தமிழ் ஸ்டுடியோ.காமில் முதலில் வெளிவந்துக் கொண்டிருந்த வினா விடை பகுதி சற்றே பொலிவூட்டப்பட்டு "கேளுங்கள் கொடுக்கப்படும்" என்கிற பகுதியாக வெளிவருகிறது. உங்களுக்கு இலக்கியம் மற்றும் குறும்படம் சார்ந்து ஏற்படும் அனைத்து வகையான சந்தேகங்களுக்கும் அந்த அந்தத் துறை சார்ந்த வல்லுனர்கள் பதிலளிப்பார்கள். தமிழில் முதல் நாவல் எது? தமிழில் முதல் குறும்படம் எது? அதிகமாக மொழிப் பெயர்ப்பு செய்யப்பட்ட தமிழ் நூல் எது? போன்ற எந்தக் கேள்வியாக இருந்தாலும் நீங்கள் எங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம். |
thamizhstudio@gmail.com |
அல்லது கீழ்கண்ட தொலைபேசி எண்ணிலும் உங்கள் ஐயங்களை கேட்கலாம். ஆனால் அதற்கான விடை தமிழ் ஸ்டுடியோ. காம் தளத்தில்தான் வெளியிடப்படும். 9840698236, 9894422268 |
Tuesday, June 30, 2009
கேளுங்கள் கொடுக்கப்படும்.
Monday, June 22, 2009
மடல் எழுதுங்கள்... பரிசை வெல்லுங்கள்.
(மடல்கள் வந்து சேர வேண்டிய இறுதித் தேதி: ஜுலை 5, 2009.)
"உள்ளங்கைக்குள் உலகம்" என்று சுருங்கிப்போன இவ்வுலகில் மனித உறவுகளின் மாண்பு அழிந்துப் போவது இயல்பே. மனிதன் தன உணர்வுகளை இழந்து நடைப்பிணமாக, சதைப் பிண்டமாகத் திரியும் இந்த அவசர உலகில் யாருக்கும் சக உறவு மீதோ, சக மனிதன் மீதோ பற்றுகள் இருப்பதில்லை.
நமது உணர்வு வெளிப்பாட்டின் மற்றொரு பரிமாணமாக இருந்த மடல் (கடிதம்) எழுதும் (கடிதம் என்பது வடமொழி சொல். மடல் என்பதே நல்லத தமிழ் சொல். எனவே வாசகர்கள் இனி மடல் என்கிற சொல்லை பயன்படுத்துங்கள்.) முறையை நாம் இன்று தொலைத்துவிட்டோம். அல்லது தொலைத்துக் கொண்டிருக்கிறோம். இன்றும் அஞ்சலகங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு போட்டியாக தனியார் நிறுவங்களும் அஞ்சல் சேவையில் (சேவை???) ஈடுபட்டுள்ளன. ஆனால் இன்று வரும் கடிதங்கள் எதை தாங்கி வருகின்றன என்பதே நம் மனதில் எழும் வினா. (கேள்வி என்பதும் பதில் என்பதும் கூட வடமொழி சொல். எனவே வினா, விடை என்றே பயன்படுத்துங்கள். முடிந்தால்) ஒரு காலத்தில் மனித உறவுகளின் மாண்புகளை சுமந்து வந்த மடல்கள் இன்று அலுவலகப் பணி, வங்கிப்பணி, தொலைப்பேசிக் கட்டணம், விவாகரத்து பிரச்சனைகள், கடன் அட்டை விபரங்கள் போன்ற பிரச்சனைகளையும், அறிவிப்புகளையும் மட்டுமே தாங்கி வருகின்றன.
ஒருகாலத்தில் கிராமத்தில் இருந்து பட்டணத்திற்கு வந்து படிக்கும் தன் மகனுக்கு யாரோ ஒருவர் மூலம் அவள் தாய், தன்னுடைய ஏக்கங்களையும், பாசத்தையும், மகனைப் பற்றியக் கவலைகளையும் வார்த்தைகளாக மாற்றி மடலாக எழுதி அனுப்புவாள். இன்று அந்த வாய்ப்பு எத்துனை தாய்மார்களுக்கு கிடைக்கிறது. அல்லது யார் அதை விரும்புகிறார்கள்.
தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. அதைப் பயன்படுத்த வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் அந்தத் தொழில்நுட்பங்களால் வெறும் உணர்வுகளை பரிமாற்றம் செய்ய இயலாது. அவை வார்த்தைகளை ஒலியாக மாற்றி அனுப்பும் பணியை மட்டுமே மேற்கொள்கின்றன. மடல்களில் உள்ள ஒவ்வொரு வார்த்தைகளிலும் ஏதோ ஒருவித மவுனம் இருக்கும். ஆனால் இன்றைய அலைப்பேசிகளில் வெறும் இரைச்சல் மட்டுமே இருக்கும். வார்த்தைகளின் அழகே சில இடங்களில் அது மவுனமாக இருப்பதுதான்.
மடல் எழுதுவது என்பதே ஒரு சுகம். முதல் முறையாக மடல் எழுதும்போது உறவுகளை எப்படி விளிக்க வேண்டும், பெரியோர்களையும், மற்றவர்களையும் எவ்வாறு அழைக்க வேண்டும் என்கிறத் தடுமாற்றம் இருக்கும். "மதிப்பிற்குரிய அம்மா" என்று எழுதிவிட்டு பின்னர், அதை அடித்துவிட்டு, அன்பிற்குரிய அம்மாவிற்கு" என்று எழுதிய நினைவுகள் இன்னும் மனதை விட்டு அகல மறுக்கிறது.
மடல் எழுதும்போது அடித்தல், திருத்தல் இல்லாமல் இருக்காது. இந்த அடித்தாலும், திருத்தலும்தான், அந்த மடலுக்கே அழகு. நம்மை சார்ந்தவர்கள் மீதும், மனித உறவுகள் மீதும் நாம் வைத்திருக்கும் அன்பின், ஏக்கத்தின் வெளிப்பாடே இந்த அடித்தாலும் திருத்தலும்தான்.
வாட்டி வதைக்கும் தனிமையை போக்கும் அருமருந்து இந்த மடல்கள். எங்கோ ஒரு மூலையில் பணிபுரியும் தன் மகன் ஒரு நாள் எழுதும் மடலுக்காக அந்த மாதம் முழுதும் தனிமையை ஏற்றுக் கிடக்கும் அந்தத் தாய்க்கு அவன் எழுதும் ஒரு மடல்தான் மிகச் சிறந்த நிவாரணி.
மடல்களின் சிறப்பை தமிழின் சங்கக் கால இலக்கியங்களும் மிக சிறப்பாக வலியுறுத்தி இருக்கின்றன. "நாரை விடுத் தூது", "பனை விடுத் தூது", "புறா விடுத் தூது" என மடல் இலக்கியங்கள் தமிழில் அதிகம்.
இதோ இறுதியாக அழிந்துக் கொண்டிருக்கும் மடல் எழுதும் முறையை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியாக தமிழ் ஸ்டுடியோ.காம் மேற்கொள்ளும் முதல் முயற்சி. "மடல் எழுதுங்கள்...பரிசை வெல்லுங்கள்".
தமிழ் ஸ்டுடியோ.காம் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் மடல் போட்டி நடத்த இருக்கிறது. இதில் சிறந்த மடலாக தேர்தெடுக்கப்படும் ஒரு மடலுக்கு 500 ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படும். மேலும் முதல் மூன்று சிறந்த மடல்கள் எழுதியவர்கள், தமிழின் புகழ் பெற்ற ஒரு எழுத்தாளருடன் மாலை நேர தேனீர் சந்திப்பிலும் கலந்துக் கொண்டு அவருடன் கலந்துரையாடலாம்.
பரிசுகள்:
* முதல் சிறந்த மடலுக்கு 500 ருபாய் பரிசு.
* முதல் மூன்று சிறந்த மடல்களை எழுதியவர்களுக்கு தமிழின் புகழ் பெற்ற ஒரு எழுத்தாளருடன் மாலை நேர தேநீர் சந்திப்பில் கலந்துரையாடும் வாய்ப்பு.
நிபந்தனைகள்:
1. மடல்கள் கொடுக்கப்பட்ட தலைப்பின் கீழ் எழுதப்பட்டிருக்க வேண்டும். இந்த மாதத் தலைப்பு:ஏமாத்திட்டீங்களே தாத்தா!
2. தாளில் எழுதி அனுப்புவோர் எட்டுப் பக்கங்களுக்கு (A4 தாளில்) மிகாமலும் எழுதி அனுப்ப வேண்டும். மடல்கள் தாளில் மட்டுமே எழுதி அனுப்ப வேண்டும். (மின்னஞ்சல் போன்ற கணினி சார்ந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தக் கூடாது. உங்கள் கையெழுத்தால் மட்டுமே எழுத்தின் அனுப்ப வேண்டும்).
3. ஒருவரே எத்தனை மடல்கள் வேண்டுமானாலும் எழுத்தின் அனுப்பலாம்.
4. ஒவ்வொரு மாதம் ஐந்து சிறந்த மடல்கள் நடுவர் குழுவினால் தேர்ந்தெடுக்கப்படும். பின்னர் தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் குறும்பட வட்டம் நிகழ்வில் அந்த ஐந்து மடல்களையும் அதனை எழுதியவரே படித்துக் காட்ட வேண்டும். இதன் அடிப்படையில் முதல் சிறந்த மூன்று மடல்கள் தேர்ந்தெடுக்கப்படும். அதில் சிறந்த முதல் மடலுக்கு ஐந்நூறு ருபாய் பரிசுத் தொகை வழங்கப்படும். மற்ற இரண்டு மடல்கள் எழுதிய இருவர் மற்றும் முதல் பரிசு பெற்ற மடல் எழுதியவர் ஆகிய மூவரும் சிறப்பு தேநீர் சந்திப்பில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படும்.
5. ஒவ்வொரு மாதமும் தேர்ந்தெடுக்கப்படும் முதல் மூன்று மடல்களும் இறுதியில் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்படும். அதற்கான இசைவையும் மடல் எழுதுபவர்கள் இணைத்தே அனுப்ப வேண்டும்.
6. போட்டியில் கலந்துக் கொள்ளும் அணைவருக்கும் குறும்பட வட்டத்தில் கலந்துக் கொள்ளும்படி அழைப்பு அனுப்பப்படும். அங்குதான் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து மடல்களும் அறிவிக்கப்படும். பின்னர் படிக்க வைத்து மூன்று மடல்களும் தேர்ந்தெடுக்கப்படும். எனவே போட்டியில் கலந்துக் கொள்ளும் அணைவரும் குறும்பட வட்டத்தில் பங்கு பெற்றே ஆக வேண்டும். குறும்பட வட்டம் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை நடைபெறும்.
7. போட்டியில் பங்குபெற நுழைவுக் கட்டணம் ஏதும் கிடையாது.
8. நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
9. வெளியூர், வெளிநாடு ஆர்வலர்களும் இந்தப் போட்டியில் கலந்துக் கொள்ளலாம். ஆனால் உங்கள் சார்பில் யாராவது ஒருவர் உறுதியாக நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள வேண்டும்.
10. மடல்கள் வந்து சேர வேண்டிய இறுதித் தேதி: ஜுலை 5, 2009.
மடல்களை எழுதி அனுப்ப வேண்டிய முகவரி:
M. அருண்
349, கண்ணகி நகர், ஒக்கியம் துரைப்பாக்கம், சென்னை 600 096.
மேலும் உங்களுக்கு எழும் ஐயங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்: 9840698236, 9894422268 |
Saturday, June 6, 2009
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் ஒன்பதாவது குறும்பட வட்டம் மற்றும் சிறந்த வலைப்பதிவர் விருது வழங்கும் விழா.
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் ஒன்பதாவது குறும்பட வட்டம் மற்றும் சிறந்த வலைப்பதிவர் விருது வழங்கும் விழா.
நாள்: சனிக்கிழமை (13-06-09)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: காலை 10 முதல் இரவு 7 வரை
10 AM - 2 PM - உலகப் படம் திரையிடல்
இந்த மாதம் உலகப் படம் திரையிடல் பகுதியில் ஐசன்ஸ்டீன் இயக்கத்தில் வெளிவந்த "தி பாட்டில்ஷிப் ஆப் பொடேம்கின்" திரைப்படமும், டெர்ரி க்ரோர்ஜ் இயக்கத்தில் வெளிவந்த"ஹோட்டல் ர்வாண்டா" திரைப்படமும் திரையிடப்படுகிறது.
இத்துடன் ஆர்வலர்களுடன் கலந்துரையாடலும் நடைபெறும்.
3 PM - 7 PM - குறும்பட வட்டம்
முதல் பகுதி: (3 PM-4 PM) - கலைகளை ஆவணமாக்குவோம்.
இந்த மாதம் இலக்கியப் பகுதியில் எழுத்தாளர் வெ. நீலகண்டன் அவர்கள் "கலைகளை ஆவணமாக்குவோம்" என்கிறத் தலைப்பில் தனது கருத்துகளை வாசகர்களுடன் பகிர்ந்துக் கொள்வார்.
இவரைப் பற்றி:
இவரது கவிதைகள் "நாங்களும் சில பூக்களும்" என்ற பெயரில் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. 'கூடாரம்' என்ற பெயரில் இலக்கிய இதழ் நடத்திய அனுபவமும் உண்டு. தமிழின் பிரதான வார இதழில் 2 தொடர் கட்டுரைகள் எழுதியுள்ளார். அந்தக் கட்டுரைகள் நூலாக வரவுள்ளன. இருளர்கள், நரிக்குறவர்கள் உள்ளிட்ட விழிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கைநிலை, அவர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் பற்றி ஆய்வு செய்து வரும் இவர் அது பற்றிய நூலொன்றை விரைவில் வெளியிட இருக்கிறார். தமிழக ஆறுகளின் இயற்கைச்சூழலும், இப்போதைய இழிநிலையும என்றொரு நூலும் தயாராகி வருகிறது. சென்னையின் பிரதான கானா பாடகர்களில் ஒருவரான ' மரணகானா விஜியின்' சர்ச்சைக்குறிய வாழ்க்கை வரலாறை தொகுத்து "சாக்கடை சரித்திரம்" என்ற பெயரில் நூலாக வெளியிட இருக்கிறார்.
சிறந்த வலைப்பதிவர் விருது:
இம்மாதம் சிறந்த பதிவருக்கான விருது பெறுபவர் திரு. நர்சிம் அவர்கள்.இவரது வலைப்பூ. http://www.narsim.in/ தமிழ் ஸ்டுடியோ.காம் சிறந்த பதிவருக்கான விருது வழங்கும் விழா மாதந்தோறும் சிறந்தப் பதிவர் தெரிவு செய்யப்பட்டு வழங்கப்படுகின்றது. விருது வழங்கப்படும் மாதத்திற்கு முந்தைய மாதத்தில் பதிவர் எழுதிய கட்டுரைகள், பதிவுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. |
இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்
இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைப்பட ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் திரு. சக்தி சரவணன் அவர்கள் பங்குபெறுகிறார். குறும்படங்களில் ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் குறித்து மிக நுணுக்கமான பல தகவல்களை வாசகர்கள் அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
இவர் பணியாற்றியுள்ள படங்கள்:
திரு. சக்தி சரவணன் அவர்கள் "பூவே உனக்காக", "சூரிய வம்சம்", "ஆஹா" "திருப்பாச்சி", உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும், சமீபத்தில் வெளிவந்த "சிலம்பாட்டம்" படத்தின் இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.
மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்
இந்த மாதம் திரையிடல் பகுதியில் செல்வி. திவ்யா அவர்கள் இயக்கிய "இருண்டவீடு", திரு. சா.சு. அவர்கள் இயக்கிய "வேண்டுதல்" திரு. எ. என். சரவணன் அவர்கள் இயக்கிய "அறியாமை" ஆகியக் குறும்படங்கள் திரையிடப்படுகின்றன.
மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்:
இம்மாதம் புகழ்பெற்ற திரைப்பட கதாசிரியர் திரு. வியட்நாம் வீடு சுந்தரம் அவர்கள் மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசி அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆச்லோசனைகளும் வழங்க உள்ளார்.
குறும்படங்கள் திரையிடப்பட்ட பின்னர் அதுபற்றிய கலதுரையாடல் நடைபெறும். இயக்குனர் மற்றும் வாசகர்களிடையே நடைபெறும் இக்கலந்துரையாடலில் குறும்படங்களின் நிறைகளும், குறைகளும் அலசப்படும்.
6.30 PM - 7 PM - வாசகர்களின் தேவைகளை பற்றி வாசகர்களே பேசும் பகுதி.
மறக்காமல் வாசகர்கள் தங்கள் சந்தாத் தொகையினை கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். சந்தாத்தொகை ரூபாய் 50 மட்டும்.
மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:
9840698236, 9894422268
Thursday, May 21, 2009
குறும்பட இயக்குனர்களுக்கு ஓர் வாய்ப்பு
குறும்பட இயக்குனர்களே! உங்களிடம் நல்லக் கதைக் களம் இருக்கிறதா? குறும்படங்கள் இயக்க வேண்டும் என்கிற உங்கள் எண்ணத்திற்கு பணம் ஒரு தடையாக உள்ளதா? குறும்பட ஆர்வலர்களுக்கு தொடர்ந்து தன்னால் இயன்ற உதவிகளை செய்து வரும் தமிழ் ஸ்டுடியோ.காமின் அடுத்த முயற்சியாக உங்களுக்கு உதவும் அறிவிப்பு.
தமிழ் ஸ்டுடியோ.காமின் உதவி:
கேமரா மற்றும் படத்தொகுப்பு உதவி.
விபரங்கள்:
இன்றைய நாட்களில் குறும்படத் துறையில் அதிக செலவுப் பிடிக்கும் இரண்டு துறைகள், ஒன்று ஒளிப்பதிவு. இரண்டு படத்தொகுப்பு. இந்த இரண்டு தொழில்நுட்ப உதவிகளையும் தமிழ் ஸ்டுடியோ.காம் உங்களுக்கு இலவசமாக செய்துத் தர முன்வதுள்ளது. இதில் உங்களின் செலவு: நடிகர், நடிகைகளுக்கு கொடுக்க வேண்டியத் தொகை, மற்றும் இதர சிறு சிறு செலவுகள். மிக அதிக செலவாகும் கேமரா மற்றும் எடிட்டிங் சார்ந்த உதவிகள் எங்களிடம் இருந்து நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
எங்களிடம் இருந்து உங்களுக்கு கிடைக்கும் உதவிகள்:
கேமரா:
panasonic GS 330 3CCD Handy Camera with tripod and single light. and camera with UV filter and small wide angle lense.
உங்களிடம் திறமை வாய்ந்த ஒளிப்பதிவாளர் இருக்கும்பட்சத்தில் நீங்களே கேமரா அது சார்ந்த உபகரணங்களை எங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். உங்களுக்கு ஒளிப்பதிவாளர் உதவி தேவைப்படும் பட்சத்தில் ஒளிப்பதிவாளரையும் நாங்களே ஏற்பாடு செய்துத் தருகிறோம்.
படத்தொகுப்பு:
படத்தொகுப்பு மென்பொருள்:
1. Apple i-Movie or
2. A adobe premiere
படத்தொகுப்பு முழுதும் தமிழ் ஸ்டுடியோ.காம் செய்து கொடுக்கும். உங்களிடம் திறமை வாய்ந்த படத்தொகுப்பாளர் இருக்கும்பட்சத்தில் படத்தொகுப்பு ஸ்டுடியோ மற்றும் உபரகரணங்களை எங்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம்
படத்தொகுப்பாளர் இல்லையென்றால் நாங்களே படத்தொகுப்பும் செய்துக் கொடுத்து விடுவோம்.
நீங்கள் செய்யவேண்டியது:
1. உங்கள் கதை மற்றும் திரைக்கதையை கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அல்லது கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சல் அல்லது கொரியரில் அனுப்பி வைக்கலாம்.
2. இதற்கு முன் நீங்கள் குறும்படம் எடுத்திருந்தால் அது பற்றிய தகவல்களையும் உடன் இணைக்க வேண்டும். அதில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரங்களும் தெரிவிக்கப்பட வேண்டும்.
3. உங்கள் குறும்படத்தின் மொத்த செலவு (Budget) தொகையையும் தெரிவிக்க வேண்டும். இதில் கேமரா மற்றும் எடிட்டிங் வேலைகளுக்கும் சேர்த்தே பட்ஜெட் தயாரிக்க வேண்டும்.
4. குறும்படம் எடுக்கவிருக்கும் இடங்கள் பற்றியத் தகல்வல்களும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
நிபந்தனைகள்:
1. எங்களுக்கு வந்து சேரும் படைப்புகளில் இருந்து நடுவர் குழு தெரிவு செய்யும் குறும்பட கதைக்கு மேற்கண்ட உதவிகள் செய்யப்படும். ஒவ்வொரும் மாதமும் ஒருக் குறும்படத்திற்கு மேற்கண்ட உதவிகள் செய்யப்படும். எனவே உங்கள் படைப்புகளை ஒவ்வொரும் மாதமும் நீங்கள் தொடர்ந்து அனுப்பலாம்.
2. ஒரு மாதம் உங்கள் படைப்பு தெரிவு செய்யப்படாவிட்டால் அடுத்த மாதம் நீங்கள் வேறொரு கதையை அனுப்பி வைக்கலாம். ஒரே படைப்பை ஒவ்வொரும் மாதமும் அனுப்பி வைக்கக்கூடாது.
3. கேமரா மற்றும் இதர உபரகரணங்கள் உங்கள் பழுதுபட்டால் பழுதை சரிசெய்து கொடுக்கும் பொறுப்பு உங்களுடையது. ஒருக் குறும்படத்திற்கு அதிக பட்சம் ஐந்து நாட்கள் மட்டுமே கேமரா மற்றும் இதர உபகரணங்கள் கொடுக்கப்படும். ஐந்து நாட்களுக்கு மேல் தேவை ஏற்பட்டால் நடுவர் குழு அதனை தீர்மானிக்கும்.
4. நீங்கள் கதை மற்றும் திரைக்கதை எந்தக் காரணம் கொண்டும் திருப்பி அனுப்ப இயலாது. ஆனால் உங்கள் அனுமதியின்றி வேறொரு வடிவத்திலேயோ அல்லது அதே வடிவிலேயே தமிழ் ஸ்டுடியோ.காம் பயன்படுத்தாது.
5. உங்களுக்கு ஏற்படும் ஐயங்கள் குறித்து அறிந்துக் கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எங்கள்: 9840698236, 9894422268
உங்கள் கதை மற்றும் திரைக்கதைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:thamizhstudio@gmail.com |
அஞ்சல் முகவரி தேவைப்படுமாயின் தொலைபேசி வாயிலாக கேட்டுத் தெரிந்துக்கொள்ளலாம்.
(நினைவிருக்கட்டும்: திரைப்படத்திற்கு உதவி செய்வது குறித்து நாடவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது. இதுக் குறித்த தகவல்களை தொலைபேசியில் பரிமாறிக் கொள்ள இயலாது.)
இந்த உதவிகள் முற்றிலும் இலவசமாக தமிழ் ஸ்டுடியோ.காம் மூலமாக உங்களுக்கு வழங்கப்படுகின்றது.
Monday, May 4, 2009
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் எட்டாவது குறும்பட வட்டம் மற்றும் சிறந்த வலைப்பதிவர் விருது வழங்கும் விழா 04 -05 -09 : 10.45 PM
நாள்: சனிக்கிழமை (09-05-09)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: காலை 10 முதல் இரவு 7 வரை
10 AM - 2 PM - இந்த மாதம் காலை நிகழ்வில் உலகத் திரைப்படங்கள் திரையிடல் நேரத்தில் கவிஞர். வைகை செல்வி அவர்களின் "ஒவ்வொரு சொட்டும்" ஆவணப்பட வெளியீட்டு விழா நடைபெறும். இயக்குனர் திரு. வசந்த் அவர்கள் ஆவணப்படத்தை வெளியிட கல்கி ஆசிரியர் திருமதி. சீதாரவி அவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள்.
3 PM - 7 PM - குறும்பட வட்டம்
முதல் பகுதி: (3 PM-4 PM) - இலக்கியமும் குறும்படங்களும்
இலஇந்த மாதம் இலக்கியப் பகுதியில் எழுத்தாளர் திரு. ந. முருகேசப் பாண்டியன் அவர்கள்"இலக்கியமும் குறும்படங்களும்" என்கிறத் தலைப்பில் தனது கருத்துகளை வாசகர்களுடன் பகிர்ந்துக் கொள்வார். என் இலக்கிய நண்பர்கள் எனும் இவரது நூல் உயிர்மை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கிராமத்து நினைவுகளை உயிர்மை இதழில் தொடர்ந்து எழுதி வருபவர்.
இம்மாதம் சிறந்த பதிவருக்கான விருது பெறுபவர் திரு. முனைவர் மு.இளங்கோவன் அவர்கள். இவரது வலைப்பூ. http://www.muelangovan.blogspot.com/ தமிழ் ஸ்டுடியோ.காம் சிறந்த பதிவருக்கான விருது வழங்கும் விழா மாதந்தோறும் சிறந்தப் பதிவர் தெரிவு செய்யப்பட்டு வழங்கப்படுகின்றது. விருது வழங்கப்படும் மாதத்திற்கு முந்தைய மாதத்தில் பதிவர் எழுதிய கட்டுரைகள், பதிவுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. |
இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்
இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைப்பட படத்தொகுப்பாளர் திரு. சுரேஷ் அர்ஸ்அவர்கள் பங்குபெறுகிறார். குறும்படங்களில் படத்தொகுப்பு குறித்து மிக நுணுக்கமான பலத்த தகவல்களை வாசகர்கள் அவரிடமிருந்து பெறலாம். திரு. சுரேஷ் அர்ஸ் அவர்கள் சமீபத்தில் வெளிவந்த "நான் கடவுள்", "மரியாதை" போன்ற படங்களில் மட்டுமின்றி பல வெற்றிப் படங்களுக்கு படத்தொகுப்பு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்
திரு. பத்மநாபன் அவர்கள் இயக்கிய "வினா", திரு. நித்தி அவர்கள் இயக்கிய "விடியலை நோக்கி" திரு. ஸ்ரீதர் அவர்கள் இயக்கிய "டுலெட்" ஆகியக் குறும்படங்கள் திரையிடப்படுகின்றன.
இம்மாதம் புகழ்பெற்ற தியிப்பட திறனாய்வாளர் திருமதி. பிரசன்னா ராமசாமி அவர்கள் மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசி அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆச்லோசனைகளும் வழங்க உள்ளார்.
குறும்படங்கள் திரையிடப்பட்ட பின்னர் அதுபற்றிய கலதுரையாடல் நடைபெறும். இயக்குனர் மற்றும் வாசகர்களிடையே நடைபெறும் இக்கலந்துரையாடலில் குறும்படங்களின் நிறைகளும், குறைகளும் அலசப்படும்.
6.30 PM - 7 PM - வாசகர்களின் தேவைகளை பற்றி வாசகர்களே பேசும் பகுதி.
மறக்காமல் வாசகர்கள் தங்கள் சந்தாத் தொகையினை கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். சந்தாத்தொகை ரூபாய் 50 மட்டும்.
மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:
9840698236, 9894422268
Sunday, May 3, 2009
சினிமாட்டோ கிராஃபி காமிரா - சி. ஜெ. ராஜ்குமார், ஒளிப்பதிவாளர் நாள்:02-05-09 :11.30 AM
சினிமாக்கலையின் அசையும் காட்சிகளை பதிவு செய்யும் கருவியை சினிமாட்டோ கிராஃப் காமிரா (Cinematograph Camera) பிலிம் காமிரா (Film Camera) என்று அழைக்கப்படுகிறது.
கேமரா வகை படங்களை காண இங்கே சொடுக்கவும். |
கிரேன் வகை படங்களை காண இங்கே சொடுக்கவும். |
![]() | ![]() |
பிலிம் காமிரா அசைவுகளை தொடர் நிழற்படங்களாகவே (Serious of Images) பதிவு செய்யப்படுகிறது.
காமிராவின் முக்கிய பாகங்கள்:
1) பிலிம் மகசின் (Film Magazine)
2) காமிரா அறை (Camera Body)
3) லென்ஸ் (Lens)
4) வியு ஃபைன்டர் (View Finder)
5) டிரைவ் (Drive)
6) மெட் பாக்ஸ் (Matte Box)
பிலிம் காமிராவில் பயணிக்கும் முறை தொடர்ந்து செல்வது போல நமக்கு தோன்றினாலும் பிலிம் பயணிக்கும் தன்மையை நின்று செல்லும் முறை என்று அழைக்கப்படுகிறது. இதை இன்டர்மிடன்ட் மோஷன் என்று அழைக்கப்படுகிறது.
இன்று நடைமுறையில் இருக்கும் காமிராக்கள் வசன உச்சரிப்பு முறைக்கு 1 நொடியில் 24 ப்ரேம்கள் பதிவு செய்கிறது. அந்த 24 ப்ரேம்கள் ஒவ்வொன்றும் பிலிம் கேட் என்ற இடத்தில் கனநொடியில் நின்று விட்டு தான் காட்சியை பதிவு செய்துவிட்டு பின் நகர்கிறது.
பிலிம் மகசின்:
காமிராவுக்கு வெளியே இருக்கும் பிலிம் மகசின் - ஒளி புகாதவாறு அதன் உள்ளே இரண்டு அறைகள் கொண்டது. ஒன்று டேக் - ஆப் (Take-Off) இன்னொன்று டேக் அப் (Take-up) உள்ளே பதிவு செய்யப்படாத (Unexposed) பிலிமை டேக் ஆஃப் (Take-Off) அறையில் வைத்து பிலிம் நுணியை அடுத்த அறையான டேக் அப் சொருக வேண்டும், இங்கே தான் பதிவு செய்யப்பட்ட பிலிம் தங்கும் இடம்.
பிலிம் மகசின் கீழே சுழற்சிப்போல உள்ள பிலிமை மகசின்னோடு காமிரா அறையில் செலுத்த வேண்டும்.
![]() |
காமிரா அறை:
பிலிம்மானது காமிரா அறையில் உள்ளே சுழல வசதியாக ரோலர்களும் மற்றும் ப்ரேம் நகர கோக்கிகள் உள்ளது. காமிரா அறையில் பிலிம்கேட் என்னும் இடத்தில் நின்று காட்சிகள் பதிவாகும். பிலிம் கோக்கி மூலமாக இழுக்கப்பட்டு பிலிம்கேட்டில் நிற்கும்போது பிலிம் அதிர்வுகள் இல்லாமல் இருக்க அச்சமயத்தில் பிலிம்மில் உள்ள துவாரத்தில் ரேஜிஸ்டிரேஷன் பின் இயங்கி, பிலிம் நகரும்போது விடுவித்துக்கொள்ளும்.
காமிரா அறையில் பிலிம் பிலிம்கேட்டில் நின்று பதிவாகும் அதே நேரத்தில் காமிரா சட்டர் திறந்தே இருக்கும் பிலிம் அவ்விடத்தை விட்டு நகரும்போது சட்டர் ஒளியை பிலிம்மில் பதிவாகாதவாறு மூடிக்கொள்ளும். ஆகையால் ஒவ்வொரு ப்ரேம்முக்கும் அடுத்தற்கும் ஓர் கறுப்புக்கோடு இருக்கும்.
![]() |
வியு ஃபைன்டர்:
காட்சிகளை பதிவு செய்யப்படும் முன்னும் செய்யும்போதும் காமிரா வாயிலாக நம் கண்கள் பார்க்கப்படும் பாகம்தான் வியு ஃபைன்டர். காமிரா பெட்டி இடது புறத்தில் அமைந்திருக்கும். வியு ஃபைன்டர் பார்க்கும்போது செவ்வகத்திரை போல இருக்கும். அதிலிருந்துதான் லென்ஸ் மூலமாக போகஸ் செய்வதும், காட்சிகளை பதிவு செய்வதற்கு வியு ஃபைன்டர் மூலமாகவே தான் பார்த்து காமிரா இயக்கப்படுகிறது.
இன்று பெரும்பான்மையான நவீன காமிராக்கள் ரிப்லக்ஸ் வியுஃபைன்டர் தான் பயன்படுத்தப்படுகிறது.
![]() |
காமிராவில் உள்ள சட்டர் கண்ணாடித் தன்மையுடன் 45 டிகிரி ஒளி புகும் பாதையில் பிலிம்மிற்கு முன் வைக்கப்பட்டு அதிலிருந்து நிறப்பிரிகை மூலமாக வியுஃபைன்டரில் காட்சிகள் தெரிய வருகிறது.
டிரைவ் (இயக்கம்):
காமிரா மோட்டார் 12 வோல்ட்டிலிருந்து 24 வோல்ட் மின் சக்தியில் இயக்கப்படுகிறது.
மெட்டி பாக்ஸ் (Matte Box)
லென்ஸ் முன்னர் பில்டர் பொருத்துவதற்கும், லென்ஸ் மீது ஒளிச்சிதறல் ஏற்படாமல் தடுக்கவும் மெட்டி பாக்ஸ் பயன்படுத்தப்படுகிறது.
காமிராவும் திரையிடப்படும் முறைகளும்:
இன்று 35 எம் எம், சூப்பர் 35 எம் எம், 16 எம் எம், சூப்பர் 16, சினிமாஸ்கோப், 70 எம் எம் ஆகிய முறைகளில் ஒளிப்பதிவு செய்யப்படுகிறது.
35 எம் எம்
35 எம் எம் காமிராவும், 35 எம் எம் பிலிம் பயன்படுத்தப்படுகிறது.
16 எம் எம்
16 எம் எம் காமிராவும் 16 எம் எம் பிலிம் பயன்படுத்தப்படுகிறது
சினிமாஸ்கோப் (அகன்ற திரை)
அகன்ற திரை முறையான சினிமாஸ்கோப்பிற்கு 35 எம் எம் காமிராவும், 35 எம் எம் பிலிம் பயன்படுத்தப்படுகிறது. கூடவே அகன்றதிரை முறைக்கு அனமார்ஃபிக் லென்ஸ் பயன்படுத்தப்படுகிறது. அனமார்ஃபிக் லென்ஸ் அகன்ற பார்வையை 35 எம்எம் பிலிம்மில் சுருக்கி பதிவு செய்யும் தன்மைக் கொண்டது.
தியேட்டரில் அனமார்ஃபிக் லென்ஸ் பொருத்தப்பட்ட திரையிடும் கருவியில் திரையிடும்போது சுருக்கப்பட்ட காட்சி அகன்ற பார்வை கொண்ட காட்சியாக விரிந்து திரை முழுவதும் ஆக்கிரமித்து திரையிடப்படுகிறது.
70 எம் எம்
இந்த அகன்ற திரைவடிவ முறைக்கு 65 எம் எம் காமிராவும் 65 எம் எம் பிலிமும் பயன்படுத்தப்படுகிறது.
சூப்பர் 16
சூப்பர் 16 வகை காமிராக்களில் 16 எம் எம் பிலிமே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நாம் அகன்ற திரை வடிவில் திரையிடுதல் முறைக்கு ஏற்றவாறு காமிராவில் பிலிம் கேட்டில் சில மாறுதல் செய்யப்படுகிறது. இம்முறையில் 16 எம்எம் முறையில் பதிவு செய்யப்பட்டாலும் லாப்பில் அகன்ற வடிவில் பிரிண்டிங் செய்யப்படும்
சூப்பர் 35 எம் எம்
இன்று பல ஒளிப்பதிவாளர்கள் மிகவும் விரும்பும் ஒளிப்பதிவு முறை சூப்பர் 35 எம் எம் அகன்ற திரை வடிவத்திற்கு சினிமாஸ்கோப் போல அனமார்ஃபிக் லென்ஸ் பயன்படுத்தப்பட வேண்டியதில்லை. சூப்பர் 35 எம் எம் முறையில் குறுகிய அறைகளில் கூட சிறப்பாக இமேஜ் கம்போஸ் செய்ய முடியும். ஸ்பேரிகல் லென்ஸ் பயன்படுத்தப்படுவது,
சூப்பர் 35 எம் எம் காமிராவில் அகன்ற வடிவத்திற்கு ஏற்ப பிலிம் கேட் மாறுதல் செய்யப்பட்டு 35 எம் எம் பிலிம், பதிவு செய்யப்பட்ட பின் டிஜிட்டல் நிறத் தேர்வு முறையில் அகன்ற வடிவத்திற்கு பிரிண்ட் செய்யும் நவீன முறை இன்று பலரால் பின்பற்றப்படுகிறது.
இந்தியாவில் பிரபலமாக நடைமுறையில் இருக்கும் காமிராக்கள்
ஆரிஃப்பலக்ஸ் (ARRIFlex) ஜெர்மன் நாட்டுத் தயாரிப்பு
35 எம்எம் காமிராக்கள்:
ஆரி (ARRI) III
ஆரி (ARRI) BL4
ஆரி (ARRI) 435
ஆரி (ARRI) 235
ஆரி (ARRI) 535
16 எம் எம் காமிராக்கள்:
ஆரி (ARRI) 16 SR 2
ஆரி (ARRI) 16 SR3
ஆரி (ARRI) 416
இப்பகுதி இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படும்.
தொடர்ந்து பயில்வோம்...நேரடி வகுப்புகள் பற்றி அறிய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 9840698236, 989442268
யாவரும் கேளிர் - பகுதி - 11 -- (ரவிவர்மன், ஒளிப்பதிவாளர்)
செல்லப்பாவை குளிப்பாட்டி கோவணம் உடுத்தி வீட்டின் முன்வாசலில் வறுத்து கொட்டி இருக்கும் மணல் நடுவில் செல்லப்பாவை நிறுத்திய சாமிஅய்யா ஊர்மக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் செல்லப்பா பயத்துடன் சுடுமணலில் நிற்க சாமிஅய்யா பச்சை மூங்கிலை கத்திபோல் சீவி தன் கையில் ஒரு முறை கிழித்துப்பார்க்கிறான். அவன் கைதோல் கிழிக்கப்பட்டு ரத்தம் எட்டிப்பார்க்க அதை உறுதி செய்தவுடன், சாமிஅய்யா செல்லப்பாவின் கைகளை இறுக்ககட்டி அவனை அசையாமல் நிற்கவைக்க அவனும் வறுத்த மணல் சூடு பொறுக்கமுடியாமல் நிற்க்கும் வேளையில் சாமிஅய்யா அந்த மணல் சூடு ஆறுமுன் முடித்துவிடவெண்டும் என்று ஊர்மக்கள் கூர்ந்து கவனிக்கும் வேளையில் சாரதா செல்லப்பாவின் வாயில் ரஸ்தாளி வாழைப்பழத்தை திணித்துவிட்டாள், கண் இமைக்கும் நேரத்தில் எல்லாம் முடிந்துவிட்டது. செல்லப்பாவின் அழுகை சத்தம் மைக் வைத்து மக்களை ஏமாற்ற தொண்டை தண்ணீர் வற்றும் அளவுக்கும், அளவுக்கு அதிகமாக பொய்வாக்குறுதிகளை கக்கும் வேட்பாளர்கள் போல், செல்லப்பா கத்திக்கொண்டு இருக்கும் வேளையில் அவன் கைகளின் கட்டுகள் அவிழ்க்கப்பட்டு அவனின் உடல் முழுவதும் அந்த மூங்கில் கத்தியால் கிழிக்கப்பட்டு ரத்தம், நூரூ மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஓடி நின்றால் வேர்வை உடம்பில் மழைத்துளி போல் சொட்டுமே, அதேபோல் செல்லப்பாவின் உடம்பெல்லாம் ரத்தம் சொட்டுகிறது, அவ்வேளையில் வாயில் தினித்த வாழைப்பழத்தையும் மீறி அவன் வலி பொறுக்கமுடியாமல் அல்றிக்கொண்டு இருக்கும் போதே அவனை சுடும் மணலில் போட்டு புரட்டுகிறான் சாமிஅய்யா.
கிழிந்த பகுதிக்குள் சுடும் மணல் பட்டவுடன் மேலும் செல்லப்பா துடிக்க அதைப்பொருட்படுத்தாமல் அவனை மணலில் இருந்து தூக்கி நிறுத்தி “ ஏய் அரைச்சுவச்ச மஞ்சளை எடுத்துட்டு வாடி” என்று கூற, அவள் “இதோ” என்று மரைக்காப்படியில் உப்பு, மிளகாய் சேர்த்து அரைத்து வைத்திருந்த மஞ்சளை சாரதா, செல்லப்பாவிடம் கொடுக்க அதை வாங்கி ஏற்கனவே மூங்கில் கத்தியால் கிழிக்கப்பட்டு அவனை சுடும் மணலில் வறுத்து எடுத்து அவன் நின்ற போது அவன் உடம்பு நாட்டுத்துப்பாக்கியால் சுடப்பட்டு தப்பித்த சிட்டுகுருவிபோல் துடித்துக்கொண்டு இருக்கும்போதே சாமிஅய்யா கூடி இருந்த கூட்டத்தைப்பார்த்து “ ஏலேய் இரண்டுபேர் வாங்கடா” என்றான்.
கூட்டத்தில் இருந்து இருவர் ஒடி வந்து செல்லப்பாவின் கைகளையும், கால்களையும் இறுக்கி பிடித்துக்கொள்ள சாமிஅய்யா செல்லப்பாவின் உடம்பு முழுவதும் தன் கையில் வைத்திருந்த அரைத்த மஞ்சளை தடவ, மஞ்சலும், காய்ந்த மிளகாயும், உப்பும் அவன் உடம்பில் உள்ள புண்ணில் பட்டவுடன் கரும்பு தோட்டத்தில் தீப்பற்றி எரிவது போல் அவன் உடம்பில் வலிபாடாய்படுத்தியதில் செல்லப்பாவின் வாயில் இருந்த வாழைப்பழம் வெளியே வந்துவிழ, அவன் அலறும் சத்தம் கேட்டு ஊர்மக்கள் அனைவரும் கூடிக்கொண்டிருக்கும் வேளையில் ஸ்டீபன் வாத்தியாரும் அங்கே வந்துவிட்டார். அவரிடம் கொளந்தசாமி “வாத்தியாரே நீங்களாவது சொல்லக்கூடாதா? ஏன் சாமிஅய்யா இந்தப்பாடுபடுத்துறான், அந்த பச்சபுள்ளைய? “ அதைக்கேட்ட வாத்தியார் கொளந்தசாமியிடம் அவர் நல்லதுதான் பண்ணிக்கிட்டு இருக்கார். நாமதான் நாகரீகமா மாறணும்ன்னு நெனச்சு நல்ல விஷயங்களை எல்லாம் தொறத்திக்கிட்டு இருக்கோம் இந்த மாதிரி விஷயம் உங்களுக்கு புதுசா இருக்கும், ஆனா ?...
நரிக்குறவர் இனத்தில் இன்றும் ஒர் வழக்கம் உண்டு. நிறைமாத கர்ப்பிணியை யார் துணையுமின்றி காட்டில் அவளுக்கென்று அமைக்கப்பட்ட குடிசைக்கு அனுப்பிவிடுவார்கள், அவளே தனக்கு தேவையான பணிகளை செய்து தன்னைத்தானே பார்த்துக்கொண்டும், சமைத்து சாப்பிட்டுக்கொண்டும், தனது பிரசவவலியை அடக்கி மனதைரியத்துடன் தானே பிரசவித்ததும் தனது குழந்தையுடன் சென்று தனது கூட்டத்தினருடன் வந்தினைந்து மகிழும் அவளின் மனோ பலத்தை என்னவென்று சொல்வது. பிரசவசக்காலத்தில் தாயும் குழந்தையும் இறந்தாலும் அவளின் உறவினர்கள் இறந்தபின்புதான் சென்று பார்ப்பார்கள்.
ஆப்பிரிக்க காட்டுல வசிக்கிற பழங்குடியினர் இன்றும் தங்களுக்கு குழந்தை பிறந்த சில நிமிடங்களில் குழந்தையை மரப்பானையில் ஐஸ்சை நிறைய நிறப்பி அதனுள் குழந்தையை தலைகீழாக பிடித்து தலையை மட்டும் ஐஸ் தண்ணீருக்குள் மூழ்கடிக்க சில நிமிடங்கள் கழித்து வெளியே எடுப்பார்கள். அதிலிருந்து பிழைத்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு ச்க்தி அதிகமாம். அந்த மாதிரி செய்யும் போது சில குழந்தைகள் இறப்பதும் உண்டாம்.
அந்த கால போர் வீரர்கள் இந்த வைத்தியத்திற்கு உட்பட்டவர்கள் என்று வரலாறு சொல்கிறது. தமிழ் இனத்துக்காக மட்டுமல்ல நம்தமிழ் மொழிக்காகவும் தான் அந்த போராட்டம் என்பது நமக்கு தற்போது அறிவது கடினம். நம்மைவிட்டு வெகுதூரம் சென்றுவிட்டது தூயதமிழ். அதாவது யாழ்ப்பாணம் வழியாக கனடாவுக்கும் மற்றும் பல நாடுகளுக்கும் சென்று கொண்டு இருக்கிறது. (இதைப்பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் விளாவரியாக பேசுவோம்).
புல், பூண்டுகள் கூட அழிந்துபோனால் மீண்டும் முளைத்துவிடுகிறபோது, ஒர் இனமா, அதுவும் நம் தமிழினமா அழிந்துவிடப்போகிறது? வெட்ட, வெட்ட முளைப்பவர்கள் வீரர்கள் அல்லவா! போரும், காதலும் தமிழனின் வாழ்வியல் விழுமியங்கள். போர் இலக்கணங்களை அறியாதவன் தமிழனல்ல என்று புறநானூறு சொல்கிறது. தமிழினத்தை காக்க போரிடுவது குற்றமா? ஈழத்தமிழினத்தை காக்க போரிடும் தமிழினத்தலைவன் தனது இளமை பருவத்தில் மஞ்சள்பத்து வைத்தியத்திற்கு உற்பட்டவர்தான் என்று சொல்ல கேள்வி. இதைப்பற்றி விளக்கமாக பிறகு பார்ப்போம்.....
“களம் கழுமிய படைஇரிய
உளம் கிழித்தவேல் பறித்தோச்சின்னு “ என
தமிழின வீரத்தை புறநானூறு சொல்கிறது.
பத்துவயதுக்கு மேலான ஆண்பிள்ளைகளுக்கு அந்தகாலத்தில் இதுபோல் செய்வது வழக்கமாம். “ஆமாம் கொளந்தசாமி ஏன் இந்த மாதிரி சாமிஅய்யா செல்லப்பாவுக்கு செய்கிறார்ன்னு தெரியுமா? “ தெரியாது வாத்தியாரே. “அதாவது இதுமாதிரி செய்த பிறகு உடல் உறுதியாகும், உடம்புல கத்தியால குத்துனாக்கூட கத்தி உடையுமாம். அதையும் மீறி காயப்பட்டா உடனே ஆறி அந்த காயப்பட்ட இடத்தில சுவடே அறியாதாம். எந்த பூச்சிகடிச்சாலும் விஷம் ஏறாது.”அப்படியா சார் “ நான் என்ன கதையா சொல்றேன்” என்றார் வாத்தியார். இருவரும் சிரிக்க, செல்லப்பாவை வேப்ப இலையையும் அதில் கொஞ்சம் புளிய இலையையும் கலந்து நாலு கையளவு ஆலம்பட்டையை அரைத்து தண்ணீரில் கொதிக்க வைத்து இளம் சூடாகிய பிறகு அந்த தண்ணீரை ஊற்றி சாரதா செல்லப்பாவை குளிப்பாட்ட அவனுக்கும் இதமாக இருக்கிறது. அவனுக்கு உடல் மட்டுமல்ல மனதும் உறுதியாகிறது. குளிப்பாட்டியபின் செல்லப்பாவின் தலையை தன்சேலைமுந்தானையால் துடைத்துக்கொண்டு இருக்கும் போது செல்லப்பாவிடம் சாரதா இதுயெல்லாம் ஒன் உடம்புக்கு நல்லது நீ பட்டனத்துலா படிக்கும் போது கண்டகண்ட தண்ணீயில குளிச்சு கண்டத தின்னாலும் எந்த வியாதியும் வராது... சரியாப்பா...
சரிம்மா... என்றான் செல்லப்பா.