Tuesday, July 21, 2009

ஆகஸ்ட் மாத மடல் போட்டி. (கடைசித் தேதி: ஆகஸ்ட் 2, 2009. )



ஆகஸ்ட் மாத மடல் போட்டி. (கடைசித் தேதி: ஆகஸ்ட் 2, 2009. )

தமிழ் ஸ்டுடியோ.காம் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் மடல் போட்டி நடத்த இருக்கிறது. இதில் சிறந்த மடலாக தேர்தெடுக்கப்படும் ஒரு மடலுக்கு 500 ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படும். மேலும் முதல் மூன்று சிறந்த மடல்கள் எழுதியவர்கள், தமிழின் புகழ் பெற்ற ஒரு எழுத்தாளருடன் மாலை நேர தேனீர் சந்திப்பிலும் கலந்துக் கொண்டு அவருடன் கலந்துரையாடலாம்.

முதல் மாத மடல் போட்டி இனிதே நடந்து முடிந்தது. அடுத்து ஆகஸ்ட் மாத மடல் போட்டி நடைபெற உள்ளது. எனவே இதிலும் ஆர்வலர்கள் திரளாக பங்கேற்று சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், முதல் மாதம் ஒரு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு சிலக் கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன.

அவை:

* மடல் எழுதுவதற்கு தலைப்பை நீங்களே தெரிவு செய்துக் கொள்ளலாம்.
* பக்க கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. எவ்வளவு பக்கங்கள் வேண்டுமானாலும் எழுதி அனுப்பலாம்.
* மடல்கள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி: ஆகஸ்ட் 2, 2009.

மற்ற அணைத்து நிபந்தனைகளும் எல்லா மாதங்களுக்கும் பொருந்தும். மடல் அனுப்பும் முன்னர் அறிவிப்பு பகுதியில் உள்ள எல்லா நிபந்தனைகளையும் படித்து பார்க்கவும்.

மடலை நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் எழுதலாம். தாய், தந்தை, சகோதரன், சகோதரி, சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தேசத் தலைவர்கள், என யாருக்கு வேண்டுமானாலும் நீங்கள் மடல் எழுதலாம். சமூதாயப் பிரச்சனை, உணர்வுகள் சார்ந்த பிரச்சனை என்று எந்தத் தலைப்பிலும் நீங்கள் மடல் எழுதலாம்.


மேலும்:http://thamizhstudio.com/ezhuthungal_madal.htm


No comments:

Post a Comment