Saturday, April 4, 2009

தமிழ் ஸ்டுடியோ.காம் வழங்கும் ஏப்ரல் மாத சிறந்த வலைப்பதிவர் விருது

நாள்: சனிக்கிழமை (11-04-09)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது. 
நேரம்: காலை 10 முதல் இரவு  7 வரை 


10 AM - 2 PM - உலகப் படங்கள் / உலகக் குறும்படங்கள் / ஆவணப்படங்கள் திரையிடல்

3 PM - 7 PM - குறும்பட வட்டம் 

முதல் பகுதி: (3 PM-4 PM) - இலக்கியமும் குறும்படங்களும்

இலக்கியம் பகுதியல் இம்மாதம் "புன்னகை உலகம்" சிற்றிதழின் ஆசிரியர் திரு. "சுசி திருஞானம்" அவர்கள் பங்குபெற்று இலக்கியமும் குறும்படங்களும் என்கிற தலைப்பில் உரையாற்றுகிறார். இவர் "வெற்றியின் அறிவியல்", "நேர நிர்வாகம்", "உனக்குள் ஒரு மேதை", போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார். "விஜய்" தொலைக்காட்சியின் செய்திப் பிரிவில் இன்புட் எடிட்டர் ஆக இருந்துள்ளார். மேலும் சன் நியூஸ் தொலைக்காட்சியின் சேனல் ஹெட் ஆகவும் இருந்துள்ளார். இவர் இம்மாதம் இலக்கியப் பிரிவில் மிகச்சிறந்த சமூதாய தாக்கத்துடன் வெளிவந்த ஒரு சிறுகதை அல்லது நாவலின் ஒரு பகுதி பற்றி நம்மிடையே விரிவாக பேசியும், மேலும் அந்த சிறுகதையை எப்படி படமாக்கலாம் என்று தன்னுடைய விரிவான ஆலோசனையும் வழங்க உள்ளார்.

மேலும் சிறந்த பதிவருக்கான விருது வழங்கும் விழாவும் நடைபெறும். இம்மாதம் சிறந்த பதிவருக்கான விருது பெறுபவர் திரு. வினோத் அவர்கள். இவரது வலைப்பூ.http://agnipaarvai.blogspot.com/

தமிழ் ஸ்டுடியோ.காம் சிறந்த பதிவருக்கான விருது வழங்கும் விழா மாதந்தோறும் சிறந்தப் பதிவர் தெரிவு செய்யப்பட்டு வழங்கப்படுகின்றது. விருது வழங்கப்படும் மாதத்திற்கு முந்தைய மாதத்தில் பதிவர் எழுதிய கட்டுரைகள், பதிவுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.


இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல் 

திரைப்படங்களில் "ஸ்டோரி போர்ட்" ஆர்டிஸ்டாக பணிபுரியும் திரு. மாணிக்கம் அவர்கள் இம்மாதம் குறும்படங்களுக்கான "ஸ்டோரி போர்ட்" உருவாக்கம் குறித்து வழிகாட்ட உள்ளார். மேலும் இவர் பல படங்களில் இணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். பத்மஸ்ரீ கமலஹாசனின் பல படங்களுக்கு இவர்தான் "ஸ்டோரி போர்ட்" ஆர்டிஸ்டாக பணிபுரிந்துள்ளார். விருமாண்டி, வெளிவராத மருதநாயகம் போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவையாகும். எனவே வாசகர்கள் அது குறித்த தங்களது ஐயங்களை திரு. மாணிக்கம் அவர்களிடம் கேட்டு விளக்கம் பெறலாம். இந்நிகழ்வு முழுக்க முழுக்க ஒரு கலந்துரையாடல் நிகழ்வாகும். 

மூன்றாம் பகுதி:  (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்

தி. நீலகண்டன் அவர்கள் இயக்கிய "நல்லதோர் வீணை செய்வோம்"திரு. விஜிக்குமார்அவர்கள் இயக்கிய "குப்பை மனசெல்லாம்", திரு. சக்தி பாரதி அவர்கள் இயக்கிய "எங்கெங்கு காணினும்..." ஆகியக் குறும்படங்கள் திரையிடப்படுகின்றன.

குறும்படங்கள் திரையிடப்பட்ட பின்னர் அதுபற்றிய கலதுரையாடல் நடைபெறும். இயக்குனர் மற்றும் வாசகர்களிடையே நடைபெறும் இக்கலந்துரையாடலில் குறும்படங்களின் நிறைகளும், குறைகளும் அலசப்படும். 

மேலும் இம்மாதம் முதல் புதிதாக, குறும்படங்களை காண்பதற்கு ஒரு சிறப்பு விருந்தினர் அழைக்கப்படுவார். குறும்படங்கள் திரையிடப்பட்டு, கலந்துரையாடல் முடிந்த பின்னர் இந்த சிறப்பு விருந்தினர் அக்குறும்படங்கள் குறித்தான தனது பார்வையை வெளிப்படுத்துவார். 

இம்மாதம் இயக்குனர் திரு, ஜெயபாரதி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்கிறார். 2006 ஆம் ஆண்டு இவர் இயக்கிய "குருஷத்ரம்" திரைப்படம் இந்திய பாகிஸ்தான் பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. மேலும், இவர் 2002 ஆம் ஆண்டு இயக்கிய"நண்பா நண்பா" திரைப்படத்தில் நடித்ததற்காக திரு. சந்திரசேகர் அவர்கள் நடுவண் அரசின் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றார்.

6.30 PM - 7 PM - வாசகர்களின் தேவைகளை பற்றி வாசகர்களே பேசும் புதியப் பகுதி இம்மாதம் முதல் நடைபெற உள்ளது.

சிறந்த வலைப்பதிவருக்கு சிறிய அளவிலான ஊக்கத் தொகை வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

மறக்காமல் வாசகர்கள் தங்கள் சந்தாத் தொகையினை கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். சந்தாத்தொகை ரூபாய் 50 மட்டும். 

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:

9840698236, 9894422268 

1 comment:

உண்மைத்தமிழன் said...

பதிவர் அக்னிபார்வை அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்..!

Post a Comment