http://thamizhstudio.com/kalam_kadaloor_thane.php
கடலூர் மக்களுக்கு உதவுங்கள்
வணக்கம் நண்பர்களே,
பொது தளத்தில் இயங்கும் அனைவருக்கும், சமூக பொறுப்பும், கடமைகளும் இருக்க வேண்டும். அந்த வகையில் கடலூரில் தானே புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு உதவ தமிழ் ஸ்டுடியோ முனைந்துள்ளது. இதில் வாசகர்களாகிய உங்கள் பங்கு மிக அவசியம்.
இயன்ற வாசகர்கள், தன்னார்வலர்கள், வலைப்பதிவர்கள், பெரிய பதவிகளில் இருக்கும் அனைவரும் இந்த உதவும் இயக்கத்திற்கு உங்கள் பங்களிப்பை செலுத்த வேண்டும் என்று அன்புடன் கோருகிறேன்.
ஒரு ரூபாயாக இருந்தாலும் கூட உங்கள் பங்களிப்பு மட்டுமே முக்கியம். இந்த பணம் கடலூரில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பல்வேறு வகைகளில் வழங்கப்படவிருக்கிறது. என்னதான் அரசாங்கம் செடிக் கன்றுகள் கொடுத்து, ஒரு வருடம் பராமரிப்பு செய்யும் செலவையும் கவனித்துக் கொண்டாலும், கடலூர் விவசாயிகளின் இழப்பை ஈடு கட்ட முடியாது. எனவே இதில் அனைவரும் தங்களாலான பங்களிப்பை செய்வது அவசியம். நீங்கள் ஒரு முறை கடலூர் சென்று பாருங்கள். உங்களுக்கு அவர்களின் நிலை புரியும்.
ஓரளவிற்கு பணம் சேர்ந்த பின்னர் கடலூர் சென்று அங்கு விவசாயிகளுக்கு இந்த பணம் பிரித்துக் கொடுக்கப்படும். இந்த நிகழ்வில் நேரில் நீங்களும் கலந்துக் கொள்ளலாம். பணம் கொடுத்தவர்களின் பட்டியல் தமிழ் ஸ்டுடியோ இணையதளத்தில் வழங்கப்படும்.
பணத்தை நேரில் கொடுக்க விரும்புபவர்கள் தமிழ் ஸ்டுடியோ அலுவலகத்தில் காலை பத்து மணி முதல் மாலை ஆறு மணி வரை கொடுக்கலாம்
இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம் (தியேட்டர் லேப்), டிஸ்கவரி புக் பேலஸ் மாடியில், புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில், கே.கே. நகர்.
வங்கியின் மூலம் பணம் செலுத்த:
வங்கியின் பெயர்: ICICI வங்கி
வங்கி கணக்கு எண்: 000101564346
கணக்கு வைத்திருப்பவர் பெயர்: அருண். மோ (Arun M.)
கிளை: செனோடப் சாலை, சென்னை (Cenotaph Road, Chennai)
யாராவது கொடுப்பார்கள் என்று நினைக்காமல் நீங்கள் உங்கள் பங்கை மறக்காமல் கொடுத்து உதவுங்கள். ஒவ்வொருவரின் பங்களிப்பும் நிச்சயம் தேவை.
பணம் செலுத்திய பின் உங்கள் பெயர், முகவரி, அலைபேசி ஏன் ஆகியவற்றை கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
thamizhstudio@gmail.com
http://thamizhstudio.com/kalam_kadaloor_thane.php
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment