Tuesday, January 17, 2012

ஆனந்த் பட்வர்தனை சந்தியுங்கள்..

ஆனந்த் பட்வர்தனை சந்தியுங்கள்..

இந்தியாவின் மிக முக்கியமான ஆவணப்பட இயக்குனரான ஆனந்த பட்வர்தன் அவர்கள் இயக்கியுள்ள JAI BHIM COMRADE திரைப்படம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 5 அளவில் திரையிடப்படவிருக்கிறது. படம் பார்த்த பின்னர் ஆனந்த் பட்வர்தனுடன் கலந்துரையாடலாம். அனைவரும் வாருங்கள்.
நாள்: 20-01-2012

இடம்: பாலமந்திர் ஜெர்மன் ஹால்
பிரகாசம் சாலை, (அபிபுல்லா சாலை நடிகர் சங்கம் அருகில், ஜி.என். செட்டி சாலை அருகில்)
தி. நகர்

நேரம்: மாலை 5 மணிக்கு

படம்: JAI BHIM COMRADE- 3 HOURS AND 20 MTS

Wednesday, January 11, 2012

கடலூர் மக்களுக்கு உதவுங்கள்

http://thamizhstudio.com/kalam_kadaloor_thane.php

கடலூர் மக்களுக்கு உதவுங்கள்

வணக்கம் நண்பர்களே,

பொது தளத்தில் இயங்கும் அனைவருக்கும், சமூக பொறுப்பும், கடமைகளும் இருக்க வேண்டும். அந்த வகையில் கடலூரில் தானே புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு உதவ தமிழ் ஸ்டுடியோ முனைந்துள்ளது. இதில் வாசகர்களாகிய உங்கள் பங்கு மிக அவசியம்.

இயன்ற வாசகர்கள், தன்னார்வலர்கள், வலைப்பதிவர்கள், பெரிய பதவிகளில் இருக்கும் அனைவரும் இந்த உதவும் இயக்கத்திற்கு உங்கள் பங்களிப்பை செலுத்த வேண்டும் என்று அன்புடன் கோருகிறேன்.

ஒரு ரூபாயாக இருந்தாலும் கூட உங்கள் பங்களிப்பு மட்டுமே முக்கியம். இந்த பணம் கடலூரில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பல்வேறு வகைகளில் வழங்கப்படவிருக்கிறது. என்னதான் அரசாங்கம் செடிக் கன்றுகள் கொடுத்து, ஒரு வருடம் பராமரிப்பு செய்யும் செலவையும் கவனித்துக் கொண்டாலும், கடலூர் விவசாயிகளின் இழப்பை ஈடு கட்ட முடியாது. எனவே இதில் அனைவரும் தங்களாலான பங்களிப்பை செய்வது அவசியம். நீங்கள் ஒரு முறை கடலூர் சென்று பாருங்கள். உங்களுக்கு அவர்களின் நிலை புரியும்.

ஓரளவிற்கு பணம் சேர்ந்த பின்னர் கடலூர் சென்று அங்கு விவசாயிகளுக்கு இந்த பணம் பிரித்துக் கொடுக்கப்படும். இந்த நிகழ்வில் நேரில் நீங்களும் கலந்துக் கொள்ளலாம். பணம் கொடுத்தவர்களின் பட்டியல் தமிழ் ஸ்டுடியோ இணையதளத்தில் வழங்கப்படும்.

பணத்தை நேரில் கொடுக்க விரும்புபவர்கள் தமிழ் ஸ்டுடியோ அலுவலகத்தில் காலை பத்து மணி முதல் மாலை ஆறு மணி வரை கொடுக்கலாம்

இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம் (தியேட்டர் லேப்), டிஸ்கவரி புக் பேலஸ் மாடியில், புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில், கே.கே. நகர்.

வங்கியின் மூலம் பணம் செலுத்த:

வங்கியின் பெயர்: ICICI வங்கி

வங்கி கணக்கு எண்: 000101564346

கணக்கு வைத்திருப்பவர் பெயர்: அருண். மோ (Arun M.)

கிளை: செனோடப் சாலை, சென்னை (Cenotaph Road, Chennai)
யாராவது கொடுப்பார்கள் என்று நினைக்காமல் நீங்கள் உங்கள் பங்கை மறக்காமல் கொடுத்து உதவுங்கள். ஒவ்வொருவரின் பங்களிப்பும் நிச்சயம் தேவை.

பணம் செலுத்திய பின் உங்கள் பெயர், முகவரி, அலைபேசி ஏன் ஆகியவற்றை கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

thamizhstudio@gmail.com

http://thamizhstudio.com/kalam_kadaloor_thane.php

பொங்கலைக் கொண்டாடுவோம்.. (குறும்பட வட்டம்)

பொங்கலைக் கொண்டாடுவோம்.. (குறும்பட வட்டம்)

நாள்: 14-01-2012

இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம் (தியேட்டர் லேப்), டிஸ்கவரி புக் பேலஸ் மாடியில், புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில், கே.கே. நகர்.

நேரம்: மாலை 5.30 மணிக்கு.

நிகழ்வு: பொங்கல் தொடர்பான குறும்பட / ஆவணப்படங்கள் திரையிடல், பிரபலங்களுடன் பொங்கல் பற்றிய கலந்துரையாடல், பூவுலகு நண்பர்களுடன் சேர்ந்து ரசாயனக் கலப்படமில்லாத பொங்கல் செய்தல்..

Saturday, January 7, 2012

சாரல் விருது 2012 - வண்ணதாசன், வண்ணநிலவன்

சாரல் விருது 2012



ராபர்ட்-ஆரோக்கியம் நினைவாக இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி அளித்துவரும் 2012 ஆம் வருடத்திற்கான சாரல் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வண்ணதாசன், வண்ணநிலவன் இருவருக்கும் விருது அளிக்கப்படுகிறது விழா 2012 ஜனவரி மாதம் 7 ஆம் தேதி சென்னை தேவநேயப்பாவாணர் அரங்கில் நடைபெறுகிறது. சிற்பி வித்யாசங்கர் வடிவமைத்த சிற்பமும் ரூ 50000 மும் அடங்கியது விருது.







சாரல் விருது 2012

மணி: 01-- நிமிடம்: 58 -- நொடி: 01

உரையைக் கேட்க பச்சைப் பொத்தானை சொடுக்கவும். (Click the Green Button)

http://koodu.thamizhstudio.com/saral_award_4.php

Wednesday, January 4, 2012

தமிழ் ஸ்டுடியோவின் இரண்டு நிகழ்ச்சிகள். (வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமை)

கவிஞர் குட்டி ரேவதியின்
ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள்
நூல் வெளியீட்டு விழா

நாள்: 06-01-2012, வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 5:30 மணிக்கு.
இடம்: ஜீவன ஜோதி அரங்கம், கன்னிமாரா நூலகம் எதிரில், எழும்பூர்.

சிறப்பு அழைப்பாளர்கள்:

அழகிய பெரியவன்
பாலை நிலவன்
யாழன் ஆதி
தமயந்தி
அஜயன் பாலா
நர்மதா
தி. பரமேஸ்வரி
ப்ரவீண்
&
குட்டி ரேவதி

-----------------------------------------------------------------------

யாவும் உள - உலக இலக்கிய அறிமுக நிகழ்வு

பங்கேற்பு: கவிஞர் சுகிர்தராணி

அறிமுகம் செய்யும் நூல்: "எங்கே அந்த பாடல்கள்" (ஆப்ரிக்க பெண் கவிஞர்களின் கவிதைகள்)

நாள்: ஜனவரி 8, ஞாயிற்றுக் கிழமை

நேரம்: மாலை 4:30 மணிக்கு.

இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம் (தியேட்டர் லேப்), டிஸ்கவரி புக் பேலஸ் மாடியில், புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில், கே.கே. நகர்.

Monday, January 2, 2012

கவிஞர் குட்டி ரேவதி

more: http://koodu.thamizhstudio.com/katturaigal_30.php

கவிஞர் குட்டி ரேவதி

இதுவரை இணையம், மற்றும் பத்திரிகைகளில் வெளிவந்த கவிஞர் குட்டி ரேவதியின் நேர்காணல் மற்றும் கட்டுரைகளில் சில.


கன்னிமாரா தேசிய பொது நூலகத்தில் கிடைக்கும் கவிஞர் குட்டி ரேவதியின் நூல்கள்:

1. உடலின் கதவு
Other Title: utalin kathavu by kutti revathi .Author: குட்டி ரேவதி .
Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 894.8111 KUTAccession Number: 649170Actions: Reserve

2. தனிமையின் ஆயிரம் இறக்கைகள்
Other Title: thanimaiyin aayiram irakkaikal by kutti revathi .Author: குட்டி ரேவதி .
Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 894.8111 KUTAccession Number: 575382Actions: Reserve

3. காலத்தைச் செரிக்கும் வித்தை
Other Title: kaalaththais serikkum viththai by kutti revathi .Author: குட்டி ரேவதி .
Copies available for loan: Connemara Public Library (1)Accession Number: 702326Actions: Reserve



SRM பலக்கலைக்கழக தமிழ் பேராயத்தில் குட்டி ரேவதி:

http://www.srmuniv.ac.in/tamil_perayam/tamil_courses/Lessons
/MA_Tamil/I_Year/matt01/html/mat01007pp2b.htm

--------------------------------------------------------------------------------------

முழுக்க முழுக்க எனக்காகத்தான் - குட்டி ரேவதி


குட்டி ரேவதி இரண்டே கவிதைத் தொகுப்புகளின் மூலம் பரவலாக அறியப்பட்ட கவிஞர். இவரின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு "முலைகள்" பெண்ணுடல் உறுப்பை படிமமாக கொண்டு கவிதைகள் எழுவது தவறு என்ற மாயை உடைத்தது. பல்வேறு தளங்களில் விவாதங்களை கொழுந்து விட்டு எரியச் செய்தது. சித்த மருத்துவராக இருந்து கொண்டு ஆய்வுகளை செய்து கொண்டிருக்கும் அவரிடம் சில கேள்விகளும், அதற்கான பதில்களும்...

கவிதைன்ன என்ன?

கவிதைங்கிற அதற்கான அவகாசத்தை எடுத்துக் கொண்டு நம்மிடம் தங்கி சீர்மையான முறையில் வெளிக் கொணரப்படுவது. சில சமயம் 3 வார்த்தைகள் சேர்ந்து ஒரு கவிதையும் ஒரு சொல்லே கவிதையாகவும் சில சமயம் எத்தனை சொற்களை போட்டாலும் கவிதையாகமல் இருப்பதும் உண்டு. ஒவ்வொருத்தருக்கும் வாழ்க்கையில் சீர்மைங்கிறது ரொம்ப முக்கியம். அது குலைந்து போறப்ப நமக்குள் ரொம்ப கலைந்து போறாங்க கலைந்து போனதை சரி செய்வதற்காகதான் சொற்களை அடுக்கி அடுக்கி கட்டி சரி செய்யிறாங்க. நாடகம் போன்ற மற்ற வடிவங்களில் முயற்சி செய்து பார்த்து அதில் எதிலும் திருப்தியாகாமல் கடைசியில் மனம் கவிதையில்தான் நிலைப்படுத்தி நின்றது.

அந்த சீர்மைங்கிறது என்ன?

அது அவரவர் மனம் சார்ந்து எதுவா வேண்டுமானாலும் இருக்கலாம் பணம் சேர்க்குறதாகவோ வேடிக்கை பார்ப்பதாகவோ ஒருவரின் மீதானா அதீத நேசிப்பாகவோ, இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதனதன் இடத்துல அதை அதை வைக்கிற அதோட இதை பொருத்தி பார்க்குறது இது உலகத்துல எல்லா உயிர்களுக்கும் வாய்த்திருக்கு. விலங்குகள், தாவரங்கள் போன்றவற்றிற்கும் கூட இதைப்போன்ற தகுதியும், தேவையும் எல்லா உயிர்களிடமும் இருக்குது.

உங்கள் கவிதைக்கான மொழியை எப்படி அடைந்ததாக உணர்கிறீர்கள்?

மனப்பயிற்சியின் மூலமாகத்தான். எனது தாய்மொழி மராத்தி தெலுங்கு இப்படி எதுவாக இருந்தாலும் இப்போது இருப்பது போன்ற நேர்த்தியான கவிமொழியை அடந்திருப்பேன் என்றுதான் நினைக்கிறேன். சொற்களை பலம் வாய்ந்ததாகவோ, ஆறுதல் தருவதாகவோ கட்டி சீர்மயான முறையில்தான் எனது கவிதைகளை அமைப்பதாக நினைக்கிறேன். நான் சித்த மருத்துவத்தை தேர்ந்தெடுத்ததே அது மொழி சம்பந்தமாக இருப்பதால்தான். சித்த மருத்துவ சொல் அகராதியை எடுத்து பார்த்தீங்கன்னா அதுல இருக்கிற ஒவ்வொரு சொல்லும் மிகவும் பொருள் பொதிந்து இருக்கும், அகழ்வாராய்ச்சி செய்தது போல் இருக்கும். பாடல்கள் பொருளுடன் சந்ததுத்டன் இருக்கும். இதைப்போன்ற மனப்பயிற்சி இருந்தால் கவிமொழி எல்லோர்க்கும் வாய்க்கும். மற்றபடி வேற தளத்துல இயங்குற மற்றவர்களுக்குfம் அந்த சூழலுக்கு ஏற்ப மொழி உண்டாகும்.

உங்களின் கவிதைகள் சமன்பாடுகளாய் இருக்கின்றன. இது எப்படி சாத்தியமானதா?

என்னுடய ஒரு கவிதை கூட எனக்கு ஞாபகத்தில் இருப்பதில்லை. ஆனால் என்னுடய கவிதையை என்னிடம் கொடுத்தால் அது எப்படி உருவான என்று சொல்ல முடியும். எனக்கு இந்த சமன்பாடு போன்ற தொழில் நுட்பங்களில் திறமை கிடையாது. என்னுடய கவிதைகள் எப்போதும் ஒரே மாதிரி இல்லாமல் மாறிக் கொண்டே இருக்கிறது. புதிய முறைகளை முயற்சி

more: http://koodu.thamizhstudio.com/katturaigal_30.php

ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் - 16

more: http://koodu.thamizhstudio.com/thodargal_14_17.php

ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் - 16

பானுபாரதி - ஆண்மை கொல்
குட்டி ரேவதி



இன்றும் எனக்குக் கடிதம் வருகின்றது, ஏன் படைப்பாளியைத் தெருவிறங்கிப் போராடச் சொல்கிறீர்கள் என்று. ஏன் எம் கைகளில் போராட்டத்தை, அதற்கான ஆயுதங்களை, கிளர்ச்சியை ஒப்படைக்கிறீர்கள் என்று. அது தேவைப்படாதவர்கள் என்னைப் பொறுத்தவரை ஒரு வகையில் அதிகாரத்தின் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது அதிகாரத்தின் சமரசங்களுக்கு ஆளாகிறார்கள் என்று தான் அர்த்தம். ‘போராட்டம்’ என்பது கலகம் மட்டுமே அன்று! மூர்க்கமான இயக்கமும் கூட!

‘ஆண்மை’ என்பது, பல வித தத்துவவியலாளர்களால் வியக்கும்படியான, ஒரு கருத்தாக்கமாகவும், மானுடத் திண்மமாகவும் பார்க்கப்பட்டது. பின், சமத்துவ உரிமைகள் நோக்கிப் போராடிய பெண்கள், ‘அதே விதமான ஆண்மையை’யே தமக்கு வரித்துக் கொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆணைப்போல உடையணிதல், ஆணைப் போன்ற பாவனைகளை உடலுகுக் கொடுத்தல், ஆணின் சிந்தனைகளையே தன் மூளைக்குப் பணித்தல் எனத் தொடர்ந்தனர். ஆனால், ஒரு கட்டத்தில், போராட்டத்தின் முன்னேற்றத்தில் பக்குவத்தில், அது பெண் சமூகத்திற்கு ஒரு மாதிரியாக மாறாமல், சமூகத்திலிருந்தும், சமத்துவத்திலிருந்தும் விலகி இருந்ததை உணர்ந்தனர். ஆக, ‘ஆண்மை’யின் விறைத்த நிலைகளும் தளர்ந்த நிலைகளும், ‘ஆண்மை’யின் எதிர்க்குணங்களாக விவாதிக்கப்பட்டன!

பானுபாரதியின் கவிதைகள் பெரும்பாலும் அரசியல் கவிதைகள் தாம்! அவற்றின் பிரகடனம் குறித்த கருத்துகள் பற்றிய விவாதத்திற்கு நாம் எடுத்துக் கொண்ட தலைப்பின் பொருள் உதவாது என்பதால், அக்கவிதைகளை விடுத்து அவர் எழுதிய, ‘பெண்ணியக் கவிதைகளை’ இங்கு விவாதத்திற்கு எடுத்துக்கொள்வோம்!

பானுபாரதியின், ‘ஆண்மை கொல்’ என்ற கவிதை:
எருமையின் முதுகுத் தோலில் துளையிட்டு
உட்புகுந்த மழைத்துளிபோல்
எனது வார்த்தைகள்
உனது ஆண்மைக்குள்
புகுந்து குடைகிறதென்பதை
நீ தூக்கம் தொலைத்து
இரவுகளை
புகை வளையங்களால்
நிரப்பிக் கொள்வதிலிருந்து
புரிந்து கொள்ள முடிகின்றது

எறிகணையின் வலிமையோடு
எறியப்படும்
உனதொவ்வொரு வார்த்தைகளும்
தோற்றுப் போய் விழுகின்றன
நேர்மை வயபப்டாததினால்

வானம் நீலமென்கிறாய்
கடல் உப்பென்கிறாய்
முத்தம் இனிப்பென்கிறாய்
வியர்வை சூடென்கிறாய்
விந்து குளிரென்கிறாய்
ஆண்மை
அதுவே அதற்கே அனைத்துமென்கிறாய்

நல்லது
போதனைக்கு நன்றி
ஆண்மை அரியாசனத்திலிருந்து
இறங்கி வர
நீ மறுக்கும் ஒவ்வொரு கணங்களும்
கலவியின் உச்சநிலையில்
சோர்ந்து சூம்பிக் கிடக்கும்
ஆண்குறியின் நிலைக்கொப்பானதாயிருக்கிறது

வோட்கா நிரப்பப்பட்ட
உனது கண்ணாடிக் குவளையில்
எலுமிச்சை சீவல்களாய்
எனது கனவுகளோடு வாழ்வும்
கரைந்து போனதேன் என்ற
எனதொரு கேள்விக்கு
உன்னிடமும் விடையில்லை
உன்னைப்படைத்த
உன்னப்பனின் ஆண்மையிடமும்
விடையிருக்கப்போவதில்லை

அம்மிக்கல்லில் அடித்து நொறுக்கப்படும்
சிதறு தேங்காய்போல்
உனதாண்மை நொறுக்கப்படும்போது
வோட்காவிலும் பியரிலும்
கரைந்து போன கணங்களிலிருந்து
எனக்கான பதில் கண்டடையக் கூடும்

அல்லது
இரத்தமும் வியர்வையும் தெறித்துச் சிதற
ஆண்மையை
அறுத்தெறியும் திராணியுண்டாயின்
வா பேசுவோம்
சுதந்திரமான வார்த்தைகளின் அக்களிப்போடு.

இக்கவிதையில், நவீனப் பெண்ணின் மனநிலை ஆணாதிக்கத்தை நோக்கி அதை எதிர்த்துக் குரல் எழுப்பி விட்டு, மாற்றத்தின் பதிலுக்காகக் காத்திருக்கிறது. மறைமுகமாக ’ஆணின் குறியையே’ ஆண்மையின் இடமாக்கியிருக்கும் கவிதை. ’ஆண்மை / அதுவே அதற்கே அனைத்துமென்கிறாய்’ என்ற வரி தான் இக்கவிதையின் மையப்பொருள். நவீன வாழ்வில் மது அருந்துமொரு வேளையில், அதன் அத்தனை அம்சங்களோடும், கவிதை பதிவாகியிருக்கிறது. ஆனால், வார்த்தைகள் தாம் கவிதையின் எதிர்ப்புக்குரலுக்குள் சுழன்று வருகின்றன.

வார்த்தைகளாக்கப்பட்ட பெண்ணியம் தான் சென்ற நூற்றாண்டின் இறுதியில் நாம் கண்ட வெற்றியாக இருக்கும் என்று இருக்கிறேன். உலகெங்கும் ஆண்கள் அனுபவித்து அந்த மிகையான அதிகாரங்களை எதிர்க்கும் வகையில், அல்லது தமக்கேயான அடிப்படை உரிமைகளையேனும் கோரும் வகையில் தொடர்ந்து வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு உரிமைகளுக்காகப் போராடி வெற்றி கண்டிருக்கின்றனர். ‘எழுத்து’ என்பதன் வழியாகப் பதிவான ஆய்வுக்கட்டுரைகளுக்கும் புனைவுகளுக்கும் அப்பாற்பட்டு, ‘பெண்ணியக் குரல்’ ஓங்கி ஓர் ஆவணமாகவோ, சாட்சியாகவோ இல்லாமல், அக்குரலாகவே பதிவானது கவிதைகளில் தாம் நிகழ்ந்தது.

’ஆண்மை கொல்’ என்பதன் உள்ளார்த்தம், நிறுவனமயமாகிப் போன ஆண்மையை அடையாளப்படுத்துகிறது. குடும்பம், சமூகம், மதம், சாதி போன்று கட்டமைப்புகளுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து நிறுவனமயமாகி, இறுகிப் போன ஆண்மையைக் காலங்காலமாகக் குறிப்பதாகவும் இருக்கிறது. ‘ஆண்மை அரியாசனத்திலிருந்து / இறங்கி வர / நீ மறுக்கும் ஒவ்வொரு கணங்களும் / கலவியின் உச்சநிலையில் / சோர்ந்து சூம்பிக் கிடக்கும் / ஆண்குறியின் நிலைக்கொப்பானதாயிருக்கிறது’ என்ற இந்தக் குறியீடு ஆண்மையின் சரணடைதலை, தளர்ச்சியைக் குறிப்பதாக இருக்கிறது. இது பெரும்பாலும், ‘பெண்ணியத்தின்’ மைய விவாதமாகவும், ஆணின் பாலியல் ஆற்றலைக் கேள்விக்குள்ளாக்குவதாகவும் இருந்திருக்கிறது. ஏனெனில், இந்தப் பிம்பத்தை அடையாளமாக்கித் தான் பெண்ணின் உடல்கள் யோனிகளாய்ப் பார்க்கப்பட்டு கிழிக்கப்பட்டிருக்கின்றன.

அஞ்சறைப்பெட்டியில் அடங்கிய நீரும் நிலமும்

அவிழ்த்துவிட்ட கூந்தலோடு
ஆவேசத்தை
முகம் முழுவதும் அப்பிக்கொண்டு
குன்றினுச்சியினின்று
குய்யோ முறையோவென
குளறியடித்து
படையெடுத்தது அருவி
பூமியை விழுங்கி விடுவது போல்

நமட்டுச் சிரிப்போடு
பேசாமல்
மல்லாந்து
படுத்துக் கிடந்தது
வானத்தைப் பார்த்தபடி நிலம்

போருமின்றி
பேச்சுவார்த்தையுமற்று
வரப்புகளுக்குள் மட்டும்
மட்டுப்படுத்தப்பட்டது
அருவியின் ஆவேசம்

கோரைப் புற்களின்
கலந்துரையாடல்களில் கூட
நிலத்தின் பொறுமைதான்
வெற்றிக்கு வித்திட்டதாக
ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன

நியூட்டன் விதியிலிருந்து
தப்பியோடி வந்த ஆப்பிளொன்று
பூமிக்கு
பெண்குறியைப் பொருத்தி
பெருமை பேசியது

இடுப்பு வளைந்து
அன்னநடை போடும்
அருவியின் பெருமை கண்டு
முலைகள் பொருத்திப் பேசியது
பிள்ளையான் தின்று போட்ட
ஞானப்பழத்தின் கொட்டை

மூன்றாந் தரப்பிலிருந்து
கருவாடு தின்று சுவையறிந்த
ஆதிபராசக்தியின் தூமைத்துணி
புதுக்கதை பேசியது
ஆறுகள் சங்கமிக்கும்
கடற்தாய் என்றது அது.
நீலநிறத்தில்
சேலையும் கட்டி விட்டது.

வாளெடுத்த பெண்தெய்வங்களெல்லாம்
நிலத்தடியிலும், அருவியிலும்,
கடலிலும் சங்கமமாகி
சாதிக்கொரு
பிள்ளை பெற்றுக் கொண்டன

அதற்காக
அஞ்சறைப் பெட்டியிலிட்டு
ஆளுக்கொரு கற்பும்
பரிசாக தரப்பட்டன.

ஒரே கவிதையில், நிலத்தையும் நீரையும் ஆண் – பெண் அடையாளமாக்கி மதம் இன்ன பிற ஒட்டு பிம்பங்களையெல்லாம் கேள்விக்குள்ளாக்குகிறார், கவிஞர். எப்படிப் பேரருவியாக இருந்த. ‘பெண்’ அஞ்சறைப்பெட்டியில் அடைக்கப்பட்டாள் என்பதை, கவிதையின் வேகம் குன்றாமல் சொல்லியிருக்கிறார். ‘பெருவெள்ளமாக இருந்தவளை’ அடைக்க இயன்ற போது, அதன் பரிசாக, ‘கற்பு’ பரிசளிக்கப்பட்டது.
‘பெண்ணியத்தின் கோட்பாட்டு விஷயங்களைத் தொடர்ந்து அணுகும் பெண்ணியவாதிகளும், படைப்பாளிகளும் அதன் முரண்களையும், நாட்பட்ட அதன் விளைவுகளையும் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர். அதுவே, பெண்ணியத்திற்கான தத்துவப்பின்புலமாக இருந்திருக்கிறது. ஏனெனில், பிற எல்லா வகையிலும் பதிவாகும் ஆக்கங்கள் எல்லாம் ஆண் மையச்சிந்தனையுடன் தான், அவ்வித விழிப்புடனும், அவ்விழிப்பு இல்லாமாலும் பதிவாகிக்கொண்டே இருக்கின்றன. இந்நிலையில், ‘நான் காணா மனிதனை’ என்ற பானுபாரதியின் கவிதை, பல தலைமுறைப் பெண்கள் தேடிய, கடவுள் போன்ற மனிதனைக் குறித்துப் பேசுகிறது.

நான் காணா மனிதனை

எனக்கென்றொரு ...............

more: http://koodu.thamizhstudio.com/thodargal_14_17.php