Wednesday, February 24, 2010

பௌர்ணமி இரவு

பௌர்ணமி இரவு
(அரியத் திரைப்படங்கள் திரையிடல் & கலந்தாய்வு நிகழ்வு)

வணக்கம்,

நகரின் சப்தங்கள் அனைத்தும் ஆர்பரித்துப் பின்னர் அடங்கிப் போன பின்பனி இரவு, முழு நிலவு, மனதுக்கு மிக நெருக்கமான அல்லது ஒத்த கருத்துடைய நண்பர்களுடன் செடிகளும், பூக்களும் நிறைந்த தோட்ட வெளியில், புல் தரை மீது அமர்ந்து நாம காணக் கிடைக்காத பல அரியத் திரைப்படங்கள், உலக குறும்படங்கள் மற்றும் நம் நண்பர்கள் உருவாக்கத்தில் வெளிவந்த ஒரு தமிழ் குறும்படம் ஆகியவற்றை, நிலா சோறு உண்டுக் கொண்டே பார்க்கும்போது ஏற்படும் பரவச நிலை பல ஆண்டுகள் செய்யும் தவத்திற்கு சமம். அத்தகைய தவ நிலைக்கு, அல்லது பரவச நிலைக்கு உங்களை அழைத்து செல்ல நாங்கள் தயார். வருவதற்கு நீங்கள் தயாரானால்!


தமிழ் ஸ்டுடியோ.காம் இணையதளத்தின் குறும்பட வட்டம் நிகழ்வு கடந்த பதினேழு மாதங்களாக மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஊடகங்களும், ஆர்வலர்களும் கொடுத்த பேராதரவே இதற்கு காரணம். அதே அளவிற்கான ஆதரவை எதிர்பார்த்து மேலும் ஒரு திரையிடல் நிகழ்வை தமிழ் ஸ்டுடியோ.காம் ஏற்பாடு செய்திருக்கிறது. எப்போதும் வெறும் வார்த்தையளவில் நாம் பேசிக்கொண்டிருக்கும் சில திரைபபடங்கள், விமர்சகர்கள் கொண்டாடும் சில இயக்குனர்களின் காணக்கிடைக்காத அரியத் திரைப்படங்கள், உலக அளவில் புகழ் பெற்ற குறும்படங்கள், உலகின் பல உண்மைகளை வெளிக்கொணர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆவணப்படங்கள், தமிழிலும் முயற்சி செய்கிறோம் என பறைசாற்றும் குறும்படங்கள் போன்றவை இந்த நிகழ்வில் திரையிடப்படும்.

மேலும், தமிழில் குறும்படம் எடுக்க விரும்பும், அல்லது அந்த குறும்படத்தில் பங்கேற்க விரும்பும் அல்லது குறும்பட உதவி வேண்டும் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தங்களுக்குள் குழுவாக பிரிந்து அது பற்றி விவாதிக்கும் நிகழ்வும் இந்த பெவுர்ணமி இரவில் நடைபெறும். தங்கள் மனதுக்குள் இருக்கும் பல்வேரு பிரச்சனைகளால் தாங்கள் உருவாக்க நினைத்த குறும்பட முயற்சியை தள்ளி வைத்த அனைத்து நண்பர்களின் பிரச்சனைகளை ஆராய்ந்து அவர்கள் சிறப்பாக குறும்படம் எடுக்க இந்த நிகழ்வில் வழிநடத்தப்படும்.

உலகப் படங்கள் பற்றியான ஒரு புரிதலை ஏற்படுத்தவும், அதுபற்றி கலந்துரையாடவும், ஒவ்வொரு மாதமும் ஒரு சிறப்பு பார்வையாளர் பௌர்ணமி இரவில் நம்முடன் பங்கேற்பார். ஆர்வலர்கள் அந்த மாதம் பௌர்ணமி இரவில் திரையிடப்படும் படங்களை அந்த சிறப்பு பார்வையாளருடன் சேர்ந்து பார்த்துவிட்டு அந்தப் படம் குறித்து அவருடன் கலந்துரையாடலாம்.

முதல் மாத பௌர்ணமி இரவு நிகழ்வு:

ஞாயிறு, 28-02-2010

இரவு 8 மணிக்கு. நிகழ்வு முடிய இரவு 12.30 மணி ஆகும். ஆர்வலர்களுக்கு உணவு மற்றும் உறங்குமிடம் முதலியவை ஏற்பாடு செய்யப்படும். ஆனால் அதற்காக ஆர்வலர்கள் இருபது ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

இடம்: எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024 (லிபர்ட்டி திரையரங்கம் எதிரில்)


திரையிடப்படும் படங்கள்:

உலக அளவில் அனைவரும் பார்க்க வேண்டிய அரிய திரைப்படம்:

உலக அளவில் மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட குறும்படம்: லிட்டில் டெர்ரரிஸ்ட்
லிட்டில் டெர்ரரிஸ்ட் குறும்படம் குறித்து மேலும் அறிந்துக் கொள்ள:http://www.imdb.com/title/tt0425200/plotsummary

தமிழில் எடுக்கப்பட்ட குறும்படம்: என் வீட்டின் முற்றத்தில் ஒரு மாமரம்
என் வீட்டின் முற்றத்தில் ஒரு மாமரம் குறும்படத்தை பற்றி மேலும் அறிந்து கொள்ள:http://www.imdb.com/title/tt1402517/

இந்த மாதத்திற்கான சிறப்பு பார்வையாளர், மற்றும் முதல் மாத நிகழ்வை தொடங்கி வைப்பவர்:திரைப்பட நடிகர், வி. டி. எம். சார்லி M.A., M.Phil.

(குறிப்பு: பௌர்ணமி இரவு நிகழ்வில் யார் வேண்டுமானாலும் கலந்துக் கொள்ளலாம். ஆனால் உணவு மற்றும் உறங்குமிடம் ஏற்பாடு செய்யவேண்டியிருப்பதால் முன் பதிவு செய்துக் கொள்ளவும். முன் பதிவு செய்யாதவர்களுக்கு உறுதியாக அனுமதி கிடையாது.)

முன்பதிவு செய்துக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 9840698236, 9894422268

Thursday, February 11, 2010

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 17 வது குறும்பட வட்டம். (பதிவு எண்: 475/2009)


தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 17 வது குறும்பட வட்டம். (பதிவு எண்: 475/2009)

நாள்: சனிக்கிழமை (13-02-2010)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: மாலை மூன்று மணி (3 மணியளவில்)

முதல் பகுதி: (3 PM-4 PM) - இலக்கியம்

இந்த மாதம் இலக்கியப் பகுதியில் நாடகவியலாளர் திரு. வெளி ரெங்கராஜன் அவர்கள் கலந்துக் கொள்கிறார். தமிழ் நாடகத் துறை வளர்ச்சி மற்றும், அதன் வரலாறு குறித்து பேசவிருக்கிறார்.

இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்

இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைப்பட இயக்குனர், திரு. பண்டி சரோஜ்குமார் அவர்கள் பங்குபெறுகிறார். குறும்படங்களில் இயக்கம் உள்ளிட்ட பல்வேறுபட்ட தனது அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்துக் கொள்கிறார். இயக்கம் குறித்தான நுணுக்கங்களையும் வாசகர்களுக்கு பயிற்றுவிப்பார். வாசகர்களும் இயக்கம் மற்றும் இதத் தொழில்நுட்பத் துறை சார்ந்த தங்கள் ஐயங்களை அவரிடம் கேட்டு விடைப் பெற்றுக் கொள்ளலாம்.

பண்டி சரோஜ்குமார் அவர்கள் சமீபத்தில், கிஷோர் நடித்து வெளியான போர்க்களம் திரைப்படத்தின் இயக்குனர் ஆவார்.

மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்

இந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள்.

குறும்படத்தின் பெயர்இயக்குனர் பெயர்கால அளவு
சுவடுகள்ரமேஷ்08 நிமிடங்கள்
நடந்த கதைபொன்.சுதா
17 நிமிடங்கள்

மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்:

இந்தப் பகுதிக்கு இந்த மாதம் திரைப்பட ஒளிப்பதிவாளர் திரு. விஜய் மில்டன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசி ஆராய்ந்து அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்க உள்ளார்.

விஜய் மில்டன் அவர்கள் "சாமுராய்", "காதல்", "காதலில் விழுந்தேன்" ஆகியத் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் ஆவார். மேலும், "அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது" திரைப்படத்தின் இயக்குனர் ஆவார்.

இந்த மாதம் முதல் மூன்று தமிழ்க் குறும்படங்களுடன் ஒரு சர்வதேச குறும்படமும் திரையிடப்படும். எப்படி சர்வதேச அளவில் குறும்படங்கள் வடிவமைக்கப்படுகின்றன என்பதை, அனைவரும் குறிப்பாக கிராமப்புறத்தில் இருந்து வரும் ஆர்வலர்கள் தெரிந்துக்கொள்ள இந்தக் குறும்படங்கள் உதவி புரியும். அந்த வகையில் இந்த மாதம் திரையிடப்படும் சர்வதேச குறும்படம், Adam Davidson இயக்கிய "The Lunch Date". இந்தக் குறும்படம் 1991 ஆம் வருடத்தின் சிறந்த குறும்படத்திற்கான ஆஸ்கார் விருதினை வென்ற குறும்படமாகும்.


மேலும் இந்த மாதம் முதல் அரங்கில் குறும்பட விற்பனையும் நடைபெறும். அனைவரும் குறும்பட இயக்குனர்களை / தயாரிப்பாளர்களை ஊக்கப்படுத்த குறும்படங்களை விலைக்கு வாங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.


மறக்காமல் வாசகர்கள் தங்கள் சந்தாத் தொகையினை கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். சந்தாத்தொகை ரூபாய் 50 மட்டும்.

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:
9840698236, 9894422268



Thursday, January 7, 2010

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 16 வது குறும்பட வட்டம். (பதிவு எண்: 475/2009)


தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 16 வது குறும்பட வட்டம். (பதிவு எண்: 475/2009)

நாள்: சனிக்கிழமை (09-01-2010)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: மாலை மூன்று மணி (3 மணியளவில்)


முதல் பகுதி: (3 PM-4 PM) - விழிப்புணர்வு -

இந்த மாதம் இலக்கியம் பகுதிக்கு பதிலாக, ஐந்தாவது தூண் அமைப்பினரின் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்தான வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெறும்.

அடுத்த மாதம் இலக்கியம் பகுதி நடைபெறும்.. இலக்கிய ஆர்வலர்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்

இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைப்பட இயக்குனர், திருமிகு பிரியா அவர்கள் பங்குபெறுகிறார். குறும்படங்களில் இயக்கம் உள்ளிட்ட பல்வேறுபட்ட தனது அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்துக் கொள்கிறார். இயக்கம் குறித்தான நுணுக்கங்களையும் வாசகர்களுக்கு பயிற்றுவிப்பார். வாசகர்களும் இயக்கம் மற்றும் இதத் தொழில்நுட்பத் துறை சார்ந்த தங்கள் ஐயங்களை அவரிடம் கேட்டு விடைப் பெற்றுக் கொள்ளலாம்.

பிரியா அவர்கள் "கண்ட நாள் முதல்", "கண்ணாமூச்சி ஏனடா" போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் மணிரத்னம் அவர்களிடம் உதவியாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்

இந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள்

குறும்படத்தின் பெயர்இயக்குனர் பெயர்கால அளவு
வணங்குகிறேன் தாயேதேவன்15 நிமிடங்கள்
நிழல்களின் நீட்ச்சியாய்சக்தி பாரதி
15 நிமிடங்கள்
வாக்குமூலம்சுப்பு30 நிமிடங்கள்

மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்:

இந்தப் பகுதிக்கு இந்த மாதம் திரைப்பட ஒளிப்பதிவாளர் திரு. ராஜேஷ் யாதவ் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசி ஆராய்ந்து அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்க உள்ளார்.

ராஜேஷ் யாதவ் அவர்கள் "ராமன் தேடிய சீதை", "பொக்கிஷம்" ஆகியத் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் ஆவார்.

மறக்காமல் வாசகர்கள் தங்கள் சந்தாத் தொகையினை கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். சந்தாத்தொகை ரூபாய் 50 மட்டும்.

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:

9840698236, 9894422268


Wednesday, January 6, 2010

குறும்பட இயக்குனர்களுக்கு ஓர் வாய்ப்பு


குறும்பட இயக்குனர்களே! உங்களிடம் நல்லக் கதைக் களம் இருக்கிறதா? குறும்படங்கள் இயக்க வேண்டும் என்கிற உங்கள் எண்ணத்திற்கு பணம் ஒரு தடையாக உள்ளதா? குறும்பட ஆர்வலர்களுக்கு தொடர்ந்து தன்னால் இயன்ற உதவிகளை செய்து வரும் தமிழ் ஸ்டுடியோ.காமின் அடுத்த முயற்சியாக உங்களுக்கு உதவும் அறிவிப்பு.

தமிழ் ஸ்டுடியோ.காமின் உதவி:

கேமரா மற்றும் படத்தொகுப்பு உதவி.

விபரங்கள்:

இன்றைய நாட்களில் குறும்படத் துறையில் அதிக செலவுப் பிடிக்கும் இரண்டு துறைகள், ஒன்று ஒளிப்பதிவு. இரண்டு படத்தொகுப்பு. இந்த இரண்டு தொழில்நுட்ப உதவிகளையும் தமிழ் ஸ்டுடியோ.காம் உங்களுக்கு இலவசமாக செய்துத் தர முன்வதுள்ளது. இதில் உங்களின் செலவு: நடிகர், நடிகைகளுக்கு கொடுக்க வேண்டியத் தொகை, மற்றும் இதர சிறு சிறு செலவுகள். மிக அதிக செலவாகும் கேமரா மற்றும் எடிட்டிங் சார்ந்த உதவிகள் எங்களிடம் இருந்து நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

எங்களிடம் இருந்து உங்களுக்கு கிடைக்கும் உதவிகள்:

கேமரா:

panasonic GS 330 3CCD Handy Camera with tripod and single light. and camera with UV filter and small wide angle lense.

உங்களிடம் திறமை வாய்ந்த ஒளிப்பதிவாளர் இருக்கும்பட்சத்தில் நீங்களே கேமரா மற்றும் அது சார்ந்த உபகரணங்களை எங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். உங்களுக்கு ஒளிப்பதிவாளர் உதவி தேவைப்படும் பட்சத்தில் ஒளிப்பதிவாளரையும் நாங்களே ஏற்பாடு செய்துத் தருகிறோம்.

படத்தொகுப்பு:

படத்தொகுப்பு மென்பொருள்:

1. Apple i-Movie or

2. A adobe premiere

படத்தொகுப்பு முழுதும் தமிழ் ஸ்டுடியோ.காம் செய்து கொடுக்கும். உங்களிடம் திறமை வாய்ந்த படத்தொகுப்பாளர் இருக்கும்பட்சத்தில் படத்தொகுப்பு ஸ்டுடியோ மற்றும் உபரகரணங்களை எங்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம்

படத்தொகுப்பாளர் இல்லையென்றால் நாங்களே படத்தொகுப்பும் செய்துக் கொடுத்து விடுவோம்.

நீங்கள் செய்யவேண்டியது:

1. உங்கள் கதை மற்றும் திரைக்கதையை கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அல்லது கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சல் அல்லது கொரியரில் அனுப்பி வைக்கலாம்.


2. இதற்கு முன் நீங்கள் குறும்படம் எடுத்திருந்தால் அது பற்றிய தகவல்களையும் உடன் இணைக்க வேண்டும். அதில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரங்களும் தெரிவிக்கப்பட வேண்டும்.

3. உங்கள் குறும்படத்தின் மொத்த செலவு (Budget) தொகையையும் தெரிவிக்க வேண்டும். இதில் கேமரா மற்றும் எடிட்டிங் வேலைகளுக்கும் சேர்த்தே பட்ஜெட் தயாரிக்க வேண்டும்.

4. குறும்படம் எடுக்கவிருக்கும் இடங்கள் பற்றியத் தகல்வல்களும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

நிபந்தனைகள்:

1. எங்களுக்கு வந்து சேரும் படைப்புகளில் இருந்து நடுவர் குழு தெரிவு செய்யும் குறும்பட கதைக்கு மேற்கண்ட உதவிகள் செய்யப்படும். ஒவ்வொரும் மாதமும் ஒருக் குறும்படத்திற்கு மேற்கண்ட உதவிகள் செய்யப்படும். எனவே உங்கள் படைப்புகளை ஒவ்வொரும் மாதமும் நீங்கள் தொடர்ந்து அனுப்பலாம்.

2. ஒரு மாதம் உங்கள் படைப்பு தெரிவு செய்யப்படாவிட்டால் அடுத்த மாதம் நீங்கள் வேறொரு கதையை அனுப்பி வைக்கலாம். ஒரே படைப்பை ஒவ்வொரும் மாதமும் அனுப்பி வைக்கக்கூடாது.

3. கேமரா மற்றும் இதர உபரகரணங்கள் பழுதுபட்டால் பழுதை சரிசெய்து கொடுக்கும் பொறுப்பு உங்களுடையது. ஒருக் குறும்படத்திற்கு அதிக பட்சம் ஐந்து நாட்கள் மட்டுமே கேமரா மற்றும் இதர உபகரணங்கள் கொடுக்கப்படும். ஐந்து நாட்களுக்கு மேல் தேவை ஏற்பட்டால் நடுவர் குழு அதனை தீர்மானிக்கும்.

4. நீங்கள் அனுப்பும் கதை மற்றும் திரைக்கதை எந்தக் காரணம் கொண்டும் திருப்பி அனுப்ப இயலாது. ஆனால் உங்கள் அனுமதியின்றி வேறொரு வடிவத்திலேயோ அல்லது அதே வடிவிலேயே தமிழ் ஸ்டுடியோ.காம் அதனை பயன்படுத்தாது.

5. உங்களுக்கு ஏற்படும் ஐயங்கள் குறித்து அறிந்துக் கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 9840698236, 9894422268

உங்கள் கதை மற்றும் திரைக்கதைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:thamizhstudio@gmail.com



அஞ்சல் முகவரி தேவைப்படுமாயின் தொலைபேசி வாயிலாக கேட்டுத் தெரிந்துக்கொள்ளலாம்.

(நினைவிருக்கட்டும்: திரைப்படத்திற்கு உதவி செய்வது குறித்து நாடவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது. இதுக் குறித்த தகவல்களை தொலைபேசியில் பரிமாறிக் கொள்ள இயலாது.)

இந்த உதவிகள் முற்றிலும் இலவசமாக தமிழ் ஸ்டுடியோ.காம் மூலமாக உங்களுக்கு வழங்கப்படுகின்றது.



குறும்படங்கள் விற்பனை செய்ய / குறும்படங்கள் வாங்க..


குறும்படங்கள் விற்பனை செய்ய / குறும்படங்கள் வாங்க..

வணக்கம் குறும்பட ஆர்வலர்களே..

தமிழ் ஸ்டுடியோ.காம் எதிர்வரும் பிப்ரவரி மாதம் முதல் குறும்படங்களை நேரடியாக விற்பனை செய்ய இருக்கிறது. எந்த வித இலாப நோக்கமுமில்லாத, இந்த விற்பனைப் பிரிவு தமிழ் ஸ்டுடியோவின் அலுவலகம் அமைந்துள்ள கோடம்பாக்கம் பகுதியில் செயல்படவிருக்கிறது.

எனவே நீங்கள் எடுத்துள்ள குறும்படங்களின் கரு, தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள், ஒரு குறும்படத்தின் விலை போன்ற விபரங்களை எழுதி, குறைந்த பட்சம் இருபது எண்ணிக்கையில் குறும்படங்களின் CD அல்லது DVD க்களை தமிழ் ஸ்டுடியோ அலுவலகத்தில் நேரில் கொடுத்துவிட்டு செல்லுங்கள். விற்கப்படும் ஒவ்வொரு CD அல்லது DVD க்கும் சார்ந்த எல்லா விபரங்களும் அந்தக் குறும்படத்தின் இயக்குனர் அல்லது தயாரிப்பாளருக்கு தெரிவிக்கப்படும். ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும் (இறுதி சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை) விற்கப்பட்ட அனைத்து CD அல்லது DVD களுக்குமான தொகை அதன் உரிமையாளரிடம் சேர்ப்பிக்கப்படும்.

இதுபற்றிய மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும்: 9840698236, 9894422268.

தொலைபேசியில் முன் அனுமதி பெற்று உங்கள் படங்களை தமிழ் ஸ்டுடியோ.காம் அலுவலகத்தில் சேர்க்கவும்.

அலுவலக முகவரி:

எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024



Tuesday, December 29, 2009

குறும்பட ஆலோசனை


உங்கள் குறும்படங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்க, தயாரிப்பு செலவு, உபகரணங்கள் (கேமரா, லைட்டிங், படத்தொகுப்பு, இசைக் கோர்ப்பு போன்ற தொழில்நுட்ப உதவிகள் குறித்து தேவையை தெரிவிக்க, மேலும் சந்தைப்படுத்துதல் போன்ற குறும்படங்கள் சார்ந்த உங்கள் அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கீழ்க்கண்ட முகவரியில் ஆலோசனை பெறலாம். (முன் அனுமதி பெற்று சந்திக்கவும்)

நேரம்: காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை

இச்சேவை முற்றிலும் இலவசம்

எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024

தொலைபேசி: 9840698236, 9894422268


Wednesday, September 16, 2009

தங்க மீன்கள் முத்தமிடும் கால்கள்

தங்க மீன்கள் முத்தமிடும் கால்கள்

A Film by
Year --
Run time : --


“துடிக்கிற ஆட்டத்தை திரையிலே பார்த்திருக்கேன்,
விசில் அடிக்கிற கூட்டத்தில் தரையிலே ஆடிருக்கேன்”
- இளையராஜா “ நாயகனில்

திரைப்படங்களை திரையரங்குகளில் தான் மக்கள் காலகாலமாய் கண்டு களித்து வந்திருக்கின்றனர். இப்போது அந்த அனுபவமே ஒரு பழங்கதையாய் மாறிவிட்டது போலிருக்கிறது. வீட்டுக்கு வீடு வந்துவிட்ட சின்னத்திரை, திரைப்படம் பார்க்கும் அனுபவத்திற்கே ஒரு மாற்றத்தை கொண்டுவந்துவிட்டது. திரைப்படங்கள் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில், திரையில் பாய்ந்து வந்த புகைவண்டியை கண்டு பயந்து ரசிகர்கள் வெளியே ஓடினார்களாம். மௌனப்பட காலத்தில் ஒவ்வொரு ரீல் மாற்றும்போதும், நாட்டிய நிகழ்ச்சிகளும் மாஜிக் நிகழ்ச்சிகளும், திரைக்கதையை விளக்கிக் கூறும் கலைஞர்களின் உரை நிகழ்ச்சிகளும் நடைபெற்றனவாம்.

பின்னர் பேசும் படங்கள் வந்தபோது பெற்ற அனுபவங்கள் வேறு வகையானவை. சினிமாஸ்கோப், 70 எம் எம், 3டி, சினிரமா, ஸ்டீரியோபோனிக் ஒலி என்று புதுப்புது கண்டுபிடிப்புகள், ரசிகர்களை எப்போதும் வியப்பிலாழ்த்தி வந்திருக்கின்றன. தந்திரக்காட்சிகளும், இரட்டை வேடக்காட்சிகளும் இப்போது காணக்கிடைக்கும் டிஜிடல் சாகசங்களும் எப்போதும் ரசிகர்களை தியேட்டருக்கு இழுத்துக்கொண்டேதான் இருக்கும்.

சின்னத்திரையின் ஆதிக்கத்திற்கு முன்னிருந்த அந்தக்காலத்தை நினைத்துப் பார்ப்போம். இப்போதைய கறுப்பு மார்க்கெட்டில் டிக்கட் விற்று காசு பார்க்கும் ரசிகர் மன்றங்கள் அப்போது இல்லை. முழு ஈடுபாட்டோடு கைக்காசை செலவழித்து தோரணம் கட்டி விழா எடுத்து அப்போதைய கதாநாயகர்களின் நிலையை உயர வைத்த அப்பாவிகள்தான் அப்போது இருந்தனர். பின்னர் அரசியல் உள்ளே புகுந்து ரசிகர் மன்றங்களை அதிகார பீட ஏணிகளாக மாற்றியது அனைவரும் அறிந்த கதைதான். இப்போது கூட, அரசியலில் நுழைய இருக்கும் ஒரு நடிகருக்கு, தினமும் ஒரு “நற்பணி மன்றம்” ஏற்படுத்திக் கொண்டுருக்கும், அரசியல் கனவில் திளைக்கும் புத்திசாலி இளைஞர்களை உங்களைச் சுற்றிலும் பார்க்கலாம். வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை என்ற அரசியல் காஸ்ட்டியூமில் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட இவர்களை, மாலை முரசிலோ, மலரிலோ கட்டாயம் பார்த்திருக்கலாம். அப்போது புதுத்திரைப்படம் திரையிடப்படும் திரையரங்கிற்கு வெளியே முதல் நாளிரவே நூற்றுக்கணக்கில் சைக்கிள்கள் வரிசையில் அணிவகுத்து நிற்கும். கோவைப் பகுதியில் சைக்கிள் டிக்கட் என்று ஒரு பிரிவே இருந்தது. பாட்டுப் புத்தகங்கள் விற்பனை கொடி கட்டி பறக்கும். கைகளால் வரையப்பட்ட பேனர்களையும், கட் அவுட்களையும் ஓவியக்கூடத்திற்கே சென்று பார்த்து மகிழ்ந்தினர் ரசிகர்கள். நிரம்பி வழியும் தியேட்டரில் படம் பார்ப்பதே உற்சாக அனுபவம். அதுவும் தரை டிக்கெட் என்று அழைக்கப்பட்ட கீழ் வகுப்பில் மகிழ்ச்சியும் ஆரவாரமும் கொடி கட்டிப் பறக்கும். முதலாளிகளே பிளாக்கில் டிக்ககெட் விற்கும் ஈனப்பிழைப்பும், டெலிபோன் புக்கிங் என்ற பெயரில் டிக்கெட்டிற்கு ஐந்து ரூபாய் கூட்டி விற்கும் கொள்ளையும் இருந்ததில்லை. சுத்தம் செய்யப்படாத கழிவறைகளும், காண்டீன் கொள்ளைகளும் உடைந்த நாற்காலிகளும், பழைய கார்பனில் மங்கலாக படம் காட்டும் தொழில் நுட்பமும் இருந்ததேயில்லை.

நல்ல, மற்றும் பிறமொழிப்படங்களை காட்டுவதற்காக சனி, ஞாயிறுகளில் காலைக்காட்சிகளும் இருந்தன. சில சமயம் குறைந்த கட்டண காட்சிகளும் இருந்தன. அப்போது தினசரி மூன்று காட்சிகள் தானே. சாந்தாராம், ராஜ்கபூர் படங்களையெல்லாம் இந்த காலைக்காட்சிகளில் தான் நிறைய ரசிகர்கள் பார்த்தனர். எழுபதுகளில் மாணவப் பருவத்தில் சத்யஜித்ராய் படங்களை காலைக்காட்சிகளில் சென்னை கிருஷ்ணவேணி தியேட்டரிலும், கலைவாணர் அரங்கிலும் நிறைய பார்த்திருக்கிறேன்.

கோவை ஸ்ரீபதி தியேட்டரிலும் சில மாதங்கள் தினமும் இன்டர் ஷோ என்ற பெயரில் இரவு 8 மணிக்கு ஐரோப்பிய திரைப்படங்களை திரையிட்டு த்ரூபோ, ஃபாஸ்பைண்டர், ஜானுஸ்ஸி, போன்ற மேதைகளை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.

ஃபிலிம் சொசைட்டிகள் என்று அழைக்கப்பட்ட திரைப்படக் கழகங்களை நிறைய நகரங்களில் அறிவு ஜீவிகள் உருவாக்கி நல்ல திரைப்படங்களை சிறய குழுக்களுக்கு திரையிட்டு விவாதங்களையும் நடத்தி விழிப்புணர்ச்சி ஏற்படுத்தலாயினர். மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் பரவலாக சினிமா ரசனையை உயர்த்திய இந்தக் குழுக்கள் பின்னர் தமிழகத்திலும் பரவினர். திரையரங்குகளில் திரையிட வசதியற்ற 16 எம் எம் படச்சுருளைக் கொண்டு தான் திரையிடல்கள் நடைபெறும். பெரும் பாலும் ஒரு சிறிய அறையிலோ, அரங்கிலோதான் இந்நிகழ்ச்சி நடைபெறும். காற்றோட்டமில்லாத அறைகள், அமர வசதியற்ற நாற்காலிகள், சப் டைட்டிலை மறைக்கும் முன்னால் அமர்த்திருக்கும் சக ஜீவிகளின் தலைகள், என்று இப்படியும் அரங்குகளை, தேடித் தேடி திரைப்படங்களை திரையிட்டனர். ஆனால் பொருளாதார ஆதரவற்றதனால் நிறைய கழகங்கள் காணமல் போயின. ஆனாலும் மறக்க இயலா அனுபவத்தையும் திரைப்பட...

To read more please click.. www.thamizhstudio.com