Tuesday, April 13, 2010

ஸ்ரீ வில்லிப்புத்தூரில் கோடைக்கால குறும்படப் பயிற்சிப் பட்டறை

நாள்: 07-05-2010 முதல் 14-05-2010 வரை.
இடம்: ஸ்ரீ வில்லிப்புத்தூர்
கட்டணம்: தொலைபேசி வாயிலாக அறிந்துக் கொள்ளவும்.

நிழல் - தமிழ்நாடு குறும்பட / ஆவணப்பட படைப்பாளிகள் சங்கம் இனைந்து நடத்தும் 19 வது குறும்படப் பயிற்சிப் பட்டறை ஸ்ரீ வில்லிப்புத்தூரில் மே 7 முதல் 14 வரை தொடர்ந்து 8 நாட்கள் நடைபெற இருக்கின்றன.

கல்லூரிகளில் மட்டுமே கற்றுத்தரப்படும் திரைப்படக் கல்வியை, கிராமப்புற மாணவர்கள் - இளைஞர்கள் பெற வேண்டும் என்கிற குறிக்கோளோடு கேமரா, திரைக்கதை, படத்தொகுப்பு, நடிப்பு முதலியவை கற்றுத் தரப்படுகிறது. இறுதிநாள் மாணவர்களே குறும்படம் எடுக்க பயிற்சி தருகின்றனர். உணவு, உறைவிடம், பயிற்சி கருவிகளுக்கு கட்டணம் உண்டு.

பட்டறையில் 50 குறும்பட / ஆவணப்படங்களும், உலகப் புகழ் பெற்ற ஐந்து படங்களும் திரையிடப்படும். பயிற்சி பெற விரும்புவோர் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

தொடர்புக்கு: ப. திருநாவுக்கரசு 9444484868.

முகவரி:

12/28 இராணி அண்ணா நகர், சென்னை 600078


1 comment:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Post a Comment