நான்காவது குறும்பட வட்டம்: சனிக்கிழமை (31-01-2009)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: மாலை மூன்று மணி (3 மணியளவில்)
முதல் பகுதி:
இரண்டு குறும்படங்கள் திரையிடப்பட்டு அதுபற்றிய விரிவான விவாதம் நடைபெற உள்ளது. இறுதியில் அக்குறும்படங்களின் இயக்குனர்கள் தன்னிலை விளக்கம் அளிப்பார்கள்.
இரண்டாம் பகுதி:
தமிழில் மிகச்சிறந்த சமூதாய தாக்கத்துடன் வெளிவந்த ஒரு சிறுகதை அல்லது நாவலின் ஒரு பகுதி தெரிவு செய்யப்பட்டு, அதனை ஆர்வலர்கள் படிக்க, இலக்கியத் துறை சார்ந்த ஒருவர் அந்த நாவலில் உள்ள கதாபாத்திரங்களை எப்படி திரைக்குள் கொண்டு வருவது, மேலும் அந்த சிறுகதையை எப்படி படமாக்கலாம் என்று தன்னுடைய விரிவான ஆலோசனையும் வழங்க உள்ளார்.
மூன்றாம் பகுதி:
ஒரு குறும்பட இயக்குனர் அல்லது அந்தத் துறையின் அனுபவம் வாய்ந்த ஒருவர் தலைமைத் தாங்க குறும்பட வாசகர்கள் தங்களுக்குள் கருத்துகளை பரிமாற்றிக் கொள்ளும் நிகழ்வு நடைபெறும். இதில் குறும்படங்களை எப்படி விற்பனை செய்வது, குறும்படங்களை எப்படி குறைந்த செலவில் படமாக்குவது போன்ற கருத்துகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தொடர்ந்து தமிழ் ஸ்டுடியோவின் குறும்பட வட்டம் நடைபெறும் அரங்க வாடகை உள்ளிட்ட செலவுகளுக்காக இந்த மாதம் முதல் வாசகர்கள் தங்கள் சந்தாத் தொகையினை கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். சந்தாத்தொகை ரூபாய் 50 மட்டும்.
மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:
9840698236, 9894422268
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
good work keep it up...
Post a Comment