Saturday, August 1, 2009

V.R.P Academy of Arts நடத்தும் திரைப்பட பயிலரங்கம்.


நாள்: 09-08-2009 முதல் 16-08-2009 வரை. (எட்டு நாட்கள்)
இடம்: சிவகாசி
கட்டணம்: 2500/- (உணவு, தங்குமிடம் உட்பட)
1800/- ( உணவு, இருப்பிடம் தவிர்த்து)

மாணவர்களுக்கு:

கட்டணம்: 1800/- (உணவு, தங்குமிடம் உட்பட)
1000/- ( உணவு, இருப்பிடம் தவிர்த்து)


இடம்: ஐஸ்வர்யா கல்யாண மண்டபம், புறவழி சாலை, சிவகாசி.

சிவகாசியை சேர்ந்த V.R.P Academy of Arts என்கிற திரைப்பட கல்வி நிறுவனம் நடத்தும் திரைப்பட பயிலரங்கம் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி முதல் தொடர்ந்து எட்டு நாட்கள் மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

கதை, திரைக்கதை அமைத்தல், இசை, படத்தொகுப்பு, ஒளிப்பதிவு, இயக்கம் என அனைத்து துறைகளும் மிக சிறந்த வல்லுனர்களை கொண்டு பயிற்றுவிக்கப்படும். இறுதி நாளன்று மாணவர்கள் குழுவாக பிரிக்கப்பட்டு அவர்களே ஒரு குறும்படம் எடுத்து அதை முழுமையான படமாக மாற்றி திரையிட வேண்டும். இதில் சிறந்த திரைப்படங்களுக்கு விருதுகளும், பரிசுப் பொருட்களும் உண்டு. மேலும்,

இதன் சிறப்பம்சங்கள்:

1. நாள்தோறும் சிறந்த எழுத்தாளர், இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், ஒளிப்பதிவாளர் ஆகியோரின் உரையுடன் கலந்துரையாடலும் நடைபெறும்.

2. ஒவ்வொரு நாளும் இரவு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, ஆகிய மொழிகளில் வெளிவந்த சிறந்த திரைப்படங்கள் திரையிடப்பட்டு அடுத்த நாள் காலை அதுபற்றிய கலந்துரையாடல் நடைபெறும்.

3. இதுமட்டுமின்றி இந்த எட்டு நாள் நிகழ்வில் பல்வேறு சிறப்பு அழைப்பாளர்களும்ம திரைப்பட நடிகர்கள், தொலைகாட்சி நடிகர்கள் என பலவாறு துறை கலைஞர்களும் வந்து அவர்கள் சார்ந்த துறை பற்றி உரையாற்றுவார்கள். மேலும் அவர்களின் அனுபவங்களையும் மாணவர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்.

4. தமிழ் ஸ்டுடியோ.காம் (www.thamizhstudio.com) நடத்தும் குறும்பட வட்டமும் இந்நிகழ்வில் நடைபெறும்.

5. அனைத்து பங்கேற்பாளர்களும் உறுதியாக ஒரு குறும்படம் எடுக்க வேண்டும். அவர்களிடம் கேமரா இல்லையென்றால் குறைந்த செலவில் வாடகைக்கு எடுத்துக் கொடுக்கப்படும். மேலும் கணிப்பொறி உள்ளிட்ட படத்தொகுப்பு சாதனங்கள் கொடுக்கப்பட்டு படத்தொகுப்பும் செய்து ஒரு முழுமையான படமாக கொண்டு வரவேண்டும். இதில் தேர்ந்தெடுக்கப்படும் படங்களுக்கு பரிசுகள் உண்டு.

6. கதை, திரைக்கதை, வசனம் எழுதுதல், இயக்கம் உள்ளிட்ட துறைகளில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.

7. அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் சான்றிதழ், நினைவுக் கோப்பை, பரிசுப் பொருட்களும் வழங்கப்படும்.

8. சுவையான சைவ, அசைவ உணவுகள் நாள்தோறும் பரிமாறப்படும்.

9. தனியாக தங்குமிடம் வேண்டுபவர்களுக்கு குறைந்த செலவில் ஏற்பாடு செய்துத் தரப்படும்.

10. பேருந்து, ரயில் டிக்கெட் போன்றவையும் தேவைப்படுபவர்களுக்கு எடுத்துத் தரப்படும். (இதற்கு தேவையான கட்டணத்தை அவர்களே செலுத்த வேண்டும்)

11. ஆண்களுக்கு பயிற்சி நடைபெறும் இடத்திலேயே தங்குமிடம் தயார் செய்துக் கொடுக்கப்படும். பெண்களுக்கு வேறொரு இடத்தில் தனியாக தங்குமிடம் தயார் செய்துக் கொடுக்கப்படும்.

12. எட்டு நாட்களுக்கு கட்டணம்: 3,300/- (உணவு, தங்குமிடம் உட்பட)

13. பெண்களுடன் யாரேனும் துணைக்கு வந்தால் அவர்களுக்கும் அறை ஏற்பாடு செய்துத் தரப்படும். அதற்கான கட்டணம்: 1500/-

பணம் செலுத்தும் முறை:

V.R.P. Manohar என்கிற பெயரில் சிவகாசியில் மாற்றத்தக்க வகையில் D.D. எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். நேரில் வந்தும் கட்டணம் செலுத்தலாம். காசோலை அனுமதிக்கப்படா.

முகவரி:

V.R.P. MANOHAR,
1503, GNANAGIRI ROAD,
KAMARAJAPURAM COLONY,
SIVAKASI - 626189.

பங்கேற்பாளர்கள் ICICI வங்கிக்கணக்கு வழியாகவும் பணப் பரிமாற்றம் செய்யலாம். அல்லது ஏதேனும் ஒரு ICICI வங்கியில் கீழ்க்கண்ட வங்கிக்கணக்கு எண்ணில் பணம் செலுத்தலாம். ஆனால் இவர்கள் பயிற்சிக் கட்டணத்துடன், ருபாய் 165/- சேர்த்து செலுத்த வேண்டும்.

பணம் செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு எண்: A/c No.617201503422

பெயர்: V.R.P. MANOHAR,

* பங்கேற்பாளர்கள் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் வரவேண்டும்.

* பங்கேற்பாளர்கள் இதற்கு முன்னர் குறும்படங்கள், ஆவணப்படங்கள் எடுத்திருந்தால் அதனையும் தங்களுடன் கொண்டு வரலாம். அக்குறும்படங்கள் திரையிடப்பட்டு அதுபற்றிய விவாதங்கள் நடத்தப்படும்.

பங்கேற்கும் திரை உலக பிரபலங்கள்:

எழுத்தாளர் பிரபஞ்சன்,
எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி,
எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன்.

இயக்குனர் கே. ரங்கராஜ் (உதய கீதம்),
இயக்குனர் அனந்த நாராயணன் (வால்மீகி)
இயக்குனர் கௌரி மனோகர் (தென்றல் வரும் தெரு),
வி.ஆர்.பி. மனோகர் (குறும்பட இயக்குனர்)

கே. குணா (வசனகர்த்தா - மௌனம் சம்மதம், ஏர்போர்ட்)
பழனியப்பன், தம்பு - ஒளிப்பதிவாளர்கள்
பூபதி - நிகழ்ச்சி தலைமை (எஸ்.எஸ். மியூசிக்)
ராஜம் - நிர்வாக இயக்குனர் (மீடியா பிளானெட் - Next Generation Cinema, Chennai)

சான்றிதழ்கள், நினைவுப் பரிசுகள், விருதுகள் உட்பட ரூபாய் 500 மதிப்புள்ள பரிசுப் பொருளும் வழங்கப்படும்.


* மேலும் விபரங்களுக்கு: 99524 24292


1 comment:

துபாய் ராஜா said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

Post a Comment