Monday, April 26, 2010

மூன்றாவது பௌர்ணமி இரவு

மூன்றாவது பௌர்ணமி இரவு

ஆதவன்26-04-2010

புதன், 28-04-2010

இரவு 7.15 மணிக்கு தொடங்கி, நிகழ்வு முடிய இரவு 12.30 மணி ஆகும். ஆர்வலர்களுக்கு உணவு மற்றும் உறங்குமிடம் முதலியவை ஏற்பாடு செய்யப்படும். ஆனால் அதற்காக ஆர்வலர்கள் முப்பது ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

இடம்: எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024 (லிபர்ட்டி திரையரங்கம் எதிரில்)

இந்த மாதத்திற்கான சிறப்பு பார்வையாளர்: ஆவணப்பட இயக்குனர் 'ரவி சுப்பிரமணியம்'. இவர் எழுத்தாளர் ஜெயகாந்தன் மற்றும் ம.அரங்கநாதன் ஆகியோர் பற்றிய ஆவணப்படங்களை இயக்குனர்.

திரையிடப்படும் படங்கள்:

தமிழில் எடுக்கப்பட்ட குறும்படம்: முதலாவதாக 'அழகு' என்கிற குறும்படம் திரையிடப்பட்டு அது பற்றிய கலந்துரையாடல் நடைபெறும். இக்குறும்படம் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் தயாரிப்பில் இயக்குனர் பாண்டியராஜனால் எடுக்கப்பட்டது.

உலக அளவில் புகழ் பெற்ற திரைப்படம்: Leila (1996)

இயக்கம்: Dariush Mehrjui

இந்தத் திரைப்படம் குறித்து மேலும் அறிந்துக் கொள்ள:
http://www.imdb.com/title/tt0116851/

(குறிப்பு: பௌர்ணமி இரவு நிகழ்வில் யார் வேண்டுமானாலும் கலந்துக் கொள்ளலாம். ஆனால் உணவு மற்றும் உறங்குமிடம் ஏற்பாடு செய்யவேண்டியிருப்பதால் முன் பதிவு செய்துக் கொள்ளவும். முன் பதிவு செய்யாதவர்களுக்கு உறுதியாக அனுமதி கிடையாது.)

முன்பதிவு செய்துக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 9840698236, 9894422268

No comments:

Post a Comment