ்க்கைத் துன்பம் அறிந்திடாமல் வாழ்ந்து வந்தோமே...”

என்கிற பருவம். ஆனால், அப்போது நான் ஒரு ரெண்டுங்கெட்டான் வாழ்க்கையில் இருந்தேன். வேலையும் பார்த்துவந்தேன், அது தற்காலிகமான வேலை என்ற சிலுவையைச் சுமந்தபடியும், கோட்டை விட்ட தேர்வுகளுக்கு படித்த படியும், அல்லது படிக்கிறேன் என்று பேர் பண்னிக் கொண்டு... பொழுதை வீணடித்துக் கொண்டும் இருந்தேன். சத்திய வாசகன் அப்போது எம்.எஸ்.சி இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தான். கொண்டிருந்தார் என்று சொல்லவேண்டும். தினசரி மதியம் கேண்டீனில் சாப்பிடுகிற நேரத்திற்கு சந்திப்போம். ஒரு ஆராய்ச்சி மாணவரும் எங்களுடன் இருப்பார். நான், டவுணில் ஆராய்ச்சி மாணவருடன் அவரது அறையில்தான் தங்கியிருந்தேன். அப்புறம் அவருக்கு ஹாஸ்டலில் இடம் கிடைத்த போது நானும் அவருடன் ஒட்டிக் கொண்டே ஹாஸ்டலுக்கு வந்தேன். அப்புறம் ஹாஸ்டல் சாப்பாடு. சத்தியவாசகனுக்கும் என்னைப்போல சாரதா படங்கள் என்றால் உயிர், துலாபாரம், தீர்த்த யாத்திரை, ஸ்த்ரீ, கிராஸ்பெல்ட், என்று மலையாளப் படங்களைப் பற்றி அடிக்கடி பகிர்ந்து கொள்வோம்.

கேண்டீனில் மதியச் சாப்பாடு 90 பைசா. சாப்பாடு ஒரே மாதிரி இருக்கும். சாப்பிடும் போது, கேண்டீன் பரபரப்பும், வெக்கையும், அலுமினிய டோக்கன்களை வாங்குகிற கொடுக்கிற நழுவவிடுகிற சத்தமும், பரிமாறுகிற சேட்டனின் இறுக்கமான முகமும், நாம் எப்போ இடத்தைக் காலி பண்ணுவோம், தான் அமரலாம் என்று பின்னால் காத்திருக்கிற அதே ஆட்களும் (அநேகமாக எனக்குப் பின்னால் எப்போதும் எங்கள் கல்லூரி ஆசிரியர், எம் .ஃபில் படிப்பவர் வந்து நின்று கொள்வார், அவருக்குப் பின்னால் குறைந்தது மூன்று பேராவது தயாராய் நிற்பார்கள், அவர் சாப்பிடுவது வேடிக்கையாய் இருக்கும். ஒரு கட்டி சோற்றையும், இலையில் விரித்துப் பரத்தி விடுவார். நடுவில் குழி. சேட்டன், சாம்பார் வாளியைக் கவிழ்க்காத குறையாய் ஊற்றுவார்.தினமும் வைக்கிற உருளைக் கிழங்கு பொடிமாஸ்,இரண்டு மூன்று கரண்டி முதலிலேயே “வையுங்க, வையுங்க” என்று கேட்டு வாங்கிக்கொள்ளுவார். அவ்வளவுதான் உருட்டி நாலு வாயில் விழுங்கி விட்டு, எழுந்து விடுவார். ரசத்தைக் கொண்டா, மோரைக் கொண்டா... என்றெல்லாம் கேட்கவே மாடார். சேட்டன் அவரைப் பார்த்தால் மட்டுமே கொஞ்சம் சிரித்த முகமாய் இருப்பார்.) எல்லாமே நாள் தவறாமல் ஒரே மாதிரி நடக்கும். எனக்கு காலம் நகராமல் அப்படியே தினமும், அந்த உச்சிப் பொழுதிலேயே உறைந்து நிற்பது போல இருக்கும். சத்தியவாசகன் என்னருகே அநேகமாக இருப்பார். அவர் தினமும் பத்துப்பைசாவை மிச்சம் வாங்குவதில் சற்றே கண்டிப்புடன் இருப்பார், அல்லது அதற்கான டோக்கனை வாங்கிக் கொள்ளுவார். நாங்கள் அதற்கு ஒரு வடை வாங்கிக் கொள்ளுவோம். இல்லையென்றால் வாங்கவே மாட்டோம். கேண்டீன் மணி கணக்கு வைத்துக் கொள்ளுவான்.

அவனொரு அற்புதமான மனுஷன். மதியம் மூன்றரை வாக்கில்போனால் புதுப்பாலில் காஃபி போட்டுத் தருவான், அந்தப் பத்துப்பைசாவில். அருமையான காஃபியாய் இருக்கும். நன்றாக இருக்கிறதென்று சொல்லிவிட்டால், இந்தாங்க இன்னொரு அரை கிளாஸ் என்று தருவான். வேண்டாம் என்றாலும் விட மாட்டான். ”சார் காபிக்கு கணக்கு கேட்க முடியாது சார், இது என்ன வடையா.. எண்ணி வைத்துக் கொள்ள. லாஸ்ட் ட்ரிப் ஸ்டாஃப் பஸ் போகிறவரை காஃபி இருக்கணும் அவ்வளவுதான்,” என்பான். ஒரு மத்தியானம் சாப்பிடவந்த போது கொஞ்ச நேரம் எங்களைக் காத்திருக்கச் சொன்னான். கேண்டீன் ஊழியர்கள் சாப்பிட சமையலறையில் ஒரு மேஜை உண்டு அதற்கு அழைத்துப் போய், அருமையான கோழிக் குழம்பை விட்டுச் சாப்பாடு போட்டான். ”இது ஏது மணி” என்றார் சத்தியவாசகன். “காலையிலே, தெருவில மேஞ்சுக்கிட்டு இருந்த, வீட்டுக்கோழி, ”நாடார் காலேஜ்’ பஸ்ஸுக்குள்ள பாஞ்சுட்டு, அவ்வளவுதான், டிரைவர் நம்ம ஆளு என்ன செய்ய, இந்தா, கொண்ணாப்பாவம் திண்ணாப் போச்சு....” என்றான் சிரித்துக்கொண்டே. என் முகத்தில் ஏதோ மாறுதலைப் பார்த்து...”உடனே கொறை உயிரைப் போக்கி, சுத்தம் பண்ணி சமைச்சாச்சு சார், ” என்றான். கோழி ருசியாயாகவே இருந்தது. அதைவிட காலம் சற்று நகர்ந்த மாதிரி இருந்தது, திருப்தியாய் இருந்தது. சத்திய வாசகன் அனுபவித்துச் சாப்பிட்டார், என் இலையில் இருந்த கொஞ்சம் மீதச் சோற்றை, உங்களுக்கு வேண்டாம்ல்லா....” என்று எடுத்துக் கொண்டு அதையும் கோழிக்குழம்பு விட்டுச் சாப்பிட்டார்

மாலையில்தான் மணி சொன்னான். ”பாவம், உங்க ஃப்ரெண்டு ’பத்துப் பைசாவிற்கு’ நல்ல பசி... காலையில் நாஸ்டா கிடையாதுல்லா, மதியம் இங்க வந்துதான சாப்பிடுகிறார்...”என்றான். பாவம் கொஞ்சம் கஷ்டப்பட்ட குடும்பம்...இவர் படிச்சு முடிக்கத்தான் காத்திருக்கு...எப்படி சார்,. உடனே வேலை கிடைச்சுருமா... நீங்க.. ரிஜிஸ்ட்ரார்ட்ட சொன்னா நடக்கும்.. ”என்றான். நான், ”அடப்பாவி என் கதையே அந்தரத்தில் இருக்கு.. இதுல இது வேறயா..” என்று நினைத்துக் கொண்டேன். அப்புறம்தான் புரிந்தது, காலையில், பஸ்ஸ்டாப்பில் எவ்வளவு கட்டாயப்படுத்தி நீட்டினாலும்...சிகரெட்டைத் தொடமாட்டார். ஆனால் மத்தியானம் கேட்டால் ஒன்றை எடுத்துப் புகைப்பார். மணியிடம், ”என்னப்பா, இவ்வளவு தெரிஞ்சும், அவருக்கு பத்துப் பைசான்னு பேர் வச்சுருக்கீங்க, அவர் பேர் சத்தியன்” என்றேன். ”சார் உங்ககிட்ட மட்டும்தான் சொல்லறேன், கேண்டீனில் நிறைய பேருக்கு இதே பெயரை வச்சுருக்காங்க...... அவருக்கும்....சாரி சார்” என்றான்.

தேர்வெல்லாம் அநேகமாக முடிந்து விட்டது. சத்தியனிடம் நெருங்கி இருந்தேன். அவனுடைய கதைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்தது. மாமா ஒருவரின் உதவியில் குடும்பம் நடக்கிறது. அவர் திருநெல்வேலியில் இருக்கிறார். அப்பா, திருப்பரங்குன்ற மலையில் சாமியாராக இருக்கிறார். எங்கேயோ போய்விட்டார் என்று தேடிச் சலித்தபின் யாரோ சொன்னார்களாம். அதையும் யாரும் போய்ப் பார்க்கவில்லை. அவரைத் தேடிப்போகக் கூடாது என்று மாமா தடுத்துவிட்டாராம். சிலர் அதெல்லாம் இல்லை அவர் வடக்கே எங்கோ போய் வேலை பார்க்கிறார் என்றார்கள்.நான் அவனிடம் அதைப் பற்றிக் கேட்கவுமில்லை அவனும் எளிதில் சொல்லுகிற ஆளில்லை.ஆனால் தன் கஷ்டங்களைக் கொஞ்சம் சிரிப்புடன் பகிர்ந்து கொள்ளுவான். சத்தியனைத் திடீரென்று கேண்டீனில் பார்த்தேன். “காஷன் டெபாசிட் பணமெல்லாம் தர்ரேன்னாங்க, அதுக்காக வந்தேன்.. இன்னக்கி டவுணுக்கு வாங்க, சினிப்ரியாவில்” ஏணிப்படிகள்” போட்டிருக்கான்,” என்றார். நானே நினைத்துக் கொண்டிருந்தேன். தகழியின் நாவல். சாரதா, மது நடித்தது.. போகலாமே என்று. ஆனால் சினிப்ரியா போய்த் திரும்புவதற்குள், இங்கே வருகிற செக்காணூரணி கடைசி பஸ்ஸைப் பிடிக்க முடியாதே என்று யோசித்துக் கொண்டிருந்தேன். சத்தியவாசகனுடன் அமர்ந்து சாரதா நடித்த மலையாளப்படம் பார்ப்பது நல்ல அனுபவம். அவருக்கு ஓரளவு மலையாளம் தெரியும். அதனால் அவரே கூப்பிடும்போது சரி என்று சொல்லிவிட்டு தியேட்டருக்கு வந்து விடுகிறேன் என்றேன்.

அவருடன் ”சுயம்வரம்”, “வீண்டும் பிரபாதம்” எல்லாம் எங்கெங்கோ பஸ்ஸே அதிகம் செல்லாத தியேட்டர்களுக்கு எல்லாம் போய்ப் பார்த்த நினைவுடன் போனேன்.சரியாக தியேட்டர் வாசலில் நின்று கொண்டிருந்தார். தியேட்டர் புதியது. அதிலும் மதுரையில் இரண்டு தியேட்டரை உள்ளடக்கிய முதல் காம்ப்ளெக்ஸ்.அதனால் கூட்டம் அதிகமிருந்தது.அவர் ஏற்கெனவே டிக்கெட் எடுத்திருந்தார்.படம் போய்க் கொண்டே இருந்தது... ...சாரதா...கேரக்டர் படத்தில் என்ன ஆனார் என்றே தெரியவில்லை.....சத்தியன் அவ்வளவு உற்சாகமாய் இல்லை... எனக்கு நேரம் பற்றிய பயம் வேறு.பஸ் கிடைக்குமா....என்று சந்தேகம். ஒரே ஒரு வார்த்தை, கடைசிவரை இருப்போம் என்று மட்டும் சொன்னார்.

நினைத்தது போலவே பஸ் போய் விட்டிருந்தது.பசி வேறு.. எங்கே போய் தங்குவது தெரியவில்லை. பழைய மேன்ஷனில் போய் தங்கலாம் என்றால்...அங்கே யார் இருப்பார்கள் என்று தெரியாது.நாகமலை புதுக்கோட்டை வரை பஸ் கிடைக்கும். அங்கிருந்து நடக்கமுடியாது. ரொம்பத் தொலைவு.துணையும் இல்லை. ஒரு முறை அப்படியும் போனோம். அப்பொழுது துணைக்கு ஆள் இருந்தது.சத்யன் சற்று தயக்கமாக எங்க வீட்டில தங்கிக்கங்க. தார்சாலில் படுத்துக் கொள்ளலாம்.....என்றார். முருகன் இட்லிக்கடையில் சாப்பிட்டுவிட்டு, அப்படியே அவர் வீட்டுக்குப் போனோம் தினமணி டாக்கீஸ் பக்கம் இருந்தது வீடு.. கால் அசந்து விட்டது.....பத்து வீடுகள் ஒன்றையொன்று ஒட்டி வரிசையாய் இருந்தன.அநேகமாக எல்லாவீட்டிலும் விளக்குகள் அணைந்திருந்தன. கிட்டத்தட்ட வரிசையின் நடுவில் இருந்த வீட்டின் முன் நின்று கதவைத் தட்டினான். ஏற்கெனவே தெருவில் நாய்கள் குரைத்துக் கொண்டிருந்தது.கையில் ஒரு சிமினி விளக்குடன் அவனது அம்மா கதவைத் திறந்தாள்.அவன் மட்டும் உள்ளே போனான்.நான் வெளியே நின்று கொண்டிருந்தேன். வீடுகளின் முன்புற நடைபாதை அதிகம் போனால் நான்கு அடி இருக்கும்.அதிலும் அவனது வீட்டின் முன்னால் பாத் ரூம் போல ஒன்றிரண்டு இருந்தது.கண்கள் இருட்டுக்குப் பழகிய பின்னரே இதெல்லாம் பிடிபட்டது. அதற்குள் கொசு காலை கடிக்கத் தொடங்கியிருந்தது. ரீகலில் ஏதாவது இங்கிலீஷ் படம் பார்த்துவிட்டு பஸ்ஸ்டாண்டில் காத்திருந்திருந்திருக்கலாமோ என்று தோன்றியது.வீட்டு முன்னாலுள்ள தார்சாலில் ஒருவர் வேண்டுமானால்


more: http://koodu.thamizhstudio.com/thodargal_7_19.php



தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 31வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)


தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 31வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)

நாள்: சனிக்கிழமை (09-04-2011)

இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.

நேரம்: மாலை மூன்று மணி (3 மணியளவில்)

ஜீவன ஜோதி அரங்கைக் காட்டும் நிலப்படம்.


-----------------------------------------------------------------------------------------------------

முதல் பகுதி: (3 மணி)

கலந்துரையாடல், உலகக் குறும்படங்கள் திரையிடல்

இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்

இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைப்பட ஒளிப்பதிவாளர் வைட் ஆங்கிள் ரவிஷங்கரன் அவர்கள் பங்கேற்று ஒளிப்பதிவு தொடர்பான முக்கியமான வழிகாட்டலை நடத்துகிறார். ஆர்வலர்கள் ஒளிப்பதிவு தொடர்பான தங்களின் அனைத்து விதமான ஐயங்களையும் கேட்டு தெளிவுப் பெறலாம்.

இவர் திருட்டுப் பயலே, வியாபாரி போன்ற திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்

இந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள்.

இந்த மாதம் தேர்தல் சிறப்புக் குறும்படங்கள்.

குறும்படத்தின் பெயர்இயக்குனர் பெயர்கால அளவு

வாழ்க ஜனநாயகம்

கணபதி

15 நிமிடங்கள்

விளையாட்டு

நீலகண்டன்

20 நிமிடங்கள்
அரசியல்ல இதெல்லாம்

வசந்த்

05 நிமிடங்கள்
வீதி இலக்கியம் ஸ்ரீ கணேஷ்08 நிமிடங்கள்

மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்:

மூன்றாம் பகுதிக்கு இந்த மாதம் படத்தொகுப்பாளர் பி. லெனின் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். நான்கு குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசி ஆராய்ந்து அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்க உள்ளார்.

லெனின் அவர்கள்தான் தமிழின் முதலில் குறும்பட வளர்ச்சிக்கு வித்திட்டவர். இவர் இயக்கிய நாக் அவுட் குறும்படம்தான் தமிழில் குறும்படங்களுக்கான களம் அமைத்துக் கொடுத்தது என்றால் அது மிகையல்ல. மேலும், திரைப்படத் துறையில் வெற்றிகரமான படத்தொகுப்பாளராக பணியாற்றியவர். காதலன் திரைப்படத்திற்கு படத்தொகுப்பிற்காக வி.டி. விஜயனுடன் இணைந்து தேசிய விருது பெற்றவர்.

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:
9840698236, 9894422268


http://thamizhstudio.com/shortfilm_guidance_kv_31.php



Tuesday, April 5, 2011

கதை சொல்லி - ந. முத்துசாமி (N.Muthuswamy)



கதை சொல்லி - ந. முத்துசாமி (N.Muthuswamy)

இதயா



ஆங்காங்கே நடைபாதைகளில் புதிதாக முளைக்கத் தொடங்கிவிட்டது பச்சை வண்ண வரிக்குதிரை போன்ற தர்பூசணிக் கடைகள். ஒலை வைத்து இளநீர் விற்கும் கடைகளிலும் புதிய இணைப்பாக சிறிது காலத்திற்கு சேர்ந்துள்ளது தர்பூசணி. அடுக்கடுக்காக நேர்த்தியாக அடுக்கப்பட்ட பந்துகள் கண்களை பற்றிக் கொள்ளும். முழுக்காய்கள் வாங்கிச் செல்லா விட்டாலும், கண்களைத் திருப்ப நினைத்தும் கால்கள் நின்று அரிந்து வைக்கப்பட்ட பழங்களைச் சுவைத்துச் செல்லும். சில கடைகளில் அரிந்து வைக்கப்பட்ட காய்கள் சிறிய மேசை மீது வைத்து குழந்தைகளுக்கு மூடும் கொசு வலையால் மூடப்பட்டிருக்கும் அல்லது சில கடைகளில் கண்ணாடியிட்ட,எளிதில் திறக்கக் கூடிய‌ சிறிய அலமாரிபோல் கூண்டு செய்யப்ப‌ட்டு உபயோகப்படுத்தப்படும். வரவிருக்கும் தீராக் கோடையை முன்னறிவிக்கச் செய்கிறது தர்பூசணி பழம். ந.முத்துசாமி கதைசொல்லிக்காக பின் மதியப் பொழுதை ஒதுக்கித் தந்திருந்தார். இந்த முன் கோடையும் பருவ காலங்களினொரு அரூப நிகழ்வாகவே இருக்கிறது.

வரலாறும் தோறும் உலகில் மாற்றங்களைச் செய்வது தனி மனிதர்கள். அவர்கள் எண்ணங்களைச் செய்ய முனைகையில் தோன்றும் முனைப்பே சமூகத்தையும் அதன் இயங்கியலையும் மாற்றி அமைக்கிறது. அதிதீவர கலைஞர்கள் தொடங்கி சர்வாதிகள் வரை இந்த உதாரணத்தை சாதாரணமாகப் பொருத்திப் பார்க்கலாம். ஒரு சமூகத்தின் கூட்டு மனப்பான்மையை உருவாக்க இல்லை உருவகித்த ஒன்றை வழி நடுத்த அம்மனிதலாயே முடியும். அவனே சரித்திரமாகவும் வரலாற்றின் நாயக‌னோ அல்லது வரலாறே தூற்றும் துர்கனாவாகவும் மாறுகிறான். தமிழின் மிகச் சிறந்த ஆளுமைகளில் ஒருவர் ந.முத்துசாமி. தமிழில் நவீன நாடகப்பள்ளியை தொடங்கியவர் அவர்.

நாடகங்கள் எல்லாம் சினிமாக மாறத் தொடங்கியும், தொலைக்காட்சி வீடுகளில் பயிரிடப் படத் தொடங்கிய பின்னர் மேடை நாடகங்கள் அதன் மூச்சை இழுத்துப் பிடிக்கத் தொடங்கியது. பாதிரியார் வந்து இறுதிப் பிரார்த்தனை செய்து உப்புத் தண்ணீர் தெளித்து செபிக்க வேண்டியது மட்டும் தான் பாக்கி.

நவீன‌ நாடங்களை முன்னெடுத்துச் செல்ல ந.முத்துசாமி அவர்களால் உருவாக்கப்பட்டது கூத்துப்பட்டறை. நடிப்பு என்பது முற்றான தியானத்தைப் போன்றது. நடிப்புப் பயிற்சி பெற்றவர்கள் இதை எளிதில் உண‌ரக்கூடும். தன்னை மறந்த நிலை நடிப்பு. தான் இல்லாமல் வேறாகிப் போய், தன் உள்ளே சென்று தன் முனைப்பால் வேறொருவனாக நிகழ்த்திக் காட்டுவது நடிப்பு. நாடகம் முடிந்த கணம் ஒரு நடிகன் ஆழ்ந்த அமைதியை உணர்வான். உலகமே புதிதாகிப் போனது போல் அவன் மனது புத்துணர்ச்சியுடன் இருக்கும். மன இறுக்கங்கள் எல்லாம் தளர்ந்து, அழுக்கெல்லாம் துடைக்கப்பட்ட தெளிந்த மன நிலை கண் முன் நிற்கும்.

நடிப்பென்ப‌து என்பது குழு விளையாட்டில் ஒரு ஆட்டக்காரனை போன்றது. யார் தோற்றாலும் தோல்வி முழுவதும் குழுவையே சாரும். யார் ஒருவன் மட்டும் வென்றாலும் தோல்வி குழுவையே சாரும். நடிப்புப் பயிற்சியும் விளையாட்டைப் போன்ற நெறிமுறைகளைக் கைக்கொண்டதே. ஒரு முழு மனிதனாலே மட்டும் ஒரு சிறந்த நடிகனாக இருக்க இயலும். ஒரு சிற‌ந்த நடிகனும் முழு மனிதனாக இருப்பான். சார்லி சாப்ளின், மர்லின் பிராண்டோ மிகச் சிறந்த உதாரணம்.தமிழில் உச்ச நட்சத்திரங்களைப் போட்டு நாம் குழப்பிக் கொள்ள இங்கு அவசியமில்லை.‌ தமிழில் மிகச் சிறந்த கலைஞர்களையும் நவீன‌ நாட‌க‌ங்க‌ளையும் உருவாக்கும்

more: http://koodu.thamizhstudio.com/kadhaisolli_19.php



வலது புறம் செல்லவும் - 2



வலது புறம் செல்லவும் - 2


இயக்குனர் அகத்தியன்04-04-2011, 23.58 PM

கடவுளிடம் அவரின் உதவியாளர்கள் வந்து நின்றார்கள். "என்ன?’’ என்று கேட்டார். பூமியில் ஒருவன் ``போதை’’ என்பதையும் ``குடி’’ என்பதையும் நியாயப்படுத்தி எழுதிக் கொண்டிருக்கிறான் என்றனர். கடவுள் ஒரு தேவதூதனை அழைத்தார். எழுதுபவனிடம் சில குறிப்புகள் கொடுத்து விட்டு வா என்று பணித்தார். தேவதூதன் கொடுத்த குறிப்புகள்.

ஒரு பெண்ணின் சகோதரன் எப்பொழுது தன் நண்பர்களுடன் அமர்ந்து மதுவருந்தினாலும் கொஞ்சம் போதை ஏறியவுடன் தன் நண்பர்களிடம் சவால் விடுவது ``என் தங்கச்சிய விட ஒரு செம பிகரை காட்டு பாக்கலாம்’’. யாரோ ஒரு பெண்ணைப் பார்த்து பரவசப்படும் ஆணைப் போல் அவன் தன் தங்கையை வர்ணிப்பான். ஒருமுறை நிகழ்ந்தது அடிக்கடி நிகழ்ந்ததால் சீரியசான விஷயம் காமெடி ஆகிப் போனது. ஆம். கடைசியில் அது வடிவேலு அர்ஜூன் நடித்த ஒரு திரைப்படத்தில் காமெடியும் ஆகிப்போனது.

மதுவருந்தும் ஓரிடத்தில் அறிமுகமில்லாத இருவர் எதிரெதிரே அமர்ந்திருந்தனர். ஒருவன் சோகமாக இருக்க மற்றவன் காரணம் கேட்டான். சோகமாக இருந்தவன் மெல்ல குடும்பப் பிரச்சினை என்றான். பேச்சு நழுவி குடும்ப உறுப்பினர்களை பற்றிய குறைகளை பட்டியல் இட்டது. சோகமாக இருந்தவனின் மனைவி பட்டியலில் முதலிடம் வகித்தாள். அடுத்தவனுக்கு இவனின் குற்றப்பத்திரிகையால் இவன் மனைவி மேல் அதீத கோபம். போதை கொஞ்சம் தலைக்கேற, சோகமானவன் அழ, மற்றவன் ``கவலைப்படாதே சகோதரா, உன் வீட்டுக்கு வந்து அவளை நான் தூக்கிப் போட்டு மிதிக்கிறேன்’’ என்றான்.

"அந்தத் தேவடியாளுக்கு எவ்வளவு திமிரு’’ என்றான். முதலாமவன் "அதையும் சொல்லிட்டேனா’’ என்று அழுதான்.

அந்த தேவதூதன் முதலில் இந்த இரண்டையும் சொல்லிவிட்டு கூட்டமாய்க் குடிப்பதும் முன்பின் தெரியாதவர்களோடு குடிப்பதும தேவையா என்று கேட்டார். நல்லவேளை குடிப்பது தேவையா என்று கேட்கவில்லை.

கொஞ்ச நாள் முன்பு Drink and Drive பிடித்துக் கொண்டிருந்தார், ஒரு காவலர். இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டான். காவலர் பக்கத்தில் இருந்த வாழைப்பழம் விற்பவரை அழைத்து அவர் முகத்தில் ஊதச் சொன்னார். மறுநாள் வாழைப்பழம் விற்பவரைச் சந்தித்து காரணம் கேட்டபோது 'காவலர் மதுவருந்தி இருந்தார், அதனால் வாடை தெரியாது என்பதால்', என்றார். இரவு நேரக் காவலில் காவலர்களை ஊதச் சொல்லி யார் கேட்பது.. இதைச் சொல்லிவிட்டு அந்த தூதன் சொன்னது "வாகனங்களை ஓட்டும்போது நாம் குடிக்காமல் இருந்தால் அவர்களை ஊதச் சொல்லலாம். சட்டத்துக்கு உட்படுத்தலாம்..’’

Assignment, sketch இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் மதுவுக்கும் உள்ள தொடர்பு உங்களில் யாருக்காவது தெரியுமா? அசைன்மென்ட் என்பது ஒரு காரியத்தைச் செய்ய ஒருவரிடம் தருவது. ஸ்கெட்ச் என்பது வரைபடம். இது நாம் அறிந்த அர்த்தங்கள். Oxford Dictionary Assignment என்பதற்கு "A task or piece of work that somebody is given to do usually as part of their job or studies” என்றும் The act of giving something to somebody என்றும் சொல்கிறது. Sketch என்பதை "a simple picture that is drawn quickly and does not have many details” என்றும், A short funny scene on television in theater என்றும், a short report of story that gives only basic details about something என்றும் சொல்கிறது. இப்பொழுது தமிழகத்தின் நடைமுறையில் இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் என்ன அர்த்தம் என்று பார்த்து விடுவோம்.

Assignment என்பது ஒருவரை கொலை செய்ய ஒருவரிடம் ஒப்படைக்கப்படும் வேலை.

Sketch என்பது அந்த வேலையை ஏற்றுக் கொண்டவர் தன் உதவியாளர்களிடம் எப்படி எங்கு எப்பொழுது அந்த வேலையை, அதாவது கொலையை நிகழ்த்துவது என்று திட்டமிட்டுக்கொடுப்பது.

இந்த Assignment and sketch க்கும் மதுவுக்கும் என்ன தொடர்பு? ஒருவரைக் கொலை செய்யவேண்டும் என்று வன்முறைக் குற்றவாளியை (Rowdy) ஒருவன் அணுகும்போதே இருவருக்கும் இடையில் மதுவே முதலிடம் பெறுகிறது. அந்த வன்முறைக் குற்றவாளி தன்னுடன் இருப்பவர்களை அழைத்து Sketch போடும்போது மது தலைவிரித்தாடுகிறது. இந்த ஸ்கெட்ச் என்பதே ஒரு வெள்ளைத்தாளில் அந்த வன்முறைக் குற்றவாளி பென்சிலால் வரையும் கோடுகள். யார் கொலை செய்யப்பட வேண்டுமோ அவரது வீடு ஒரு கோடு. அவர் காலையில் நடைப் பயிர்ச்சி செய்பவர் என்றால் அடுத்த கோடு. இப்படி அவரின் அன்றாட நடவடிக்கைகளுக்கு கோடுகள் போடப்படும். நாள் நிர்ணயிக்கப்படும். பதினேழு முதல் இருவது வயது வரை உள்ள இளைஞர்கள் அழைக்கப்படுவர். திட்டம் விவரிக்கப்படும். கொலையை அரங்கேற்றுவதற்கு முதல் நாளிலிருந்துகட்டிங் கொடுக்கப்படும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு கட்டிங். மெல்ல மனமும் உடலும் மதுவிற்கு உடன்படும். பாலுறவு மனதில் மென்மையை விதைக்கும். எனவே பாலுணர்ச்சி தோன்றா வண்ணம் போதையில் வைக்கப்படுவர். எங்கு, எப்பொழுது, எப்படி, யார் நிறைவேற்றுவது, யார் காரில் இருப்பது, யார் பைக்கில் இருப்பது, எப்படி இருப்பிடம் சேர்வது என்றெல்லாம் சொல்லிக் கொடுக்கப்பட்டு கொலை நிகழ்வதற்கு அரைமணி நேரமோ அல்லது ஒரு மணி நேரமோ முன்பாக அளவில்லா மது ஊற்றிக் கொடுக்கப்படும். மதுவின் ஆளுமையில் மனிதாபிமானம் மறந்து போனால்தான் கொலையை நிகழ்த்த முடியும். இந்த வகையில் மது நிறையக் கொலைகளைச் செய்திருக்கிறது. துப்பாக்கி, அரிவாள் போன்று மதுவும் ஒரு ஆயுதமாகிப் போனது இன்று.

பரிதாபத்திற்குரிய காவலர்களுக்காக நாம் சில நிமிடங்கள் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும. நம் அண்ணனோ, அப்பாவோ அந்த இடத்தில் இருந்தால்தான் நம் பிரார்த்தனையின் அர்த்தத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். இந்தப் பிரார்த்தனைக்கான காரணம் ஒரு சொல். என்கவுன்டர்.

வன்முறைக் குற்றவாளி சமூகத்தில் ஊடுருவி பாலியல் குற்றங்களில் ஈடுபடும்போதுதான் மக்கள் தெருவுக்கு வந்து போராட ஆரம்பிக்கின்றனர். அதிலும் மலர்களைக் கசக்கும்போதுதான் செடிகள் வேர்பிடுங்கிக் கொண்டு வீதிக்கு வருகின்றன. தவிர்க்க இயலாமல் சமூகத்தின் அமைதிக்காகவோ வன்முறைக் குற்றவாளிகளை உளவியல் ரீதியாக செயலிழக்கச் செய்வதற்காகவோ என்கவுன்டரை கையிலெடுக்கவேண்டிய நிர்பந்தத்திற்கு மறைமுக வாய்மொழி உத்தரவுகளால் காவல் நிர்வாகம் உட்படுத்தப்படுகிறது.

இங்கே மது என்ன செய்கிறது? யாரோ ஒருவர் கைகாட்டப்படுகிறார். அவர்தான் அதை நிறைவேற்ற வேண்டும். அவர் நமது அண்ணனாக இருக்கலாம். அப்பாவாக இருக்கலாம். சராசரி காவலர்மேல் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு அவர் உட்பட்டிருந்தாலும் துப்பாக்கியை எடுத்து பட்டென்று போட்டுத்தள்ளும் சினிமா வில்லன் அல்ல அந்தக் காவலர். உத்தரவை நிறைவேற்றியாக வேண்டும். இங்கும் மனிதாபிமானத்தைக் கொல்ல மதுதான் பயன்படுகிறது. ஒரு பொம்மையைப் போல் துப்பாக்கியை எடுத்து, ஒரு பொம்மையைச் சுட்ட உணர்வுடன், காயப்பட்டு மருத்துவமனையில் இருக்கும்போது சுட்டது மனிதனா? மதுவா? என்று குழம்பும் அந்தக் காவலருக்காக பிரார்த்திப்போம்.

இதுவரை குடித்துவிட்டு தங்கையையோ, அக்காவையோ, அம்மாவையோ கற்பழித்ததாக செய்திகள் இல்லை. மகளைக் கற்பழித்த தந்தை பற்றி படித்திருக்கிறேன். மகளுடன் குடும்பம் நடத்திய தந்தையைப் பார்த்திருக்கிறேன். ஒன்று விட்ட சகோதரனும், சகோதரியும் காதலித்து திருமணம் செய்து கொள்ள உறவுகளை விட்டு ஓடிப்போனதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். சகோதரியுடன் உடலுறவு கொண்ட அண்ணனைச் சந்தித்திருக்கிறேன். இதெல்லாம் எதற்காக? ஒரு பெண்ணை அல்லது ஒரு குடும்பத்தலைவியை குறி வைக்கும்போது மதுவைக் கையிலெடுக்கின்றனர். ஒருவனோ, இருவரோ, ஒரு குழுவோ மதுவருந்தி ஒரு பெண்ணைக் கற்பழிப்பது மதுவின் செயல் திறமையாக மிளிர்கிறது. ஆனால் பாலுணர்வின் தேவைக்காக பெண்கள் மதுவைக் கையிலெடுக்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடியுமா?

இந்தியாவின் எந்த சுற்றுலாத்தலமாக இருந்தாலும் சரி, ஆக்ரா, நைனிடால், குற்றாலம், ஊட்டி, கொடைக்கானல் இப்படி உணவு உண்ண ஒரு உணவகத்தில் அமர்ந்தால் ஒரு பையன் வந்து நிற்பான், வயதைக் கேட்டால் 18 என்பான். ஒரு 14 அல்லது 15ல் இருப்பான் சற்று 10 ல் இருந்தும் ஆரம்பிக்கும். மிரட்டி வயது கேட்டால் ஒரு பெரியவர் வருவார்.. அறைகளில் தங்கும்போதும் இதுதான்.

அறைகளில் தங்கும் விருந்தினர்கள் மதுவருந்திவிட்டு கொஞ்சம் மிச்சம் மீதி இருந்தால் வேண்டாம் என்று விட்டு விட்டு வீடு திரும்ப.. அந்த சிறார்களால் கொஞ்சம் கொஞ்சமாக மது சேகரிக்கப்படும். வாரவிடுமுறையில் இரண்டு இரண்டு பேராகவோ நான்கு எண்ணிக்கையின் அடிப்படையிலோ சேகரிக்கப்பட்ட மதுவை எடுத்துக் கொள்கின்றனர். மது அருந்தியவுடன் அந்த சிறார்களுக்கு வடிகாலாக ஆணுக்கு ஆண் என்று ஆகிவிடுகிறது.

சாதாரண உணவு விடுதியில் பத்து வயதுப் பையன்களை பாத்திரம் தேய்ப்பதற்கும் மேலே குறிப்பிட்ட வேலைகளுக்கும் சேர்த்துக் கொள்கின்றனர். அவர்களது தங்குமிடம் பெரும்பாலும் ஓட்டலில் சமையல் கூடத்தின் மேலே அமைந்து விடுகிறது. வெப்பம் தாங்க இயலாது, பத்திற்கும் பதினைந்துக்கும் இடைப்பட்ட சிறுவர்கள் நாடுவது பகல் நேரத்தில் பூங்காக்களை. நான்கு மணி நேரமோ மூன்று மணி நேரமோ பூங்காவில் தூங்க வரும் அந்த உழைப்பாளிகளுக்கு உழைக்க மதுவும் கொடுத்து, அதுவும் கொடுப்பது கொடுமையான விஷயம்.

பூங்காக்களில் தூங்கும் இவர்கள் வசதி படைத்த பெண்மணிகளால் கவனிக்கப்படுகிறார்கள். பரிவு காட்டப்படுகிறார்கள், வீட்டிற்கு வா என்று அழைக்கப்படுகிறார்கள். சாப்பிடு என்று அரவணைக்கப்படுகிறார்கள். கூல் டிரிங்ஸ் என்று லெமநேட் கலந்த வோட்காவோ அல்லது ஜின்னோ அருந்த வைக்கப்படுகிறார்கள். ஒரு பெண்ணால் பாலூட்டி வளர்க்கப் பெற்று மடியில் கிடந்தவன், இன்னொரு பெண்ணால்.........


more: http://koodu.thamizhstudio.com/thodargal_16_2.php