Monday, February 6, 2012

கதைசொல்லி - அ.முத்துலிங்கம்

கதைசொல்லி பகுதி முத்துலிங்கம் அவர்களிடம் பேசிய சில நாட்களில் தானே இருபது கதைகளை பதிவு செய்து அனுப்பி இருந்தார். எப்போது நேரில் சென்று எழுத்தாளர்களை சந்தித்து அவர்களை கதை சொல்ல வைத்து பதிவு செய்து வருவதே வழக்கம். ஆனால் முத்துலிங்கம் அவர்கள் கனடாவில் வசிப்பதால் நேரில் சந்திப்பதற்கான வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அவரது குரலில் கதைகளை கேட்பது புதியதொரு அனுபவத்தை வாசகர்களுக்கு தருமென்று நினைக்கிறேன். கதைசொல்லியை இப்படியும் இசையோடு சேர்த்து கொடுக்கலாம் என்று எனக்கு சொல்லாமல் சொல்லிக்கொடுத்திருக்க்றார் முத்துலிங்கம். அவர்களுக்கு எனது விசேச நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

கதைகளில் ஆங்காங்கே மிக சிறப்பாக தன்னுடைய குரலில் ஏற்ற இறக்கங்களை பயன்படுத்தி, தேவையான இடங்களில் இன்னொருவரையும் கதையில் இணைத்து கதை சொல்ல வைத்த பாங்கு சிறப்பு. இப்படியான அர்ப்பணிப்பு உணர்வே முத்துலிங்கம் அவர்களின் வளர்ச்சிக்கும், அவரது சிறந்த எழுத்துக்கும் காரணம் என்று நினைக்கிறேன். இன்னமும் கூட அவரது கதைகளில் இருந்தா என்னால் விடுபட முடியவில்லை. இந்த அறிய சந்தர்ப்பத்தை வாசகர்களாகிய உங்களுக்கு அளிப்பதில் தமிழ் ஸ்டுடியோ பெருமை கொள்கிறது.

இருபது கதைகளில் மற்ற பத்துக் கதைகளும் விரைவில் பதிவேற்றப்படும்.

கதைகளை கேட்க: http://koodu.thamizhstudio.com/kadhaisolli_27.php

No comments:

Post a Comment