Tuesday, September 14, 2010

கொஞ்சம் தேநீர்...நிறைய அரட்டை...

கொஞ்சம் தேநீர்...நிறைய அரட்டை...
...எழுத்தாளுமையுடன் ஓர் உரையாடல்

கூடு இணையதளத்தின் மாதந்திர நிகழ்ச்சியாக ஆகஸ்ட் மாதம் முதல் ஒவ்வொரு மாதம் நான்காம் சனிக்கிழமையும் கொஞ்சம் தேநீர்...கொஞ்சம் அரட்டை என்கிற நிகழ்ச்சி நடைபெறும்.

இது புகழ்பெற்ற எழுத்தாளர்களுடன் ஒரு மாலை நேரத்தில் தேநீர் விருந்தோடு கலந்துரையாடும் நிகழ்வாகும்.

கையில் ஒரு கோப்பை தேநீரோடு, நாம் நேசிக்கும் எழுத்துக்கு சொந்தக்காரரான எழுத்தாளருடன் அவர் எழுத்து பற்றியும், அவரின் பிற ஆர்வங்கள் பற்றியும், அவரின் புகழ் பெற்ற புத்தகங்கள் பற்றியும், தற்கால இலக்கிய உலகின் போக்கு குறித்தும் கலந்துரையாடலாம். இந்நிகழ்வில் பங்கு பெற பத்து பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். முதலில் முன்பதிவு செய்யப்படும் பத்து நண்பர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

மிக முக்கியமான விதிமுறை.. இதில் பங்குபெற விரும்புவோர் அந்த மாதம் நாம் சந்திக்க இருக்கும் எழுத்தாளரின் புத்தகங்களை படித்திருக்க வேண்டும். அவரின் புத்தகங்கள் குறித்து நேர்மையான கருத்துகள் கொண்டிருக்க வேண்டும். பங்குபெற விரும்பும் நண்பர்களின் முன்பதிவுக்கேற்ப மூன்றாவது சனிக்கிழமை தமிழ் ஸ்டுடியோ அலுவலகத்தில் நேர்முகத் தேர்வு நடைபெறும். இதில் அந்த எழுத்தாளர் புத்தகங்களை படித்துள்ள நண்பர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

நிகழ்வு அருமையான கலாச்சார சூழல் நிறைந்த இடத்திலோ, எழுத்தாளரின் வீட்டிலோ, அல்லது ஒரு அருமையான தேநீர்க் கடையிலோ நடைபெறும்.

முதல் மாதம்.... இந்நிகழ்வில் பங்கேற்கும் எழுத்தாளர் கரிசல்காட்டு எழுத்தாளர் திரு. கி. இராஜநாராயணன் அவர்கள். நிகழ்வு புதுச்சேரியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

இதில் பங்கேற்க விரும்பும் நண்பர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 9840698236, 9894422268

முன்பதிவு செய்ய வேண்டிய இறுதி நாள்: செப்டம்பர் 20, 2010... நிகழ்வு நடைபெறும் நாள்: செப்டம்பர், 25, 2010 மாலை மூன்று மணியளவில்..
இடம் புதுச்சேரி..


1 comment:

butterfly Surya said...

அலுவலகத்தில் நேர்முகத் தேர்வு நடைபெறும். ////

பரீட்சை எதுவும் உண்டா..??

Post a Comment